3 மக்களவை, 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 26-ல் முடிவுகள்: இடைத்தேர்தலின் தாக்கம் என்ன?

புதுடெல்லி: ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மக்களவை 3, சட்டப்பேரவையின் 7 தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்துள்ளது. நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் இதன் முடிவுகளின் தாக்கம் என்ன எனும் கேள்வி எழுந்துள்ளது. இதில் டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. திரிபுராவின் நான்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் முதல்வர் மாணிக் சாஹா ஒரு முக்கிய வேட்பாளராக உள்ளார். பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் … Read more

அரசியல் நெருக்கடி: மும்பையில் 144 தடை உத்தரவு!

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். ஏக்நாத் ஷிண்டே உடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 50 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், சிவசேனா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மட்டும் 40 … Read more

மராட்டிய அரசியல் நெருக்கடி: தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு.!

மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ள நிலையில், தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினரின் பேரணிக்கும், கூடி முழக்கங்களை எழுப்புவதற்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 35 சிவேசனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. Source link

மனைவி பிரசவத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.6 கோடியை இழந்த வங்கி மேலாளர்

பெங்களூரு: பெங்களூருவில் வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து, இளம்பெண்ணுடன் ‘டேட்டிங்’ செல்ல ரூ.6 கோடியை வங்கி மேலாளர் இழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு அனுமந்தநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளராக ஹரிசங்கர் என்பவர் இருந்து வருகிறார். இவர் ஜெயநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த வங்கியில் அனிதா என்பவர் தனது கணக்கில் ரூ.1.32 கோடியை டெபாசிட் செய்தார். … Read more

ஜெர்மனி புறப்பட்டார் பிரதமர் மோடி! 2 நாள் பயணத்தில் இவர்களையெல்லாம் சந்திக்கிறார்!

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜெர்மனி செல்கிறார். 48ஆவது ஜி-7 மாநாடு ஜெர்மனியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பை விடுத்திருந்தார். அதன்பேரில் அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜெர்மனி செல்கிறார். G7 என்பது பொருளாதார ரீதியாக முன்னேறிய உலகின் ஏழு நாடுகளின் முறைசாரா குழுவாகும். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா … Read more

ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் – 8 பேர் கைது

வயநாடு: கேரளாவில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் அலுவலம் சூறையாடப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். வயநாட்டில் அவரது அலுவலகம் உள்ளது. நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ராகுல் காந்தியின் அலுவலகத்தில் புகுந்த சிலர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. இதனால் பெரும் … Read more

நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் கேரளாவில் அமைப்பு

நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை டாடா நிறுவனம் கேரள மாநிலத்தில் அமைத்துள்ளது. காயங்குளத்தில் உள்ள கழிமுகத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த மின் உற்பத்தி நிலையம் 101 புள்ளி 6 மெகா வாட் உற்பத்தி திறன்கொண்டது என டாடா பவர் சோலார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிலையான ஆற்றல் இலக்குகளை அடைவதற்கான முக்கிய நடவடிக்கையாக இதனை கருதுவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீர் சின்ஹா தெரிவித்துள்ளார்.  Source link

திருப்பதி கோயிலில் ரூ.4.30 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். நேற்று திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் இலவச தரிசன வரிசையில் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று 71,589 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41,240 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.30 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சனிக்கிழமையான இன்று காலை வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள … Read more

காசி, காயாவுக்கு விமான சுற்றுலா அறிவித்தது IRCTC.. பேக்கேஜ் விவரம் என்னென்ன தெரியுமா?

IRCTC சார்பில் காசிக்கு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இதுவரை மதுரையிலிருந்து காசி, கயா போன்ற இடங்களுக்கு ரயில் மூலம் சுற்றுலா நடத்தி வந்தது. அந்த வகையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சியிலிருந்து கயா, வாரணாசி, அலகாபாத் மற்றும் அயோத்தியா போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த இருக்கிறது. அதற்கான 7 நாள் சுற்றுலா ஜூலை 27ம் தேதி … Read more

வெடிகுண்டு மிரட்டல் வழக்கு – தமிழக இளைஞரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் லக்னோ, உன்னாவ் மற்றும் கர்நாடகாவில் 4 இடங்களில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அலுவலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உ.பி. சுல்தான்பூர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நீல்காந்த் மணி பூஜாரி புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் தமிழகத்தின் புதுக்கோட்டைடை சேர்ந்த ராஜ் முகம்மது (22) என்பவரை கைது செய்திருந்தனர். தற்போது லக்னோ ஏடிஎஸ் படை காவலில் ராஜ் முகம்மது இருக்கிறார். இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஏடிஎஸ் … Read more