சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசில் குழப்பம்; முதல்வருடன் கருத்து வேறுபாடு: ஊரக அமைச்சர் ராஜினாமா

புதுடெல்லி: சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பதவியிலிருந்து டி.எஸ்.சிங் தியோ நேற்று முன்தினம் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், சுகாதாரம் மற்றும் குடும்பநலம், மருத்துவக் கல்வி, 20 அம்ச திட்ட அமலாக்கம் மற்றும் வணிக வரித் துறை அமைச்சர் பதவியில் தியோ தொடர்வதாக கூறப்படுகிறது. ஆனால் பதவி விலகல் கடிதம் … Read more

நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி.. 15 பேர் மீட்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். 15 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பேருந்து, மகாராஷ்டிர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தாகும். இது இந்தூரிலிருந்து புனேவுக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆற்றில் உள்ள பாலத்தில் பஸ் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தடுமாறி தலைகீழாக ஆற்றில் கவிழ்ந்தது. பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்து ஆற்றில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் தர் மாவட்டத்தில் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களிப்பு..!

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாக்களித்தனர். குடியரசுத் தலைவர் தேர்லில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.பி.க்களும் வாக்களித்தனர். கொரோனாவிலிருந்து … Read more

துணை ஜனாதிபதி தேர்தல் : பாஜக வேட்பாளர் ஜெகதீப் தங்கருக்கு அதிமுக முழு ஆதரவு : ஓ பன்னீர் செல்வம் ட்வீட்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன்  முடிகிறது. இதையொட்டி, புதிய துணை ஜனாதிபதிக்கான  தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது.  இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில்  துணை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவை நிறுத்த முடிவு … Read more

உத்தவ் தாக்கரே அணியினர் தாக்கல் செய்த மனு – உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் விசாரணை

ஷிண்டே அரசு சட்டசபையில் வெற்றி பெற்றது, தகுதிநீக்க நோட்டீஸ் போன்றவை சட்டவிரோதம் என்று கூறி உத்தவ் தாக்கரே அணியினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வரும் 20ஆம் தேதி அன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது. சிவசேனா அதிருப்தி அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தார். அவர் கடந்த மாதம் 30ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்தநிலையில் கடந்த 3-ஆம் தேதி சட்டசபையில் புதிய சபாநாயகர் தேர்தல் … Read more

மீண்டும் ‘கப்பர் சிங் டேக்ஸ்’- இது பாஜகவின் மாஸ்டர் கிளாஸ்: ராகுல் காந்தி கடும் சாடல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை அழித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தியமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு … Read more

President Election: ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடி வாக்களித்தார்

குடியரசுத் தலைவர் தேர்தலில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். இந்திய திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இன்று நடைபெற்று வருகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் … Read more

சிசிடிவி கேமரா உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்களை அமைக்கும் டெல்லி அரசு

டெல்லியில், சிசிடிவி கேமரா உள்பட அதிநவீன வசதிகளுடன் கூடிய 1,397 டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்களை அமைக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 35 லட்சம் பயணிகள் பயனடைய உள்ள நிலையில், பேருந்துகள் எப்போது பேருந்து நிறுத்தத்திற்கு வரும், அதன் பயண நேரம், சேருமிடம் உள்பட பல தகவல்களை டிஜிட்டல் திரையில் பயணிகள் அறியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அவசரகால பொத்தான் (Panic button), சிசிடிவி கேமரா உள்பட பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார்..!!

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

கட்டுக்கடங்காமல் செல்லும் மக்கள் போராட்டம் – இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில், அங்கு மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியதை அடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருகட்டமாக, அதிபர் மாளிகை சூறையாடப்பட்டது. இதையடுத்து, உயிருக்கு பயந்து கோட்டாபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பியோடினார். அதன் பிறகு தற்போது சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கிருந்தபடியே, தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த அவர், இடைக்கால அதிபராக ரணில் விக்ரசிங்கவை நியமித்தார். அதன்படி, ரணில் … Read more