மீண்டும் சாம்பியன்.. இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அசத்தல் !

செர்பியா நாட்டில் நடைபெற்ற பாராசின் ஓபன் ‘ஏ’ 2022 செஸ் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ், காசிபெக் நோகர்பெக், சகநாட்டவரான கவுஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் ஆகியோரை இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.   பின்னர், இறுதியில் ரஷ்ய வீரர் அலெக்ஸ்சாண்டர் பிரெட்கேயை விட அதிக புள்ளிகளை பெற்று இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று மீண்டும் அசத்தியுள்ளார். மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் 7 வெற்றி, 2-டிரா … Read more

பலாத்காரத்தால் 6 மாத கர்ப்பம் சிறுமிக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்க அனுமதி: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: பலாத்காரம் செய்யப்பட்டதால் 6 மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த  15 வயது சிறுமி, உறவினர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். ஒரு சில மாதங்களுக்குப் பின்னரே சிறுமி கர்ப்பிணியானது பெற்றோருக்கு தெரிய வந்தது. இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் … Read more

பொம்மை ஏரோ ப்ளைனுடன் குருத்வாராவில் குவியும் பக்தர்கள்.. என்னதான் காரணம்?

வழிபாட்டு தலங்களுக்கு சென்று வந்தால் தங்கள் குறைகள் நிறைகளாக மாறும் என்று நம்பும் மக்கள் வட்டாரம் ஏராளம். நிறைவேறாமல் போனாலும், விநோதமான கோரிக்கைகளை முன்வைக்கும் வழக்கத்தையும் கைவிடாமல் இருப்பார்கள். இப்படி இருக்கையில், வேலை அல்லது படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விசா, பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர் கடைசி நேரம் வரை காத்திருந்தாலும் அனுமதி கிடைக்காமல் போகும். இதன் காரணமாக வெளிநாட்டுக்கு செல்வதற்காக காத்திருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்து போவார்கள். அப்படியான நிகழ்வுகளை தவிர்ப்பதற்காகவே சில வழிபாட்டு தலங்கள் இந்தியாவில் இருக்கின்றன. கேட்கும் போதே … Read more

கருப்பு கொடி, பலூன் பறக்கவிட்ட கிராம மக்கள் !!

புதுச்சேரியில் ஆளுநர் வருகையை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி அருகே துத்திப்பட்டு பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான ஏரி மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மைதானம் கட்டியுள்ளதாக பிரச்சினை எழுந்தது. மைதானத்தை சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களால் விவசாய நிலங்களுக்கு கூட செல்ல முடியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் … Read more

மீண்டும் மிரட்ட வரும் சூர்யா.. ’24’ படத்தின் இரண்டாம் பாகம் !!

சூர்யாவின் ’24’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ’24’. கடந்த 2016ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில் மூன்று வேடங்களில் சூர்யா அசத்தியிருந்தார். படத்தில் நாயகியாக சமந்தா நடித்திருந்தார். இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது. டைம் டிராவல் முறையில் உருவான இந்தப் படம் குழந்தைகள் … Read more

ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட இந்திய விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்

ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட இந்திய விமானம் ஒன்று அவசரமாக பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களில் இந்திய விமானம் ஒன்று கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்படுவது இது 2வது முறையாகும். இது குறித்து இண்டியோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் IndiGo 6E-1406 விமானம் ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கராச்சியிலிருந்து பயணிகளை அழைத்துவர … Read more

உபி-டெல்லி பயணம் 4 மணி நேரம் குறையும் 296 கிமீ விரைவு சாலை திறந்து வைத்தார் மோடி

ஜலான்: உத்தர பிரதேசத்தில் 296 கிமீ துாரம் கொண்ட பண்டேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உத்தர பிரதேச மாநிலம், சித்ரகூட் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண். 35ல் இருந்து எட்டாவா மாவட்டம் குத்ரைல் கிராமம் வரை செல்லும் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையுடன் இணைக்கும்  வகையில், பண்டேல்கண்ட் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், ரூ.14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 … Read more

கோயிலுக்குள் இறைச்சியை வீசிய மர்ம நபர்கள் – கடைகளுக்கு தீ வைப்பு; பதற்றம்

உத்தரபிரதேசத்தில் கோயில் வளாகத்துக்குள் மர்ம நபர்கள் இறைச்சியை வீசி சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த இறைச்சிக் கடைகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றமான சூழல் காணப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் ரசூலாபாத் கிராமத்தில் சிவன் கோயில் அமைந்துள்ளது. இதனிடையே, பூஜைகள் நிறைவடைந்த பிறகு நேற்று முன்தினம் இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. அப்போது கோயில் … Read more

பாஜக மாஸ்டர் ப்ளான்..! – மேற்கு வங்க ஆளுநர் ஆகிறார் முக்தார் அப்பாஸ் நக்வி?

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக வேட்பாளராக, மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் ஜக்தீப் தன்கர் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்த ஆளுநர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாத தொடக்கத்தில் முடிவடைகிறது. இதை அடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு, … Read more

நாடு முழுவதும் கொரோனாவால் மேலும் 20,528 பேர் பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து 20 ஆயிரத்து 528 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்த 49 பேர் உயிரிழந்ததுடன், 17 ஆயிரத்து 790 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  Source link