வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது

புதுடெல்லி: ஜேபி இன்ஃபராடெக் லிட். எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் கவுரை, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. டெல்லி அருகேயுள்ள நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2007 முதல் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜேபி இன்ஃபராடெக் லிட். குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களைக் கட்டும் இந்நிறுவனம், நொய்டாவில் இருந்து ஆக்ரா வரையிலான 165 கிலோ மீட்டர் தொலைவுள்ள ஆறு வழி எக்ஸ்பிரஸ் வழித்தட பரமாரிப்பையும் … Read more

“ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல” – உமர் அப்துல்லா கருத்து

ஜம்மு: ‘ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல. ஒரு சிலர் மட்டுமே அமைதியைக் கெடுக்கிறார்கள்’ என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்த முதல்வர் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த மதமும் இவ்வளவு கொடூரமாக அப்பாவிகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடரும். ஆனால் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், … Read more

டெல்லி சம்பவத்துக்குப் பின் அதிகம் கவனிக்கப்படும் அல் பலா பல்கலை.யின் நிறுவனர் பின்புலம் என்ன?

புதுடெல்லி: அல் பலா பல்கலைக்கழக நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான ஜாவெத் அகமது சித்திக்கி, ரூ.7.5 கோடி மோசடி வழக்கில் கடந்த 2001-ல் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் முகமது நபி, அல் பலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் என்பதும், இதே மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்களாக பணியாற்றிய மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதும் … Read more

தவறான தகவல்கள் அளித்த விவகாரம்: அல் பலா பல்கலை.க்கு என்ஏஏசி நோட்டீஸ்

புதுடெல்லி: தேசிய மதிப்பீடு மற்றம் அங்கீகார கவுன்சிலின் அங்கீகாரம் இருப்பதாக தவறான தகவலை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, அல் பலா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மதீப்பீடு செய்து சான்றிக்கும் பணியை தன்னாட்சி அரசு அமைப்பான தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பு, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் … Read more

சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு? – தலைமை மாற்ற சர்ச்சைக்கு டி.கே. சிவகுமார் பதில்

பெங்களூரு: “நானும் முதல்வர் சித்தராமையாவும் இணைந்து பணியாற்றி வருகிறோம். சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கேள்வி எழுப்பினார். 2028 ஆம் ஆண்டில் சித்தராமையா தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்தவுடன் டி.கே.சிவகுமார் மீண்டும் முதல்வராவார் என்று கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியது சலசலப்பை உருவாக்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.கே.சிவகுமார், “தற்போது உள்ள நிலையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமை ஒற்றுமையாக … Read more

மேகேதாட்டு அணை திட்ட வரைவு அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

புதுடெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு, முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறி விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், கர்நாடகாவின் இந்த கோரிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் … Read more

“வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடந்தால்…” – தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை!

பாட்னா: வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நிகழ்ந்தால் அதை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிஹார் சட்டப்பேரவையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் ஆர்ஜேடி கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், வாக்கு எண்ணிக்கையின்போது எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் … Read more

நிதிஷ் குமார் vs தேஜஸ்வி யாதவ்: பீகாரில் ஆட்சியை தீர்மானிக்கும் பெண்கள்… அரியணை யாருக்கு?

Bihar Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் உருவெடுத்துள்ளனர். இதுகுறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.

டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி: காஷ்மீரில் 13 இடங்களில் உளவுப்பிரிவு போலீஸார் சோதனை

ஸ்ரீநகர்: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக காஷ்மீரில் 13 இடங்களில் பயங்கரவாத தடுப்பு உளவுப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக முதலில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-க்கு மாற்றி மத்திய … Read more

ஜெய்​ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்த தீவிரவாதி உமர் மனைவி

புதுடெல்லி: புல்​வாமா தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​வரின் மனைவி சில வாரம் முன்பு ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பில் சேர்ந்​தது தெரிய​வந்​துள்​ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா நகரில் பாது​காப்​புப் படை​யினரின் வாக​னங்​கள் மீது தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 41 வீரர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்ட உமர் பாருக்​கின் (என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டார்) மனைவி அபிரா பிபி, ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பின் மகளிர் பிரி​வான ஜமாத்​-உல்​-மொமினட்​டில் கடந்த சில வாரங்​களுக்கு முன்பு சேர்ந்​தார். அவருக்கு அந்த அமைப்​பின் … Read more