மருத்துவமனையின் அலட்சியப்போக்கு – தாயின் மார்பிலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

மருத்துவமனையின் அலட்சியத்தால் தாயின் மார்பிலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உடல்நலம் குன்றிய தங்களுடைய 5 வயது மகன் ரிஷியை சஞ்சய் பாந்த்ரே மற்றும் அவரது குடும்பத்தார் ஜபால்பூரிலுள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் ஒரு மருத்துவர் அல்லது சுகாதார ஊழியர்கள்கூட சிறுவனுக்கு என்ன பிரச்னை என்று ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதனால் மருத்துவமனை வளாகத்தில் வைத்தே பெற்றோர்கள் கண்முன் தாயின் மார்பில் சாய்ந்தபடி உயிரிழந்தார் சிறுவன் ரிஷி. … Read more

ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா: கேரளாவில் நிறைவேற்றம்!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது. இந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீதுமுடிவெடுக்காமல் வழக்கம் போல் அவர் தாமதித்து வருகிறார். துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதமும் எழுதியுள்ளார். இந்த மசோதா மூலம், துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில், தமிழக அரசே நியமிக்கும். இதுவரை … Read more

62 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் ஆதரவு; டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி..!

டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 62 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் கலந்து கொண்டு கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவே தொடர்ந்து பல இடையூறுகளை பாஜக செய்வதாகவும் அர்விந்த் … Read more

பிள்ளையாருக்கு ஆதார் கார்டு: அட்ரெஸ் என்ன தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் ஆவணியில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெரு முனைகளிலும், சாலைகளின் முக்கிய சந்திப்புகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக … Read more

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல்; 19% அதிகரிப்பு.! ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம். தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்தாண்டு ஆகஸ்ட்டில் 19% அதிகரித்து ரூ.8,386 கோடியானது என தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூலும் … Read more

கர்நாடகா: மடாதிபதி மீது பாலியல் புகார் – 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கர்நாடகா: மடாதிபதி மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில், 7 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயதுடைய 2 மாணவிகளை … Read more

மீண்டும் பழைய கலால் வரி கொள்கை; இனி அரசே மது விற்பனை செய்யும்

புது டெல்லி: இன்று (வியாழன்) முதல் தேசியத் தலைநகரில் பழைய கலால் கொள்கை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தனியார் விற்பனையாளர்கள் மதுபானக் கடைகள் நேற்றுடன் மூடப்பட்டன. இனி டெல்லி அரசாங்கமே மதுவிற்பனையை மேற்கொள்ளும். மேலும் தனியார் மது விற்பனை கடைகள், அரசு மது விற்பனை நிலையங்களால் மாற்றப்படும். தற்போது டெல்லி நகரில் 300 மதுபான கடைகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலால் துறை கூறியுள்ளது. இந்த கடைகளில் சுமார் 240 மது கடைகள் முதல் நாளில் … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..!

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை இந்திய அணி வீழ்த்தியது. 4-வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹாங்காங் அணி இந்திய அணியை முதலில் ஆட பணித்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 59ரன்களும் சூர்யகுமார் யாதவ் 68ரன்களும் எடுத்தனர். ஹாங்காங் அணி 20ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் … Read more

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு மதரசா பள்ளி இடிப்பு: அசாமில் அதிரடி

கவுகாத்தி: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக அசாமில் செயல்பட்டு வந்த மதரசா பள்ளி இடிக்கப்பட்டது. அல்-கொய்தா, அன்சாருல் பங்களா தீம் என்ற ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக, அசாம் மாநிலம், போங்கைகான் மாவட்டத்தில் உள்ள மதரசா பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அன்சாருல் பங்களா அணியின் 2 வங்கதேச தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களுக்கு இவர் கடந்த 4 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்தது வந்தது தெரியவந்தது. இதையடுத்து,  வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத … Read more

உயிரிழந்த நடிகை சோனாலி போகத்தின் உடலில் 46 இடங்களில் காயம் இருப்பதாக புதிய தகவல்!

மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்ட பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத்தின் உடலில் 46 இடங்களில் காயங்கள் இருந்ததாக தகவல் வெளியானது. மர்மமான முறையில் சோனாலி இறந்ததும் அவர் உடல் கோவாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அவர் உடலுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வு சோதனையின் போது இந்த காயங்கள் பற்றி ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் போதைப் பொருள் உட்கொண்டாரா என மருத்துவர்கள் நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். Source link