2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கிறது இந்தியா

புதுடெல்லி: 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்துதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் … Read more

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு இன்று முதல் அமல்: தயாராகும் இந்தியா…. இந்த துறைகள் ஆட்டம் காணும்

Trump Tariffs Latest News: இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கும் விரிவான திட்டத்தை அமெரிக்கா திங்களன்று அறிவித்தது. அது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி: ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த ராஜஸ்தான் தொழிலதிபர்

புது டெல்லி: ராஜஸ்தானில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த தொழிலதிபர் வருமான வரித்துறையினரிடம் சிக்கினார். ராஜஸ்தானின் பில்வாராவில் தொழிலதிபராக இருப்பவர் கமலேஷ் ஆச்சார்யா. இவர், தனது நண்பர்களான வழக்கறிஞர்கள் விகாஸ் வியாஸ் மற்றும் தீபக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் கட்சி துவக்கி உள்ளார். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட இக்கட்சியின் பெயர், ‘தேசிய சர்வ சமாஜ் கட்சி’. இதன் பின்னணியில் தமது கறுப்புப் … Read more

ராகுல் காந்தியுடன் விரைவில் விஜய் சந்திப்பு? உடைகிறதா திமுக கூட்டணி?

திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைத்து ஒரு புதிய அரசியல் அணிக்கு தலைமை தாங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு – டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் மரபணு மாற்று தொழில்நுட்பம் ஆகிய விவகாரங்கள் முன்னிறுத்தப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று( ஆக. 26) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்திற்கு பின் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டனர். … Read more

வைரல் வீடியோ: குடிபோதையில் இருந்த இளைஞருக்கு அடி, உதை… மெட்ரோவில் நடந்த சம்பவம்

Delhi Metro Viral Video: டெல்லி கரோல் பாக் மெட்ரோ நிலையத்தில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது தாக்குதல். வீடியோ வைரல்.

பிஹாரில் 9 பேர் உயிரிழந்ததற்கு துக்கம் விசாரிக்க வந்த அமைச்சரை தாக்கிய கிராம மக்கள்!

நாளந்தா: பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஷ்ரவன் குமார், கிராம மக்களால் தாக்கப்பட்டார். நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஜோகிபூர் மலாவன் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து இன்று காலை அமைச்சர் ஷ்ரவன் குமார், உள்ளூர் எம்எல்ஏவுடன் சேர்ந்து, சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்க ஜோகிபூர் … Read more

முதல் மனைவி வேலை பார்க்கும் மருத்துவமனையில்..2வது மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்!

Indian Origin Man Caught By First Wife : ஒரு நபர், தனது முதல் மனைவியிடம் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்த போது அதை கையில் கொண்டு வருகையில் வசமாக சிக்கியிருக்கிறார். இந்த சம்பவம், கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

ட்ரம்ப் 4 முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி: ஜெர்மனி செய்தித்தாள் தகவல்!

புதுடெல்லி: இந்தியா மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்திய வாரங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச நான்கு முறை முயற்சித்தார் என்றும், ஆனால் பிரதமர் மோடி அவருடன் பேச மறுத்துவிட்டார் என்றும் ஜெர்மனியை சேர்ந்த செய்தித்தாள் பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியா மீது, அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. பிரேசில் நாட்டை தவிர வேறு எந்த … Read more

வாக்கு திருட்டுக்கு எதிரான பேரணியில் மு.க. ஸ்டாலின் பேசிய முக்கிய அம்சங்கள்

CM MK Stalin’s Speech At Voter Adhikar Yatra: பீகாரில் தேர்தலில் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்காளர் உரிமை பேரணியில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜகவை கடுமையாக சாடினார்.