பீகாரில் பிரதமரை கொல்ல சதி – இருவரை கைதுசெய்து போலீசார் விசாரணை

பீகார் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை 2047ஆம் வருடத்துக்குள் இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட இருவர் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பீகார் மாநிலம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி சட்டசபை விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரைக் கொல்ல சதிசெய்ததாக அத்தர் பர்வேஸ் மற்றும் முஹம்மத் ஜலாலுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத அமைப்புகளும் இதில் தொடர்புள்ளதாக பீகார் … Read more

எந்தச் சொற்களுக்கும் தடை விதிக்கவில்லை. ஆனால்… – மக்களவைத் தலைவர் விளக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியல் – 2022 வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதற்கு விரிவான விளக்கம் கொடுத்துள்ளார் மக்களவை தலைவர் ஓம் பிர்லா. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மக்களவைச் செயலர் அவை நாகரிகமற்ற வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும், மீறி பயன்படுத்தினால் அவைக் குறிப்பிலிருந்து அந்த வார்த்தைகள் … Read more

திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடு தடுக்க யுபிஐ க்யூ.ஆர். ஸ்கேன் பயன்படுத்த முடிவு

திருமலை: திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடுகளை தடுக்க யுபிஐ க்யூஆர் ஸ்கேன் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள், தரிசன டிக்கெட்டுகள் பெற பணம் செலுத்தும் நிலையில் இருந்து பணம் இல்லா பரிவர்த்தனை என்ற முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனையான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தில் அறைகள் பெறும் பக்தர்கள் வழங்கும் டெபாசிட் தொகை, அறையை காலி செய்யும்போது தேவஸ்தானம் … Read more

இந்தியாவில் நுழைந்தது குரங்கு அம்மை – கேரளாவில் ஒருவருக்கு உறுதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே அதிகமாக பரவி வந்த இந்தக் காய்ச்சல் சமீப காலமாக பல்வேறு நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உட்பட 57 நாடுகளில் 6,000க்கும் மேற்பட்டோருக்கு தற்போது இந்த நோய் பரவியுள்ளது. இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த … Read more

ஜூலை 12-இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

கேரள: ஜூலை 12-இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.  

கர்ப்பிணியை காப்பாற்ற முயன்றவர்களுக்கு நேர்ந்த துயரம் -வெள்ளத்தில் சிக்கிய இருவர் பலி

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பாக வெளியே மீட்டு வர முயன்ற இரு இளைஞர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. தலைநகர் ஹைதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவிக்கும் மக்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் … Read more

அந்தமான் மீனவர்களுக்கு விரைவில் குடியிருப்பு, ஆழ்கடல் மீன்பிடிப்பு வசதிகள்: எல்.முருகன் தகவல்

போர்ட் பிளேர்: அந்தமான் தீவு மீனவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான வசதிகளை விரைவில் மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமான் தீவுகளுக்குச் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் பயணத்தின் முதல் நாளான வியாழக்கிழமை ( ஜூலை 14) ரங்கத் வளைகுடா பகுதியிலுள்ள மீனவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்குள்ள … Read more

சமாதி நிலையில் இருந்த நித்யானந்தா சமூக வலைதளங்களில் திடீர் பேச்சு

புதுடெல்லி: சமாதி நிலையில் இருப்பதாக அறிவித்திருந்த நித்யானந்தா திடீரென தோன்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா, பெங்களூரில் இருந்து தப்பிச் சென்று, இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு உரை ஆற்றி வந்த அவர் கடந்த 3 மாதங்களாக நேரில் தோன்றவில்லை. இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியானது. அவை புரளி எனவும், நான் ஆழ்ந்த … Read more

ஒரே குத்தில் கோமா – சுருண்டு விழுந்த குத்துச்சண்டை வீரர் பரிதாப மரணம்! பகீர் வீடியோ!

பெங்களூரில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் முகத்தில் குத்து வாங்கிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஞான ஜோதி நகரில் உள்ள பாய் சர்வதேச வளாகத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் மைசூரை சேர்ந்த நிகில் என்ற 23 வயது வீரர் கலந்துகொண்டார். நிகிலும் மற்றொரு வீரரும் மோதியபோது, நிகிலின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டார் எதிர் வீரர். இதனால் நிலைதடுமாறிய நிகில் அங்கேயே சுருண்டு விழுந்தார். … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு சம்மன் எதிரொலி; நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு.!

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகளை சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றினர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய நிறுவனத்துக்கு கொடுத்த கடனுக்காக இந்த பங்கு பரிமாற்றம் நடந்தது. இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்க பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 13, 14, … Read more