பாட்னா குடிமையியல் நீதிமன்றத்தில் திடீர் குண்டு வெடிப்பு.. காவலர் ஒருவர் படுகாயம்..!

பீகாரில் குடிமையியல் நீதிமன்றத்தில், குறைந்த தீவிரமுடைய குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் பாட்னாவின் படேல் பல்கலைக்கழகத்தின் விடுதியிலிருந்து வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு அனுமதி பெற, நீதிமன்ற வளாகத்தில் வைத்திருந்தபோது வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது Source link

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு: போலீஸ் குவிப்பால் பதற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகமான, ‘ஏகேஜி சென்டர்’ மீது வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தூதரகம் மூலமாக நடந்த தங்கம் கடத்தலில் முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக, முக்கிய குற்றவாளியான சொப்னா கூறியதை தொடர்ந்து, கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பினராய் விஜயன் பதவி விலகக் கோரி  காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் வயநாட்டில் உள்ள … Read more

170 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது 170 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும், மேலும் இது அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். கோவாவில் விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் நாளை மும்பை வர இருப்பதாகவும், தான் இப்போதே மும்பை புறப்பட்டு செல்வதாகவும் தெரிவித்தார்.  Source link

முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா சர்ச்சை கருத்து; பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி கருத்து

திருவனந்தபுரம்: முகமது நபி குறித்து சர்ச்சை கருத்தை கூறிய விவகாரத்தில் நூபூர் சர்மா மட்டுமின்றி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்.க்கும் பொறுப்பு உண்டு என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி, கேரளாவுக்கு நேற்று 3 நாள் சுற்றுப் பயணமாக வந்தார். கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து வயநாடு வரை வழிநெடுகிலும் அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கல்பெட்டாவில் … Read more

“அசாதாரணமான காலம் என்பதால் பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு” – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அசாதாரணமான காலம் என்பதால் பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதிக அளவு இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமமாக … Read more

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளை சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தி ஸ்டார்ட் அப் அசத்தல்: விண்வெளி துறையில் புதிய மைல்

புதுடெல்லி: பிஎஸ்எல்வி சி53 ராக்கெட்டின் மூலமாக நேற்று முன்தினம் ஏவப்பட்ட 3 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் விண்வெளி துறையிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல ஆர்வமுடன் தொடங்கப்பட்டுள்ளன. இதில், ஐதராபாத்தைச் சேர்ந்த, ‘துருவா ஸ்பேஸ்’ மற்றும் ‘திகந்தாரா நிறுவனங்கள்’ குறிப்பிடத்தக்கவை. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட 3 … Read more

மணிப்பூர் மாநிலத்தில் மண் சரிவு.. தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி.. 20 பேரின் உடல்கள் மீட்பு

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. துபுல் யார்டு ரயில்வே கட்டுமான தளத்திற்கு அருகில் உள்ள பிராந்திய இராணுவ முகாமில், கனமழை காரணமாக கடந்த 29 ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு ராணுவம், அசாம் ரைபிள்ஸ், மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து 2வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 15 ராணுவ வீரர்கள் … Read more

மணிப்பூர் நிலச்சரிவு சம்பவம், 7 வீரர்கள் உட்பட 14 பேரின் சடலம் மீட்பு; மேலும் 60 பேரின் கதி என்ன?

இம்பால்: மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 வீரர்கள் உட்பட 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 60 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலம் நோனே மாவட்டம் துபுல் ரயில் நிலையம் அருகே கட்டுமானப் பணி நடைபெறுவதால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக, 107 டெரிடோரியல் ஆர்மி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கன மழை பெய்ததால் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. துபுல் … Read more

இந்த லூட்டிங் வேலை அநியாயம்னு உங்களுக்கு தெரியலயா? – IRCTC-ஐ சாடிய பயணி!

இந்திய ரயில் சேவையில் உணவு மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்கும் IRCTC-யின் சேவை குறித்தும், அதன் விலைப்பட்டியல் குறித்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி.யின் சேவை குறித்து எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும் அதன் மீது எந்த தீர்வும் காணப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டு வருவதும் வழக்கமாகி இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்தை மூலம் தீர்வு காண்க: புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்தினார். இந்த உரையாடலின் போது, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில், ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்தபோது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நிறைவேற்றப்படுவது குறித்து இரண்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர். குறிப்பாக, வேளாண் பொருட்கள், உரம், மருந்து பொருட்கள் தொடர்பான இருதரப்பு வர்த்தகத்தை எந்தளவு … Read more