வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்ட காட்டுயானை.. கரைக்கு வரமுடியாமல் தவிப்பு.!

கேரளாவின் திருச்சூரில் உள்ள வெள்ளப்பெருக்கில் காட்டுயானை ஒன்று சிக்கி தவித்த காட்சி வெளியாகியுள்ளது. கேரளா மாநிலத்தில் கனமழை தொடர்வதால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரப்பள்ளி அருவிக்கு அருகேயுள்ள சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட யானை, போராடி தானாகவே கரை திரும்பியது.   Source link

2022 ஜூலையில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 பில்லியன் யூபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன: பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: 2022 ஜூலையில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 பில்லியன் யூபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர், யூபிஐ பரிவர்த்தனையில் இது மிகப்பெரிய சாதனையாகும் என பாராட்டு தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்பங்களை ஏற்படுத்திலும், பொருளாதாரத்தை சீராக்குவதிலும் இந்திய மக்களின் கூட்டான முடிவு இது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

கேரளா: கரையேற முடியாமல் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த காட்டு யானை

வால்பாறை அருகே கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், காட்டு யானை ஒன்று சிக்கிக் கொண்டது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் அருகில் உள்ள பெருங்கள்குத்து என்ற அணையும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பில்லபார என்ற இடத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை வெள்ளத்தில் … Read more

குஜராத், ராஜஸ்தானியர் குறித்த சர்ச்சை கருத்து – மன்னிப்பு கோரினார் மகாராஷ்டிர ஆளுநர்

மும்பை: மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பேசும்போது, “குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்களை மகாராஷ்டிராவில் இருந்து குறிப்பாக மும்பை மற்றும் தானே பகுதியிலிருந்து விரட்டியிருந்தால் இங்கு பணமே இருந்திருக்காது. நாட்டின் வர்த்தக தலைநகராக மும்பை இருந்திருக்க முடியாது. இவ்விரு மாநிலத்தவர்களும் எங்கு சென்றாலும், வர்த்தகம் செய்வதோடு, பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டி மக்கள் சேவை பணியிலும் ஈடுபடுகின்றனர்’’ என்றார். ஆளுநரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக சிவசேனா … Read more

Monkeypox: அச்சுறுத்தும் குரங்கம்மை.. 21 நாட்கள் தனிமை – அரசு உத்தரவு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், குரங்கம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை அடுத்து, குரங்கம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்தியாவில், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு … Read more

சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

டெல்லி: சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு பணமோசடி புகாரில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரித்த நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது. நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உட்பட 10 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடக முகப்பு புகைப்படத்தில் தேசியக் கொடியை வைத்த பிரதமர் மோடி: பொதுமக்களுக்கும் அழைப்பு

நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று அவர் தனது சமூக ஊடக முகப்பு புகைப்படமாக இந்திய தேசியக் கொடியை மாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று ஆகஸ்ட் 2 ஆம் தேதி சிறப்பான … Read more

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுமா? அமைச்சர் அளித்த பதில்!

அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக மக்களவையில் ரவிக்குமார் எம்.பி கேள்வி எழுப்பினார். மாதவிடாய் சலுகைகள் மசோதா, 2018 இல் வழங்கப்பட்ட மாதவிடாய் விடுப்பு போன்ற விதிகளை அரசாங்கம் செயல்படுத்துகிறதா, தனியார் அலுவலகங்களில் இந்தக் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதை அரசாங்கம் சோதிக்கிறதா? பொது அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறதா ? வேலை செய்யும் பெண்களுக்கு சிறந்த ஓய்வு வசதிகளை வழங்குவதற்காக அத்தகைய ஏற்பாடுகளை அரசு தொடங்க திட்டமிட்டுள்ளதா … Read more

ரூ.88,078 கோடி கொடுத்து 5ஜி ஏலத்தை கைப்பற்றியது ஜியோ நிறுவனம்..!

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 88 ஆயிரம் கோடி ரூபாயுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. நேற்றுடன் நிறைவு பெற்ற ஏலத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு 4ஜி அலைக்கற்றை விற்பனையான தொகையைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும். 10 அலைவரிசைகளில் வழங்கப்பட்ட 72,098 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளில் 71 சதவீதம் விற்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.  Source link

நீங்கள் ஒரு டெக்னாலஜி சீனியர் என பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் பார்த்திபன்!!

சென்னை : திரைப்பட இயக்குநர் பார்த்திபன் ஒரு டெக்னாலஜி சீனியர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிங்கிள் ஷாட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து திரையுலகினர், ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். ஒத்த செருப்பு திரைப்படத்தில் தனி ஒருவராக நடித்து அசத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த பார்த்திபன் இந்த படத்தை எந்த வெட்டும் இல்லாமல் இயக்கியுள்ளார்.இந்நிலையில் இயக்குநர் பார்த்திபனுடன் … Read more