கர்நாடகாவில் 5 புலிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் மைசூருவை அடுத்​துள்ள மலே மாதேஸ்​வரா வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட கஜனூர் வனப்​ப‌கு​தி​யில் 2 தினங்​களுக்கு முன்பு ஒரு தாய் புலி​யும் அதன் 4 குட்​டிகளும் இறந்து கிடந்​தன. அவற்​றின் பக்​கத்​தில் இறந்த பசு​வின் சிதைந்த உடலும் கிடந்​தது. இதுகுறித்து வனத்​துறை அதி​காரி​கள் விசா​ரித்த போது, அந்த பசு, கோப்பு கிராமத்தை சேர்ந்த கோனப்​பாவுக்கு சொந்​த​மானது என தெரிய வந்​தது. புலிகள் மற்​றும் பசு​வின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, புலிகளுக்கு விஷம் … Read more

டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் பெண் மருத்துவரிடம் ரூ.3 கோடி அபகரிப்பு

டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.3 கோடியை மர்ம கும்பல் அபகரித்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 70 வயது பெண் மருத்துவருக்கு கடந்த மே 28-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை அமித் குமார் என்றும் தொலைத் தொடர்பு துறை மூத்த அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தி கொண்டார். பெண் மருத்துவரின் சிம் கார்டு, ஆதார் எண்ணை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று … Read more

உத்தர பிரதேசத்தில் கதாகாலட்சேபகர் மீது தாக்குதல்: 2 சமூகத்துக்கு இடையே பெரிதாகும் பிரச்சினை

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் 15 ஆண்​டு​களாக கதாகாலட்​சேபம் செய்​யும் முகுட்​மணி சிங் யாதவ் மற்​றும் அவரது உதவி​யாளர் சந்த் குமார் யாதவ் தாக்​கப்​பட்​டனர். முகுட்​மணி​யின் தலை​முடியை மொட்​டையடித்த கும்​பலில் 4 இளைஞர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். பிராமணர் அல்​லாத முகுட்​மணி கதாகாலட்​சேபம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரி​வித்து தாக்​குதல் நடந்​துள்​ளது. இதை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் உட்பட பலரும் கண்​டித்​துள்​ளனர். இதற்​கிடை​யில், முகுட்​மணி மீது பாலியல் மற்​றும் பிராமணர் என பொய் கூறிய​தாக வழக்​கு​கள் … Read more

பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்கரவர்த்தி' பட்டம்: ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விழாவில் கவுரவம்

ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விவாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெயின் துறவி ஆச்சார்ய வித்யானந்த் மஹராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஷெட்பல் கிராமத்தில் கடந்த 1925-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பிறந்தார். நவீன இந்தியாவின் புகழ்பெற்ற ஜெயின் துறவிகளில் ஒருவராக விளங்கினார். ஜைன மத கொடி மற்றும் சின்ன வடிவமைப்பில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்நிலையில், வித்யானந்தின் நூற்றாண்டு (பிறந்த நாள்) விழா அடுத்த … Read more

மேற்கு வங்க மாணவிக்கு பாலியல் கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு; 4 பேர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்​தில் தெற்கு கொல்​கத்தா சட்​டக் கல்​லூரி அமைந்​துள்​ளது. இதில் பயிலும் மாணவி கடந்த 25-ம் தேதி கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இது தொடர்​பாக அந்த மாணவி கஸ்பா காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார். அதில், ‘‘தேர்வு விண்​ணப்​பத்தை பூர்த்தி செய்​வது தொடர்​பாக கல்​லூரி ஊழியர் மனோஜித் மிஸ்​ராவை சந்​தித்​தேன். அப்​போது தன்னை திரு​மணம் செய்து கொள்​ளு​மாறு அவர் என்​னிடம் கூறி​னார். இதற்கு மறுப்பு தெரி​வித்​தேன். பின்​னர், 2 மாணவர்​களை அழைத்து … Read more

புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம்: விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு

புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தம் செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: புதிய திருத்தங்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட 3 மாதங்களில் இந்த … Read more

பிரதமர் மோடி 5 நாடுகள் பயணம்: பிரேசில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக ஜூலை 2 முதல் 9 வரை 5 நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிகா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற உள்ளார். இதற்கான பயணத்தில் … Read more

அரசியலமைப்பு முகவுரையில் இருந்து 'மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்

கவுகாத்தி: அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். கவுகாத்தியில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில் ‘தி எமர்ஜென்சி டைரீஸ்: இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “இன்று, அவசர நிலையின்போது ஏற்பட்ட போராட்டம் மற்றும் எதிர்ப்பு பற்றிப் … Read more

சட்டக் கல்லூரி மாணவி வழக்கு: முதல்வர் மம்தா, திரிணமூல் காங். மீது பாஜக சரமாரி குற்றச்சாட்டு

கொல்கத்தா: ‘கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கில் கைதான அனைவரும் திரிணமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்கள்’ என்று பாஜக கூறியுள்ளது. இது தொடர்பாக பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, “இது ஒரு வகையில் அரசால் ஆதரிக்கப்படும் மிருகத்தனமான கொடூரக் குற்றம். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக தலைவர் ஜே.பி.நட்டா … Read more

“அரசியல் சாசன முகவுரை மாற்ற முடியாதது, ஆனால்…” – ஜெகதீப் தன்கர் பேச்சு

புதுடெல்லி: அரசியல் சாசன முகவுரை மாற்றத்துக்கு உட்பட்டதல்ல என தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எனினும் நாட்டில் அவசரநிலை அமலில் இருந்தபோது அது மாற்றப்பட்டது என குறிப்பிட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும் அம்மாநில சட்டமன்றத்தின் முன்னாள் மேலவை உறுப்பினருமான டி.எஸ். வீரய்யா தொகுத்த ‘அம்பேத்கரின் செய்திகள்’ என்ற நூலை புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று (ஜூன் 28) வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “எந்தவொரு அரசியலமைப்பின் முகவுரையும் … Read more