ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சீருடை வாங்கி தந்த பள்ளி முதல்வர்… சீருடை அணியும் நடைமுறையை கடைப்பிடித்த ஆசிரியர்கள்..!

பீகாரின் கயா மாவட்டத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் ஆசிரியர்களும் சீருடை அணிந்து வருகின்றனர். நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பணிபுரியும் முதல்வர் நாகேஷ்வர் தாஸ், தன்னுடைய தனிப்பட்ட நிதியிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சீருடை வாங்கி தந்துள்ளார். மாணவ, மாணவியர்களிடம் வேற்றுமை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக சீருடை அணியும் நடைமுறையை அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். Source link

பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் வேகமாக நிரம்பும் அணைகள்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவேரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு  1 லட்சம் கன அடியாக  அதிகரிக்கப்பட்டுள்ளது. காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் வேகமாக நிரம்புவதால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவேரியில் திறந்துவிடப்படுகிறது. கே.ஆர்.எஸ் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 74 ஆயிரம் கன அடி நீர் … Read more

தெலுங்கானாவில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு – 34 ரயில் சேவைகள் ரத்து..!

தெலுங்கானாவில் பெய்துவரும் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பத்ராசலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் இருந்து வெளியேறுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கனமழை காரணமாக ஜூலை 11 முதல் 13-ம் தேதி வரை 34 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  Source link

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 21ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 21ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி ஆஜராகாத விலையில் அமலாக்கத்துறை மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளது.

மும்பை மெட்ரோ ரயில் எதிர்ப்பு போராட்டத்தில் குழந்தைகள் பங்கேற்ற விவகாரம்.. ஆதித்யா தாக்கரே மீது வழக்குப்பதிவு.!

மெட்ரோ ரயில் எதிர்ப்பு போராட்டத்தில் குழந்தைகளை பங்கேற்க செய்த முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மும்பை காவல் ஆணையருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும்,  நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மும்பை ஆரே பால்பண்ணைக் காட்டில் மெட்ரோ ரயில் பணிமனை அமைப்பதை எதிர்த்து ஆதித்யா தாக்கரே தலைமையில் பல்வேறு அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். Source link

கேரளாவுக்கு கடத்திய மினி டெம்போ சிக்கியது; 900 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பைபர் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை தமிழக வியாபாரிகள்  வாங்கி கேரளாவிற்கு பல்வேறு வகையான வாகனங்களில் கடத்தி சென்று விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. இதை அவ்வப்போது காவல்துறையினர் மடக்கி பிடித்து வருவாய்துறையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.இதற்கிடையே நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் இனையம் பகுதியில் இருந்து  படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை மினி டெம்போவில் ஏற்றி கேரளாவுக்கு கடத்தி செல்வதாக நித்திரவிளை காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டு … Read more

புதிய நாடாளுமன்றக் கட்டிட மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்தார். நாடாளுமன்றக் கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் உரையாடினார். இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டரில், “இன்று காலை, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. “நாடாளுமன்றக் கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் உரையாடினேன். … Read more

6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு மாற முடிவு?

கோவாவில் தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவரை பதவிநீக்கம் செய்யுமாறு, சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும் கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 6 பேர் பாஜகவுக்கு மாற திட்டமிட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில் திகம்பர் காமத்  மற்றும் மைக்கேல் லோபோ ஆகிய எம்.எல்.ஏ.க்களை பதவியை விட்டு நீக்குமாறு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்புதான் லோபோ பாஜகவிலிருந்து விலகி … Read more

ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் 2 வயது தம்பியின் சடலத்தை மடியில் சுமந்த 8 வயது அண்ணன்; ம.பி-யில் மனதை காயப்படுத்திய காட்சி

போபால்: ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் தனது 2 வயது தம்பியின் சடலத்தை 8 வயது அண்ணன் சுமந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் பலரது மனதையும் காயப்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் அம்பாவில் உள்ள பட்ஃப்ரா கிராமத்தில் வசிக்கும் புஜாராம் என்பவர், மொரீனா மாவட்ட மருத்துவமனையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு வயது மகனை சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தான். இறந்த உடலை 30 கிலோமீட்டர் தொலைவில் … Read more

உத்தவ் தாக்கரேவுக்கு அடுத்த நெருக்கடி – 16 சிவசேனா எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கும்படி, பெரும்பான்மையான எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். இதை அடுத்து, பெரும்பான்மை இல்லாதததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் … Read more