மோடி அரசை கவிழக்க சதி செய்தவர் தீசல்வாட்- நீதிமன்றத்தில் குஜராத் போலீஸ் வாதம்

குஜராத் கலவரத்துக்கு பிறகு அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசை கவிழ்க்க சதி செய்ததாக சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா தீசல்வாட் மீது அம்மாநில காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்தக் கலவரத்தை தடுக்க அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எந்தவித … Read more

மக்களவை சபாநாயகர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

புதுடெல்லி: மக்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று கூட்டியுள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையை சுமுகமாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. … Read more

ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே?: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: பிரதமரே ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டில் வேலையின்மை திண்டாட்டம் தொடர்பாக ராகுல் காந்தி புள்ளி விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தரவுகளின் அடிப்படையிலான வரைபடத்தைப் ட்விட்டரில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அந்த வரைபடத்தில் 2017-2018ம் ஆண்டில் 21% ஆக இருந்த வேலையின்மை, … Read more

மோடி – யோகி அரசு வளர்ச்சியை நகரங்களுக்கு மட்டுமல்ல கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லும்: பிரதமர் பேச்சு

லக்னோ: மோடி-யோகி அரசு வளர்ச்சியை உத்தரப்பிரதேச நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 14 ஆயிரத்து … Read more

தமிழ்நாடு, சத்தீஸ்கர் எஸ்.சி, எஸ்.டி பட்டியல் திருத்த மசோதா அறிமுகம்: மக்களவை செயலாளா் வெளியிட்டுள்ள குறிப்பில் அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கருக்கான எஸ்.சி, எஸ்.டி பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுக செய்ய உள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஓன்றிய அரசு அறிமுக செய்ய உள்ள புதிய மசோதாக்கள் விவரங்களை மக்களவை செயலாளர் வெளியிட்டிருக்கிறார். நகராட்சி அளவிலான வளர்ச்சி திட்டங்களை கொண்ட கண்டோன்மெண்ட் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதில் … Read more

முன்விரோதம் காரணமாக உ.பி., மசூதியினுள் முதியவர் சுட்டுக் கொலை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மேற்குப்பகுதியின் மசூதியினுள் முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பபட்டார். பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட ஒரே இடமான மசூதியில் நடத்தப்பட்ட கொலையால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. உ.பி.,யின் புலந்ஷெஹர் மாவட்டத்தில் அமைந்துள்ள கூர்ஜா. அலிகருக்கு அருகிலுள்ள இந்த சிறிய நகரம், முகலாயர் காலம் முதல் பீங்கான் பொருள் தயாரிப்பிற்கு பெயர்போனது. இங்குள்ள ஷேக் பென் பகுதிவாசி தொழிலதிபர்களில் ஒருவராக வாழ்ந்தவர் முகம்மது இதிரீஸ்(65). இவர் நேற்று காலை வழக்கம் போல், அருகிலுள்ள மசூதியில் விடியற்காலை தொழுகைக்கு சென்றுள்ளார். தொழுகைக்குப் … Read more

உத்தரப்பிரதேசத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான புந்தேல்கண்ட் 4வழி விரைவுச்சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டம் ஒராய் வட்டம் கைத்தேரி கிராமத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான புந்தேல்கண்ட் 4வழி விரைவுச்சாலையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.சாலை கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கிய பணியில் முக்கிய  அம்சமான போக்குவரத்து தொடர்பை நாடு முழுவதும் விரிவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக புந்தேல்கண்ட்  விரைவுச்சாலைக்கு 2020 பிப்ரவரி 29 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டியிருந்தார். இந்த விரைவுச்சாலைப் பணி 28 மாதங்களில் முடிக்கப்பட்டு இப்போது பிரதமரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. … Read more

'மாற்றுக் கருத்துகளும் அவசியம்' – முகமது ஜுபைர் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன?

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, மாற்றுக் கருத்துகளை உடையவர்களின் குரல்களும் ஜனநாயகத்துக்கு இன்றியமையாதவை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் (Fact Check) ‘ஆல்ட் நியூஸ்’ என்ற வலைதள செய்தி நிறுவனத்தில் இணை நிறுவனராக இருப்பவர் முகமது ஜுபைர். சமூக பிரச்னைகள் குறித்து அன்றாடம் குரல் கொடுத்து வரும் இவர், மத்தியில் ஆளும் பாஜகவை பல்வேறு … Read more

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் சோதனை

பாட்னா: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகங்களில் பிஹார் போலீஸார் நேற்று அதிரடி சோதனையை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸார் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை பிஹார் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவரைக் கொல்ல சதி செய்ததாக பாட்னாவைச் சேர்ந்த அத்தர் பர்வேஸ், முஹம்மத் ஜலாலுதீன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தீவிரவாத அமைப்புகளுக்கும் இதில் தொடர்புள்ளதாக பிஹார் போலீஸ் தெரிவித்திருப்பதால், இந்த வழக்கு குறித்து … Read more

நாடாளுமன்றத்துக்குள் சபாநாயகரின் முன் அனுமதியின்றி துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கத் தடை..!

நாடாளுமன்றத்துக்குள் அறிவிப்பு பலகைகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில், மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேள்வித்தாள்கள், துண்டு பிரசுரங்கள், பத்திரிகை குறிப்புகள் உள்ளிட்டவைகளை சபாநாயகரின் முன் அனுமதியின்றி விநியோகிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Source link