முன்விரோதம் காரணமாக உ.பி., மசூதியினுள் முதியவர் சுட்டுக் கொலை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மேற்குப்பகுதியின் மசூதியினுள் முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பபட்டார். பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட ஒரே இடமான மசூதியில் நடத்தப்பட்ட கொலையால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. உ.பி.,யின் புலந்ஷெஹர் மாவட்டத்தில் அமைந்துள்ள கூர்ஜா. அலிகருக்கு அருகிலுள்ள இந்த சிறிய நகரம், முகலாயர் காலம் முதல் பீங்கான் பொருள் தயாரிப்பிற்கு பெயர்போனது. இங்குள்ள ஷேக் பென் பகுதிவாசி தொழிலதிபர்களில் ஒருவராக வாழ்ந்தவர் முகம்மது இதிரீஸ்(65). இவர் நேற்று காலை வழக்கம் போல், அருகிலுள்ள மசூதியில் விடியற்காலை தொழுகைக்கு சென்றுள்ளார். தொழுகைக்குப் … Read more

உத்தரப்பிரதேசத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான புந்தேல்கண்ட் 4வழி விரைவுச்சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டம் ஒராய் வட்டம் கைத்தேரி கிராமத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான புந்தேல்கண்ட் 4வழி விரைவுச்சாலையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.சாலை கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கிய பணியில் முக்கிய  அம்சமான போக்குவரத்து தொடர்பை நாடு முழுவதும் விரிவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக புந்தேல்கண்ட்  விரைவுச்சாலைக்கு 2020 பிப்ரவரி 29 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டியிருந்தார். இந்த விரைவுச்சாலைப் பணி 28 மாதங்களில் முடிக்கப்பட்டு இப்போது பிரதமரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. … Read more

'மாற்றுக் கருத்துகளும் அவசியம்' – முகமது ஜுபைர் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன?

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, மாற்றுக் கருத்துகளை உடையவர்களின் குரல்களும் ஜனநாயகத்துக்கு இன்றியமையாதவை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் (Fact Check) ‘ஆல்ட் நியூஸ்’ என்ற வலைதள செய்தி நிறுவனத்தில் இணை நிறுவனராக இருப்பவர் முகமது ஜுபைர். சமூக பிரச்னைகள் குறித்து அன்றாடம் குரல் கொடுத்து வரும் இவர், மத்தியில் ஆளும் பாஜகவை பல்வேறு … Read more

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் சோதனை

பாட்னா: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகங்களில் பிஹார் போலீஸார் நேற்று அதிரடி சோதனையை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸார் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை பிஹார் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவரைக் கொல்ல சதி செய்ததாக பாட்னாவைச் சேர்ந்த அத்தர் பர்வேஸ், முஹம்மத் ஜலாலுதீன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தீவிரவாத அமைப்புகளுக்கும் இதில் தொடர்புள்ளதாக பிஹார் போலீஸ் தெரிவித்திருப்பதால், இந்த வழக்கு குறித்து … Read more

நாடாளுமன்றத்துக்குள் சபாநாயகரின் முன் அனுமதியின்றி துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கத் தடை..!

நாடாளுமன்றத்துக்குள் அறிவிப்பு பலகைகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில், மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேள்வித்தாள்கள், துண்டு பிரசுரங்கள், பத்திரிகை குறிப்புகள் உள்ளிட்டவைகளை சபாநாயகரின் முன் அனுமதியின்றி விநியோகிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Source link

'வார்த்தை தடை' சர்ச்சையை தொடர்ந்து அடுத்த அதிரடி.. நாடாளுமன்றத்தில் துண்டு பிரசுரங்கள், பதாகைகள், போஸ்டர்களுக்கு தடை!!

புதுடெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளிலும் துண்டு பிரசுரங்கள், பதாகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டங்களில் உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் என மிகப்பெரிய பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் மற்றொரு புதிய … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேச்சு; பலன் தருமா கேசிஆர் வியூகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரிடமும் பேசி பாஜகவுக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுப்பது பற்றி ஆலோசித்துள்ளார் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ். ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காஞ்சிபுரம் பக்தர் நெரிசலில் சிக்கி பலி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர், வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், முகலிவாக்கம், வேளாங்கண்ணி நகரை  சேர்ந்தவர் வேதாச்சலம் (64). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக  திருமலைக்கு வந்தார். இரவு 9.45 மணிக்கு வேதாச்சலம் எஸ்.எம்.சி. சந்திப்பு  அருகே வரிசையில் இருந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில்    திடீரென மயங்கி விழுந்தார்.பின்னர் அவர் 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். … Read more

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது – யுஜிசி திட்டவட்டம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான பொதுநுழைவுத் தேர்வில் (சியுஇடி) பங்கேற்காதவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட மாட்டாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை நடத்தும் முறை, நடப்புக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த நடைமுறையை மத்திய அரசு … Read more

டிஜிட்டல் செய்திகளை கட்டுப்படுத்த விரைவில் சட்டம்

புதுடெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் வாயிலான செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய மசோதா அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் அனைத்தும் முதலில் பதிவு செய்ய வேண்டும். மசோதா அமலுக்கு வந்த 90 நாட்களுக்குள் அனைத்து டிஜிட்டல் ஊடகங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தற்போது டிஜிட்டல் மூலமான செய்திகளுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஊடகம் சார்ந்த விவகாரங்களைக் கண்காணிக்கும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், அச்சு மற்றும் இதழியல் … Read more