மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்,டீசல் விலை 3 ரூபாயும் குறைப்பு

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூவாயும் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் பாஜக – சிவசேனா அரசு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றபோது, பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே அறிவித்தார். அதன்படி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டுவரியில் 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் 3 ரூபாயும் குறைக்கப்படுவதாக  அறிவித்துள்ளார். Source link

மகாராஷ்டிராவில் 11 மாவட்டங்களுக்கு கனமழை..மும்பையில் பருவமழை தீவிரம்..: வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்

மும்பை: மும்பையில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பெய்த இடைவிடாத மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மும்பையின் உயிர்நாடியாக விளங்கும் மின்சார ரயில் போக்குவரத்தில் மழையின் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் ரயில்கள் காலதாமதமாக இயங்கியது. அந்தேரி மிலன் சுரங்கப்பாதையில் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. குர்லா கமானி சந்திப்பு, தேவ்னார் நீலம் ஜங்ஷன், … Read more

தெலங்கானாவில் பலத்த மழை: பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் உட்பட அனைத்து மாவட்டங்களிலிலும் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. பல அணைகள் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால் கடந்த திங்கட்கிழமை 11-ம் தேதி முதல் நேற்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழை … Read more

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை பாதிப்பு?

கேரளாவில் குரங்கம்மை அறிகுறிகளுடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் வந்த பிறகே அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என தெரியவரும் என அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். Source link

நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களை காவி உடையில் வரச்சொல்வார்களா?: காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் கேள்வி

டெல்லி: நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களை காவி உடையில் வரச்சொல்வார்களா? என காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பேசக்கூடாது என்ற அறிவிப்புக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.   

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சி வந்த கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்பே குரங்கம்மை குறித்து உறுதியாக … Read more

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: கர்நாடக கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில், அதனை கண்டித்து இந்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு கல்லூரிகளில் வன்முறை வெடித்ததால் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து உடுப்பியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் சிலர், ஹிஜாப் தடையை நீக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் 15-ம் தேதி, “ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான … Read more

கணவரை பிரிந்து வாழும் பெண், குழந்தையுடன் வெளிநாடு செல்வதை தடுக்க முடியாது – மும்பை உயர் நீதிமன்றம்

பதவி உயர்வு பெற்று வெளிநாட்டு பணிக்குச் செல்லும் பெண், தனது 9 வயது மகளை அழைத்துச் செல்வதை தடுக்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவரை பிரிந்த பெண் பொறியாளர் ஒருவர், 2015ஆம் ஆண்டு முதல் தனது மகளை தனியே வளர்த்து வருகிறார். அவருக்கு போலந்தில் பணியாற்ற 2 ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்த நிலையில், குழந்தையை உடன் அழைத்து செல்வதற்கு பிரிந்து வாழும் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் … Read more

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே யானைகள் தஞ்சம் – பட்டிமாளம் கிராம மக்கள் அச்சம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் எச்சாிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள பகுதிகளில் ஒன்று அட்டப்பாடி. அங்குள்ள அகழி பஞ்சாயத்து பட்டிமாளம் கிராமத்தில் யானை கூட்டமானது மலைப்பகுதியிலிருந்து சமவெளி பகுதிக்கு வந்துள்ளது. அப்பகுதி மக்கள் எடுத்துள்ள யானை கூட்டங்களின் வீடியோ காட்சி சமூக வளைத்தளங்களில் பரவி  வருகிறது. இந்த யானைகள் கோடை காலங்களில் புதா் காடுகளில் வசிப்பவை. தற்போது மழைக்காலம் … Read more

#BREAKING:- முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவமனையில் பரிசோதனை..!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருதோடு, தடுப்பூசி பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடல் சோர்வு சற்று அதிகமாக இருந்தது. மருத்துவர்கள் பரிசோதித்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் … Read more