செய்தி நிறுவனங்களுடன் கூகுள், பேஸ்புக் வருவாயை பகிர வேண்டும் – IT சட்டத்தில் திருத்தம்?

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள், செய்தி வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்தை தங்கள் தளங்களில் காண்பிப்பதன் மூலம் சம்பாதித்த வருவாயை விரைவில் அந்தந்த நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 2021 டிசம்பரில் இந்திய அரசாங்கம், பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் வெளியீட்டாளர்களின் செய்தி உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்தும் திட்டம் இல்லை என்று தெரிவித்தது. இருப்பினும், இந்தியா டுடே குழுமம் உட்பட … Read more

“அத்தியாவசிய பொருட்களை வாங்க இலங்கைக்கு கடன் அளிக்கும் ஒரே நாடு இந்தியா” – இலங்கை அமைச்சர்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கடன் உதவி அளிக்கும் ஒரே நாடு இந்தியாதான் என்று இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா தெரிவித்துள்ளார். அசாதாரண சூழ்நிலையில் உள்ள இலங்கைக்கு உதவுமாறு பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இலங்கைக்கு உதவும் ஒரே நாடு இந்தியாதான் என்றும் அவர் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் எரிபொருள் உதவி கேட்டு பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் உதவி கிடைக்கும் என்று … Read more

பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு மீது மிகுந்த மரியாதை உண்டு. எனினும், யஷ்வந்த் சின்காவுக்கு தான் முழு ஆதரவு : ஆம் ஆத்மி

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு, ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜ கூட்டணி தரப்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரான பழங்குடி பிரிவைச் சேர்ந்த திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில், … Read more

'தேர்தல் நேரத்து இலவச அறிவிப்புகள் ஆபத்தானவை' – பிரதமர் கருத்துக்கு கேஜ்ரிவால் பதிலடி

புதுடெல்லி: தேர்தல் நேரத்து இலவச அறிவிப்புகள் ஆபத்தானவை என எச்சரித்துப் பேசிய பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் … Read more

இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்; 2 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேருக்கு புது வாழ்வு.! மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி

புனே: மகாராஷ்டிராவில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் மூலம் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 5 பேருக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தி கமாண்ட் ஹாஸ்பிடல் சதர்ன் கமாண்ட் மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். மூளைச்சாவு அடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற அவரது உடலை தானம் செய்ய, அந்த பெண்ணின் குடும்பத்தினர் சம்மதித்தனர். அதையடுத்து துரிதமாக செயல்பட்ட மருத்துவக் குழுவினர் முக்கிய உடல் உறுப்புகளை அகற்றி பாதுகாத்து … Read more

ஹைதராபாத்தில் அஜ்மீர் தர்கா மதபோதகர் கைது

ஜெய்ப்பூர்: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரி நாடு முழுவதிலும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அஜ்மீர் நிஜாம் கேட் பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் தர்கா மதபோகர் சையது கோஹர் சிஸ்டி பேசினார். நுபுர் சர்மாவின் தலையை கொண்டு வருவோருக்கு தனது வீட்டை பரிசாக வழங்குவதாக அப்போது அவர் கூறினார். இது தொடர்பாக சிஸ்டி மீது தர்கா … Read more

இனி இரண்டாவது திருமணம் செய்ய அரசிடம் அனுமதி பெற வேண்டும் – எந்த மாநிலத்தில் தெரியுமா?

அனைத்து அரசு அதிகாரிகளும் தங்களது திருமண நிலை குறித்து தெரிவிக்கவும், தேவையான அனுமதி பெற்ற பின்னரே இரண்டாவது திருமணத்திற்கு தகுதி பெறவும் மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, இரண்டாவது திருமணம் செய்யத் திட்டமிடும் எந்தப் பணியாளரும் முதலில் தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வ விவாகரத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும். பணியாளரின் முதல் மனைவி அல்லது கணவன் எதிர்த்தால், இரண்டாவது மனைவி அல்லது கணவனுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படும். இதற்கிடையில், அரசு ஊழியர் … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா : பிரதமர் மோடியை நேரில் அழைக்க தமிழக எம்.பி.க்கள் டெல்லி பயணம்

சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வரும் 19ம் தேதி பிரதமர் மோடியை அழைக்க தமிழக எம்.பிக்கள் டெல்லி செல்கின்றனர்.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில், 187 நாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் … Read more

சரமாரியாக தாக்கிக் கொண்ட இளம்பெண், இளைஞர்.. டெல்லி மெட்ரோ ரயிலில் பரபரப்பு

டெல்லி மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவரும், இளைஞரும் சரமாரியாக சண்டை போட்டுக்கொண்ட தேதி குறிப்பிடப்படாத காட்சி இணையத்தில் பரவி வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணித்த பெண் ஒருவர், தான் வாங்கிய ஆடையின் மதிப்பு ஆயிரம் ரூபாய் என தன்னுடன் பயணித்த ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ஆடை 150 ரூபாய்க் கூட மதிப்பு பெறாது என நண்பர் விமர்சித்துள்ளார். गर्लफ्रेंडने बॉयफ्रेंडला काढलं बुकलून, दिल्ली मेट्रोमधील व्हिडीओ व्हायरल pic.twitter.com/bO7BXnYFZ4— Mandar (@mandar199325) … Read more

‘என்னை கடத்தியது யாசின் மாலிக்’ – முன்னாள் முதல்வரின் மகள் வாக்குமூலம்

ஜம்மு: என்னை கடத்தியது யாசின் மாலிக் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமதுவின் மகள் ரூபியா ஜம்மு நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம் அளித்தார். காஷ்மீரை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்தி முகமது. காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த 1989-ம் ஆண்டு அவர் மத்திய அமைச்சராக பதவி வகித்தார். அந்த ஆண்டில் டிசம்பர் 8-ம் தேதி முப்தி முகமதுவின் மகள் ரூபியாவை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவரை … Read more