தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் மனோஜித் மிஸ்ரா, அவரது நண்பர்கள் ஜைப் அகமது, மிரமித் முகர்ஜி, கல்லூரியின் பாதுகாவலர் பினாகி பானர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு குறித்து கொல்கத்தா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில், பிரதான எதிரி மனோஜித் மிஸ்ரா, சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. மானபங்கம், திருட்டு, அடிதடி என … Read more

65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, மண்​டியா ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ண​ராஜ​சாகர், ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது. இதே​போல காவிரி​யின் துணை ஆறான கபிலா உற்​பத்​தி​யாகும் கேரளா​வின் வயநாட்​டிலும் கனமழை பெய்​தது. இதனால் மைசூரு​வில் உள்ள கபினி அணைக்கு நீர்​வரத்து தொடர்ந்து அதி​கரித்​தது. இதன் காரண​மாக காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் அமைந்​துள்ள கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி அணை​களின் … Read more

வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்

பாட்னா: பிஹார் மாநிலம் பாட்​னா-கயா இடையே உள்ள ஜெக​னா​பாத் பகு​தி​யில் ரூ.100 கோடி​யில் சாலை அமைக்க நெடுஞ்​சாலைத்​துறை முடிவு செய்​தது. ஜெக​னா​பாத் பகு​தி​யில் சுமார் 7.48 கிலோமீட்​டர் தூரம் அமை​யும் இந்த சாலை​யில் நடு​வில் இருந்த மரங்​கள் இடையூறாக இருந்​தன. இதனையடுத்து அந்த மரங்​களை அகற்​றும்​படி வனத்​துறை​யிடம் மாவட்ட நிர்​வாகம் கோரிக்கை வைத்​தது. ஆனால், இதற்கு பதிலாக வனத்​துறைக்கு 14 ஹெக்​டேர் நிலத்தை ஒதுக்க வேண்​டும் என மாவட்ட நிர்​வாகத்​துக்கு வனத்​துறை அதி​காரி​கள் கோரிக்கை வைத்​தனர். ஆனால், … Read more

தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களி​லும் பாஜக மாநில தலைவர்​கள் மாற்றப்பட்டுள்ளனர். பார​திய ஜனதா கட்​சி​யின் ஆந்​திர மாநில தலை​வ​ராக புரந்​தேஸ்​வரி​யும், தெலங்​கானா மாநில பாஜக தலை​வ​ராக மத்​திய அமைச்​சர் கிஷண் ரெட்​டி​யும் பதவி வகித்து வந்​தனர். இவர்​களது பதவி காலம் முடிவடைந்​த​தால், இந்த இரு மாநிலத்​தி​லும் கட்​சியை மேலும் பலப்​படுத்த புதிய தலை​வர்​களை பாஜக நியமனம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி, நேற்று ஆந்​திரத்​தின் புதிய பாஜக தலை​வர் பதவிக்கு முன்​னாள் மேலவை … Read more

நுகர்வு கலாசாரம் கற்பனை செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: திரவுபதி முர்மு பேச்சு

பரேலி: கோவிட் பெருந்தொற்றுநோயானது நுகர்வு அடிப்படையிலான கலாசாரம் மனிதகுலத்திற்கு மட்டுமின்றி, பிற உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கற்பனை செய்து பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என எச்சரிக்கை விடுத்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் இன்று (ஜூன் 30, 2025) நடைபெற்ற இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடிரயசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “’ஈஷாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற வாழ்க்கை தத்துவத்தை … Read more

பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

புதுடெல்லி: நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் பயணிகள் ரயில் சேவை அடிப்படை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: ரயில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயணிகளின் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம் பயணிகள் ரயில் சேவைகளின் அடிப்படை கட்டணத்தை சீராய்வு செய்து திருத்தியுள்ளது. இது 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. கட்டண சீரமைப்பின் முக்கிய அம்சங்கள்: > புறநகர் ரயில் பயணக் கட்டணங்கள் மற்றும் … Read more

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு 6 நாள் பயணம்

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 30) முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு அதிகாரபூர்வமாக பயணம் மேற்கொள்கிறார். அவரது தலைமையில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையைச் … Read more

மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

சூரசந்த்பூர்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 72 வயது பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். சூரசந்த்பூர் நகரத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள மோங்ஜாங் கிராமத்துக்கு அருகே பிற்பகல் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து காரை நோக்கி சுட்டதாக சூரசந்த்பூர் மாவட்ட … Read more

மூவரின் திட்டமிட்ட ‘கொடூரம்’ – கொல்கத்தா மாணவி வன்கொடுமை சம்பவத்தில் காவல் துறை புதிய தகவல்

கொல்கத்தா: கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மனோஜித் மிஸ்ரா, பிரதிம் முகர்ஜி மற்றும் ஜைத் அகமது ஆகிய மூன்று பேரும் ஏற்கெனவே சில மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளதாக இந்த சம்பவத்தை விசாரிக்கும் 9 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சிறப்புப் … Read more

தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டம், பாஷமிலாராம் தொழிற்பேட்டையில் உள்ள மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ரசாயன ஆலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விபத்து நிகழ்ந்தது. அதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, 13 பேர் இடிபாடுகளுக்கு இடையேயிருந்து … Read more