மும்பையில் மீண்டும் வெடிகுண்டு வெடிக்கும்: போலீசுக்கு வந்த வாட்ஸ்அப் பதிவால் பரபரப்பு

மும்பை: மும்பை போலீசுக்கு வந்த வாட்ஸ் அப் பதிவில்,  மும்பையில் மீண்டும் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போக்குவரத்து காவல்துறைக்கு நேற்று வாட்ஸ்அப் பதிவு ஒன்று வந்தது. அதில், ‘மும்பையில் நடந்த தாக்குதல் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கப் போகிறது. நாங்கள் இதனை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். மொத்தம் ஆறு பேர் இந்த சம்பவத்தை அரங்கேற்றுவார்கள். எங்களது இருப்பிடம் உங்களுக்கு வெளிநாட்டை காண்பிக்கும்’ என்று … Read more

டெல்லி துணை முதல்வர் வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை – அதிகாரிகள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

புதுடெல்லி: மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு நவ.16-ல் அறிமுகப்படுத்தியது. அதன்படி, மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. டெல்லி முழுவதும் 849 விற்பனை நிலையங்களில் … Read more

மும்பையில் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த தீவிரவாதி தமிழகத்தில் கைது

மும்பை: மும்பையில்  தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்பளை செய்த தீவிரவாதி கைது செய்யப்பட்ட விஷயம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம், களிரோலி மாவட்டம், தர்மராஜா அடுத்த பங்கரபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டா என்கிற சீனிவாசமுல்லாகவுடு. 23 வயது இளைஞரான சேட்டா, மாவோயிஸ்டு பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவர் மீது போலீசில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. மும்பையில் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்பளை செய்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சேட்டா என்கிற … Read more

இமாச்சல் மாநிலத்தில் கொட்டி வரும் மிக பலத்த மழை!: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; பல இடங்களில் நிலச்சரிவு.. மக்கள் கடும் அவதி..!!

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் மிக பலத்த மழை கொட்டி வருவதால் பல்வேறு இடத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், காலை முதல் மிக பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக கங்ரா, சம்பா, பிலாஸ்பூர், மாண்டி ஆகிய மாவட்டங்களில் மேகவெடிப்பு போல மிக பலத்த மழை கொட்டியது. இதனால் ஆறுகளில் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. கங்ரா மாவட்டத்தில் சாக்கி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ரயில்வே பாலம் … Read more

பெரிதாக பேசுபவர்களிடம் தொலைநோக்கு இல்லை – எதிர்க்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘நாட்டை பற்றி கவலைப்படாதவர்கள்தான் பெரிதாக பேசுவார்கள், அவர்களால் குடிநீர் பாதுகாப்பு போன்ற பெரிய தொலைநோக்குடன் பணியாற்ற முடியாது’’ என எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கோவா மாநிலத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்ட நிகழ்ச்சி காணொலி மூலம் நேற்று நடந்தது. இந்தத் நலத்திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது: நாட்டை முன்னேற்ற நீண்ட கால அணுகுமுறை தேவை. நாட்டை பற்றி கவலைப்படாதவர்களால் மிக பெரிதாக பேச மட்டும்தான் முடியும். அவர்கள் நிறைய … Read more

கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் இல்லை; அடுத்த 3 – 4 நாட்களில் நான் கைது செய்யப்படலாம்: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விளக்கம்..!!

டெல்லி: டெல்லி அரசின் கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த மணீஷ் சிசோடியா, அடுத்த 3, 4 நாட்களில் அமலாக்கத்துறை என்னை கைது செய்யலாம்; அதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. கல்வித்துறையில் டெல்லி அரசின் சாதனைகள் உலகம் முழுவதும் பேசப்படுவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார். சிபிஐ அதிகாரிகள் எனது வீட்டிற்கு நேற்று வந்தனர். துணை முதல்வர் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். … Read more

'2024 தேர்தலில் பாஜகவுக்கு நேரடி போட்டி ஆம் ஆத்மி தான்' – மணிஷ் சிசோடியா பேட்டி

புதுடெல்லி: சிபிஐ-யால் இன்னும் இரண்டு – மூன்று தினங்களில் தான் கைதாகலாம் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த … Read more

வாட்டிய தனிமை! 59 வயது தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்!

வாழ்க்கையில் அனைவருக்கும் துணை தேவைப்படுகிறது. தனியாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை பலருக்கு இருந்தாலும் சில தருணங்களில் ஆறுதலாய் கை கொடுக்க, ஆதரவாய் தோள் கொடுக்க, பாரங்களை பகிர்ந்துகொள்ள ஒரு துணையின் தேவை அவசியமாகிறது. இதை புரிந்துகொண்ட ஒரு மகள் செய்துள்ள ஒரு நெகிழ்வான செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், … Read more

உ.பி. மதுராவில் கோயில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசம் மதுராவில் உள்ள பங்கி பிஹாரி என்ற கிருஷ்ணன் கோயிலில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியாயினர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டின்போது நெரிசல் ஏற்பட்டதில் மூச்சுத்திணறி இறந்தனர். 

உத்தரகாண்டில் மேக வெடிப்பு: அதிகாலையில் கடும் வெள்ளப் பெருக்கு; மக்கள் பாதிப்பு

உத்தரகாண்டில் ராய்பூர் – குமால்டா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”உத்தரகாண்டில் ராய்பூர் – குமால்டா பகுதியில் அதிகாலை 2.30 மணிக்கு மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக சாங் நதியில் கட்டப்ப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது. சுற்றுலா தளங்கள் பலவற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் … Read more