குஜராத்தில் 250 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற 9 பாகிஸ்தானியர் கைது

அகமதாபாத்: குஜராத்தில் இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த அல் ஹஜ் என்ற படகு ஒன்று அத்துமீறி நுழைந்தது. அரபிக் கடலில் நுழைந்த அந்த படகை கடலோர காவல் படையும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் மடக்கிப் பிடித்தனர். பாகிஸ்தான் படகில் 250 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தான் படகில் இருந்த அந்நாட்டைச் சேர்ந்த 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 9 … Read more

பயணிகளுடன் வைத்து பஸ்சை எரித்த மாவோயிஸ்ட்

திருமலை: ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், சிந்தூரூ மண்டலம் கொத்தூரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒடிசாவில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற ஒரு தனியார் பஸ்சை தேசிய நெடுஞ்சாலையில் மாவோயிஸ்டுகள் மடக்கி நிறுத்தினர். பயணிகள் கீழே இறங்குவதற்குள் பஸ்சை தீ வைத்து எரித்தனர். இதில் பஸ்சில் பயணம் செய்த பலர் காயமடைந்தனர். உடனடியாக காயமடைந்தவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அவ்வழியாக செல்லும் … Read more

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு: ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணையை ஜூலையில் தொடங்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 20-க்கும்மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை … Read more

பாக். படகில் கடத்தி வரப்பட்ட ரூ.280 கோடி மதிப்பிலான போதைபொருள் பறிமுதல்: குஜராத்தில் தொடர் சம்பவங்கள்

அகமதாபாத்: குஜராத்தில் அதிக விலை மதிப்பிலான கடத்தல் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த ஆண்டு, அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 3000 கிலோ போதைப் பொருள் இருந்த கன்டெய்னர் சிக்கியது. இதைத் தொடர்ந்து, கடந்த 21ம் தேதி, குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் ரூ.1439 கோடி மதிப்பிலான போதைப் பொருள் இருந்த கன்டெய்னர் சிக்கியது.  இதுதொடர்பாக பஞ்சாப்பை சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர் கைதாகி இருப்பதாக வருவாய் துறை அதிகாரிகள் … Read more

இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட ஸ்பைக் ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்ப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலிடம் இருந்து ஸ்பைக் அதிநவீன ஏவுகணைகளை வாங்குவதற்கு கடந்த ஆண்டு இந்தியா  ஒப்பந்தம் செய்தது. இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட ஸ்பைக் ஏவுகணைகள் ராணுவம் மற்றும்  விமான படையில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்பைக் எல்ஆர் -2 லாஞ்சர்கள்,ஏவுகணைகள் 5.5 வரை உள்ள தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. விமான படையின் எம்ஐ-17 வி 5 … Read more

சட்டப்பிரிவு 370 ரத்து வழக்கு கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப்பிரிவு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதியின் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஆர் சுபாஷ் ரெட்டி, பிஆர் கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் … Read more

நண்பர் இமானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி

புதுடெல்லி:  பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் மேக்ரான் உள்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இமானுவல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. இதனால் நேற்று முன்தினம் நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. … Read more

கேரள முன்னாள் அமைச்சர் சங்கரநாராயணன் மரணம்: 6 மாநிலங்களில் கவர்னராக இருந்தவர்

திருவனந்தபுரம்: கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே. சங்கரநாராயணன் உடல் நலக்குறைவால் பாலக்காட்டில் மரணமடைந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே. சங்கரநாராயணன் (89). இவர் பாலக்காடு அருகே சேகரிபுரம் பகுதியை சேர்ந்தவர். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் மரணமடைந்தார். இவர் கருணாகரன், ஏ.கே. அந்தோணி ஆகியோரது அமைச்சரவையில் … Read more

2 டோஸ் செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அவசியம்

புனே: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய நோய் நுண்ணுயிரியல் நிறுவன விஞ்ஞானிகள் பிரக்யா டி. யாதவ், கஜனன் என்.சப்கல், ரீமா ஆர். சகாய் மற்றும் சில மருத்துவர்கள், உருமாறிய ஒமைக்ரான் பிஏ-1 வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் ஒமைக்ரான் பிஏ-1 வகை வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி குறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது தெரியவந்தது.  இந்த ஆய்வு … Read more

ராஷ்மிகாவை முற்றுகையிட்ட ரசிகர்கள்

மும்பை: புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா. இந்த படத்தால் ராஷ்மிகா, பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார். தற்போது இந்தியில் குட்பை, மிஷன் மஜ்னு, அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்காக மும்பையில் தங்கியுள்ள அவர், நேற்றுமுன்தினம் அங்குள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது ராஷ்மிகாவை அடையாளம் கண்டுகொண்ட மும்பை ரசிகர்கள், அவரை சூழ்ந்துகொண்டனர். ராஷ்மிகாவுடன் செல்பி எடுக்க அவர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்து செல்ல முடியாமல் ராஷ்மிகா அவதிப்பட்டார். இதையடுத்து … Read more