கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி ரூ.20 கோடி வசூலித்து விபூதி அடித்த பூசாரிகள்..!

கர்நாடகாவின் கலாபுராகி மாவட்டத்தில் தேவலகனாபூர் கோயில் பெயரில் போலி இணையதளம் மூலம் 20 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த பூசாரிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் கோயிலின் பெயரில் 8 இணையதளங்களை உருவாக்கி பக்தர்களிடம் இருந்து வழிபாட்டுக் கட்டணம், நன்கொடை என்ற பெயரில் மோசடி செய்துள்ளனர். பல்வேறு பூஜைகளுக்காக 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்த ஐந்து பூசாரிகள், கோயிலின் உண்டியல் பணத்தையும் திருடிய … Read more

மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட குழப்பம்: சிவசேனாவின் ஆட்சி, சின்னம் பறிபோகும் அபாயம்; இன்று மீண்டும் கூடியது செயற்குழு கூட்டம்; என்ன செய்ய போகிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. சிவசேனாவின் ஆட்சி, சின்னம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்தக்கட்டமாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வரும் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மாயமானதில் இருந்து மகாராஷ்டிர அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சூரத் சென்ற அவருடன் 11 … Read more

8வது மாடியில் இருந்து கீழே விழுந்த நோயாளி.. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அரங்கேறியிருக்கிறது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ளது நியூரோ சயின்ஸ் மருத்துவமனை. அங்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுதிர் அதிகாரி என்ற நோயாளி ஒருவர் எப்படியோ அந்த மருத்துவமனையில் எட்டாவது மாடியின் ஜன்னல் வழியாக வெளியேறி இருக்கிறார். விஷயம் அறிந்த சுதிரின் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க அவர்கள் மூலம் போலீசுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் … Read more

5 ஆண்டுகளில் ஜவுளி துறை 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடையும்-அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜவுளி துறை 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடையும் என்றும், அதில் 40 சதவீதம் ஏற்றுமதியாக இருக்கும் எனவும் மத்திய வர்த்தகதுறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் முருகனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பொருளாதார வளர்ச்சியில் ஜவுளி துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். ஜவுளி துறையின் வளர்ச்சிக்காக, மேலும் ஒரு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை … Read more

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியிடம் ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்கா

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா ஆதரவு கோரினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பத்றகான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதில் பாஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பிரிவை சேர்ந்த பாஜ பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் நேற்று, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் … Read more

“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” – சஞ்சய் ராவத்

மகாராஷ்ட்ராவில் அரசியல் குழப்பங்கள் உச்சத்தை தொட்டிருக்கின்றன. ஆட்சி கவிழும் சூழலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், அதிருப்தி அமைச்சர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்களது பதவிகளை இழப்பார்கள் என்று சிவசேவை கட்சி எம்பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனாவின் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே, அசாமில் உள்ள சொகுசு விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் … Read more

மகாராஷ்டிராவில் மீண்டும் தாமரை? – பட்னவிசுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு!

சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னவிஸை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை … Read more

ஜிஎஸ்டி இழப்பீட்டு மேல் வரி விதிப்பு மேலும் 4 ஆண்டு நீட்டிப்பு

ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான மேல்வரி விதிப்பதை மேலும் நான்காண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. 2017 ஜூலை முதல் நாளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தபோது, மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஐந்தாண்டுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காகப் புகையிலை, சிகரெட், ஹூக்கா, குளிர்பானங்கள், ஆடம்பர மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான மேல்வரி விதிப்புக் காலம் ஜூன் இறுதியுடன் முடிவடைய இருந்த நிலையில் 2026ஆம் ஆண்டு மார்ச் … Read more

3000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது இந்தியா

டெல்லி: இந்தியா 3000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. WFP உடன் இணைந்து இந்தியா இதுவரை 33,500 மெட்ரிக் டன் கோதுமையை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. மே மாதம், மனிதாபிமான உதவியாக 2,000 மெட்ரிக் டன் கோதுமை அட்டாரி-வாகா எல்லை வழியாக அனுப்பப்பட்டது.

”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!

பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டதாக, பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. திரைப்படங்கள் மட்டுமின்றி பொதுவெளியிலும், சமூகவலைத்தளங்களிலும் இவர் கூறும் கருத்துக்களும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து கருத்து கூறி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. தனது … Read more