டெல்லி செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் 3 மணி நேரம் காரை விட்டு உமர் முகமது இறங்காதது ஏன்?

புதுடெல்லி: டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் டாக்டர் உமர் முகமது 3 மணி நேரம் காரை விட்டு இறங்காதது ஏன் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் டாக்டர் உமர் முகமது கார் வெடி குண்டை வெடிக்க செய்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, பரிதாபாத்தில் இருந்து டெல்லி வரையில் … Read more

மேலும் ஒரு மருத்துவரை தேடும் போலீஸார்

புதுடெல்லி: டெல்​லி​ குண்டு வெடிப்பு சம்​பவத்​தில், புல்​வா​மாவைச் சேர்ந்த முஜம்​மில், லக்​னோவைச் சேர்ந்த ஷாகின், காஷ்மீரின் குல்​காமை சேர்ந்த ஆதில், புல்​வா​மாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைத​ரா​பாதைச் சேர்ந்த அகமது மொஹி​யுதீன், நகர் மகா​ராஜா ஹரிசிங் மருத்​து​வ​மனை டாக்​டர் தஜமுல் ஆகிய 6 மருத்​து​வர்​கள் சம்​பந்​தப்​பட்​டுள்​ளனர். இதில் சிலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து என்ஐஏ விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் இந்த சம்​பவத்​தில் ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த மருத்​து​வர் நிஸார் உல் ஹசன் … Read more

படித்தவர்களைக் கூட பயங்கரவாதிகளாக மாற்றும் சூழ்நிலை என்ன? – ப. சிதம்பரம் எழுப்பும் கேள்வி!

Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி மாலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், பயங்கரவாத சம்பவம் என்ற மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் முக்கிய கேள்வியை எழுப்பி உள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பர விவகாரம்: மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ் ராஜ்

ஹைதராபாத்: ஆன்​லைன் சூதாட்ட செயலி விளம்​பரத்​தில் நடித்த நடிகர் பிர​காஷ் ராஜ், ரானா, விஜய் தேவர​கொண்​டா, மஞ்சு லட்​சுமி உட்பட 29 பேருக்கு ஹைத​ரா​பாத் சிஐடி சிறப்பு விசா​ரணை குழு, நோட்​டீஸ் அனுப்பி ஒவ்​வொரு​வராக விசா​ரணைக்கு அழைத்து விளக்​கம் கேட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், நேற்று நடிகர் பிர​காஷ் ராஜ் இந்த விவ​காரம் தொடர்​பாக சிஐடி அலு​வல​கத்​தில் ஆஜராகி, அவர்​கள் கேட்ட கேள்வி​களுக்கு விளக்​கம் அளித்​தார்​.மேலும், சில வங்கி கணக்கு விவரங்களை​யும் அவர் சிறப்பு விசா​ரணை குழு​விடம் சமர்​பித்​தார். … Read more

அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை

புதுடெல்லி: உ.பி. லக்​னோவைச் சேர்ந்த டாக்​டர் ஷாகின், கான்​பூரில் உள்ள கணேஷ் சங்​கர் வித்​தி​யார்த்தி மருத்​து​வக் கல்​லூரி​யில் (ஜிஎஸ்​விஎம்​சி) 7 ஆண்டு விரிவுரை​யாள​ராகப் பணி​யாற்றி உள்​ளார். கடந்த 2013-ம் ஆண்​டில் அவர் நிர்​வாகத்​துக்கு எந்த தகவலும் கூறாமல் காணா​மல் போய் உள்​ளார். இதையடுத்து 2021-ல் ஷாகின் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். கான்​பூரின் பிரபல ஜிஎஸ்​விஎம்​சி.​யின் தகவல்​களின்​படி, டாக்​டர் ஷாகின் ஜனவரி 1999-ல் பிர​யாக்​ராஜ் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் பட்​டம், டிசம்​பர் 2003-ல் மருந்​தி​யலில் முதுகலைப் பட்​டம் … Read more

தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் அவதி

பெங்களூரு: தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகள் எல்​லை​யிலேயே நிறுத்​தப்​படு​வ​தால் பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர். தமிழகத்​தில் இருந்து கர்​நாடகா​வுக்கு இயக்​கப்​பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்​துகள் உரிய அனு​ம​தி, பாது​காப்புச் சான்​றிதழ் இல்​லாதவை​யாக இருப்​ப​தாகக் ​கூறி, அம்​மாநில போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் 60 பேருந்​துகளுக்கு அபராதம் விதித்​தனர். மேலும் ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்​மிட்’ விதி​களின்படி சாலை வரி விதிக்​கப்​பட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த தமிழக ஆம்னி பேருந்து உரிமை​யாளர்கள் சங்​கம் கர்​நாட​கா, … Read more

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல்: மத்திய அமைச்சரவையில் தீர்மானம்

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பூடானில் 2 நாட்கள் அரசு பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் காயம் அடைந்தவர்களை, டெல்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் நேற்று சந்தித்தார். அவர்களுடைய உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் … Read more

டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது: மெஹபூபா முப்தி

ஸ்ரீநகர்: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி. மேலும், இதில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்களுக்கு உள்ள தொடர்பை அறிந்து கவலை கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். “இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அரசு கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும். எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர்களின் தாய், தந்தை, சகோதரர், சகோதரி என உறவினர்கள் வசம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது … Read more

‘உளவியல் தாக்கத்தை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் வெளியீடு’ – தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார். ‘தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும், ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்கவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ என்று அவர் கூறினார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், “எங்களுக்குக் கிடைக்கும் கருத்துக்களின்படி பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பதற்றமாகவும் அச்சத்தோடும் இருப்பது தெரிகிறது. அவர்கள் அமைதியற்று இருக்கின்றனர். … Read more

டெல்லி குண்டுவெடிப்பில் எங்களுக்குத் தொடர்பு இல்லை: அல் ஃபலா பல்கலைக்கழகம்

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் உள்துறை அமைச்சகத்தால் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழுவை என்ஐஏ இன்று நியமித்துள்ளது. குண்டுவெடிப்பை நிகழ்ந்திய உமர் முகமது நபி, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் … Read more