இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வந்த ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஐஏஎஸ் அதிகாரி கைது

குந்தி: ஜார்கண்ட்டில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வந்த இமாச்சல் பிரதேச ஐஐடி மாணவியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி ரியாஸ் அகமதுவை போலீசார் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் இன்டர்ன்ஷிப்பிற்காக வந்த இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஐஐடி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜார்க்கண்ட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரியாஸ் அகமதுவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து குந்தி காவல் கண்காணிப்பாளர் அமன் குமார் கூறுகையில், ‘இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக எட்டு … Read more

எல்.முருகன் முதல் ரஜினி வரை .. ராஜ்யசபா எம்பி ஆகும் இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்து!

மாநிலங்களவை எம்பி ஆகும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பல்வேறு துறை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது வாழ்த்துகளை தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “கிராமிய இசையையும், ஆன்மிக இசையையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று அடி அடியாக ரசிக்க வைத்த இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிப்பது தமிழகத்திற்கும்,தமிழருக்கும் பெருமை…. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்… இசைஞானி இளையராஜா அவர்களின் இணையற்ற இசைக்கு … Read more

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா – குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு?

புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்சிபி சிங் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தங்கள் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக இருவரும் இன்று ராஜினாமா செய்துள்ளனர். இருவரது ராஜினாமாவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக, இருவரும் தங்களின் கடைசி அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது இருவரின் சேவையையும் பிரதமர் மோடி பாராட்டினார். முக்தர் அப்பாஸ் நக்வி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் சிறுபான்மை விவகாரங்கள் துறை … Read more

மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, ராம் சந்திர பிரசாத் சிங் ஆகியோர் ராஜினாமா

மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, ராம் சந்திர பிரசாத் சிங் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் இருவரது பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனிடையே, டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சவைக் கூட்டத்தில், முக்தர் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி.சிங் ஆகிய இருவரும் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் ஆற்றிய பங்களிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். ராஜினாமா செய்துள்ள முக்தர் அப்பாஸ் நக்வி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படலாம் எனவும் தகவல் … Read more

பாதுகாப்பில் கவனக்குறைவு; 2 மாதத்தில் 7வது கோளாறு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ்..!

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தொடர்ந்து 2 நாட்களாக பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சம்பவங்களில் சிக்கியதை அடுத்து விளக்கம் அளிக்க கோரி விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அளித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில் 7வது முறையாக சிக்கியுள்ளது. அதிலும் நேற்றும், இன்றும் அடுத்தடுத்து நடுவானில் கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று கொல்கத்தாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்ற ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானத்தில் வானிலை ரேடார் கருவி வேலை செய்யாதது நடுவானில் … Read more

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் இளையராஜா – பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, ‘பாகுபலி’ திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் மகத்தான இசையமைப்பாளர் இளையராஜா. 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் ‘பத்ம விபூஷண்’ விருதையும் பெற்றார் இளையராஜா. 5 … Read more

சிறுவர்கள் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் 3 பேர் காயம்

ஆந்திர மாநிலம் குண்டூரில் சிறுவர்கள் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். டெலிபோன் எக்சேஜ் சாலையில் வந்த கார் திடீரென வேகமெடுத்து சாலையோரம் நின்ற ரிக்ஷா, இருசக்கர வாகனங்கள் மற்றும் பஞ்சர் கடையில் மோதி நின்றது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். காரை ஓட்டி வந்த 2 சிறுவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.     Source link

ஆட்சியில் இருந்த காலத்தில் கட்சி பொறுப்பை ஏக்நாத்திடம் ஒப்படைத்தது தப்பு: உத்தவ் தாக்கரே வருத்தம்

மும்பை: ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, கட்சிப் பொறுப்பை ஏக்நாத்திடம் ஒப்படைத்தேன். ஆனால் அவர் என் முதுகில் குத்திவிட்டார் என்று உத்தவ் தாக்கரே வருத்தத்துடன் கூறினார். சிவசேனா அதிருப்தி தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே குறித்து, சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே கட்சித் தொண்டர்களிடம் கூறுகையில், ‘எனது முதுகில் ஏக்நாத் ஷிண்டே குத்திவிட்டார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது, சிவசேனா கட்சியின் பொறுப்பை ஏக்நாத் ஷிண்டேவிடம் … Read more

19 மாதங்களில் ரூ.358.50 உயர்வு.. 2021 ஜனவரி முதல் சிலிண்டர் விலை கடந்து வந்த பாதை!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாதாந்திர பட்ஜெட்டில் தூண்டுவிழச் செய்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 19 மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.358.50 உயர்ந்துள்ளது. 2021 ஜனவரி முதல் இன்று வரை சிலிண்டர் விலை கடந்து வந்த பாதை இதோ! ஜனவரி 1 – ரூ.710.00 பிப்ரவரி 25 – ரூ.810.00 மார்ச் 1 – ரூ.835.00 ஏப்ரல் 1 – ரூ.825.00 ஜூலை 1 – ரூ.850.00 ஆகஸ்ட் … Read more

நுபுர் சர்மா, பாஜக மூத்த தலைவர் கபில் சர்மாவுக்கு கொலை மிரட்டல் – அஜ்மீர் தர்காவின் காதீமை தேடும் போலீஸார்

புதுடெல்லி: டெல்லி பாஜக தலைவர் கபில் சர்மா, அஜ்மீரில் நுபுர் சர்மா மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, தொலைக்காட்சி விவாதத்தில் முஸ்லிம்களின் இறைத்தூதரை விமர்சனம் செய்தார். இதற்காக, பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் தாக்கமாக, உதய்பூரில் தையல் கடை நடத்தும் கன்னைய்யா லால் டெனி (40), கடந்த ஜூன் 28-ல் வெட்டிக்கொல்லப்பட்டார். இதேபோல், மகாராஷ்டிராவின் … Read more