சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டாமல் காங்கிரஸ் முதல்வர்கள் டெல்லியில் முகாம்; ஊழல் செய்யாத போது, பயம் எதற்கு?.. ஒன்றிய அமைச்சர் கேள்வி

டெல்லி: சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது ஏற்பாடையது அல்ல என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துக்கர். ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை நடத்தும் ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை, ‘யங் இந்தியா’ நிறுவனம் வாங்கியதில் நிதிமுறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்கும், அமலாக்கத்துறை சார்பில் தனி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் பங்குதாரரான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே … Read more

பயணியின் தொல்லையால் திசை திருப்பப்பட்ட விமானம்..! – என்ன நடந்தது தெரியுமா..?

லண்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் விமானம், முரடுபிடித்த பயணியால் அது உத்தேசித்துள்ள விமானப் பாதையில் இருந்து திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று என்பிசி நியூஸ் தெரிவித்துள்ளது. விர்ஜின் அட்லாண்டிக் விமானம் 141 யுனைடெட் கிங்டமில் உள்ள லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது, ஆனால் பயணிகளின் இடையூறுக்குப் பிறகு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் எதிர்பார்க்கப்பட்ட இலக்குக்கு முன்பாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விர்ஜின் அட்லாண்டிக் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், … Read more

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50% விமான சேவையை இயக்க மட்டுமே அனுமதி

டெல்லி: ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50% விமான சேவையை இயக்க மட்டுமே அனுமதி அழைக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமான சேவையில் பல்வேறு புகார் எழுந்த நிலையில் டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

'எம்பிக்கள் மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் வாபஸ்' – மத்திய அரசு!

நாடாளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள், மன்னிப்பு கேட்டால், அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெறப்படும் என, மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கருத்துத் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர், அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலுமே, ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட … Read more

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.64 இலட்சம் கோடி நிதி.!

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குப் புத்துயிரூட்ட ஒரு இலட்சத்து 64ஆயிரம் கோடி ரூபாய் நிதித் தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  Source link

திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி: செப். 27ம்தேதி வருடாந்திர பிரம்மோற்சவம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்டம்பர் 27ம்தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு தோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் காலையிலும், இரவிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் பக்தர்களின்றி நடந்தது. இந்தாண்டு பக்தர்கள் தரிசிக்கும் வகையில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் … Read more

எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை – யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு ..!

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியை விட்டு வெளியேறி, எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்று அறிவித்தார். 2022 ஜனாதிபதித் தேர்தலில் திரௌபதி முர்முவிடம் சின்ஹா தோல்வியடைந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. டிஎம்சியுடன் கைகோர்ப்பது குறித்த அனைத்து ‘வதந்திகளையும்’ நிராகரித்த 84 வயதான அவர் சுதந்திரமாக இருப்பதாக சபதம் செய்தார். அவர் பிடிஐயிடம் பேசியபோது, “நான் சுயேச்சையாக இருப்பேன், வேறு எந்தக் … Read more

கர்நாடகாவில் பாஜக தொண்டர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.!

கர்நாடகாவில் பாஜக தொண்டர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டர்வகள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக யுவமோர்ச்சா நிர்வாகி பிரவீன் நெட்டார் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து பெல்லாரியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனிடையே மற்றொரு இடத்தில் பாஜகவை சேர்ந்த தட்சிண கன்னடா எம்.பி நளின்குமார் கட்டீலுக்கு சொந்தமான காரை போராட்டக்காரர்கள் அடித்து சேதப்படுத்தினர். Source link

நாடு முழுவதும் காய்ச்சல், இதய பாதிப்புகளுக்கு பயன்படுத்தும் மருந்துகளில் 26 மருந்துகள் தரமற்றவை: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்..!

டெல்லி: நாடு முழுவதும் சந்தையில் 26 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 1,096 மருந்துகளை ஆய்வு செய்ததில் 26 மருந்துகள் தரமற்றவை என தெரியவந்துள்ளது. காய்ச்சல், இதய பாதிப்பு, … Read more

கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் படுகொலை: வன்முறை வெடித்ததால் போலீஸ் குவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் பரவலாக பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வலுத்துள்ளது. சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. படுகொலை – நடந்தது என்ன? – கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் ஒருவர் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் தக்‌ஷின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு. இவர் பாஜக மாவட்ட இளைஞரணி (யுவ மோர்சா) செயலாளராக உள்ளார். பெல்லாரி … Read more