அடிக்கடி விபத்துகள் நடப்பதால் கேபிள், ரோப் கார்கள் நாடு முழுவதும் ஆய்வு: தேசிய பேரிடர் படை நடவடிக்கை

புதுடெல்லி: சமீப காலமாக அடிக்கடி விபத்துகள் நடந்தை தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தக் கூடிய ரோப்கார்கள், கேபிள் கார்களின் பாதுகாப்பு குறித்து தேசிய பேரிடர் படையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பைத்யநாத் கோயிலுக்கு செல்வதற்காக சுற்றுலா பயணிகள் ரோப்கார்களில் ஏறினர். அப்போது, இரு ரோப்கார் கேபின்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 3 பேர் பலியாயினர். அதே  போல், இமாச்சல பிரதேசம் சோலன், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள … Read more

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட விமானந்தாங்கிக் கப்பல் விக்ராந்த்: 4-ம் கட்ட கடல் ஒத்திகை நிறைவு

உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட விமானந்தாங்கிக் கப்பலான விக்ராந்த், 4-ம் கட்ட கடல் ஒத்திகை நிறைவடைந்துள்ளது. இந்த ஒத்திகையின்போது, பல்வேறு சாதனங்கள் மற்றும் விமானம் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்தக் கப்பலை, 2022 ஜுலை இறுதியில் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதுடன், ‘சுதந்திர தின அமிர்தப் பெருவிழா’-வை நினைவுகூறும் விதமாக, இந்தக் கப்பல் ஆகஸ்ட் 22 அன்று பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இந்த விமானந்தாங்கிக் கப்பலை, இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல் … Read more

தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக மேதா பட்கர் மீது வழக்குப்பதிவு

தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக மேதா பட்கர் மீது மத்திய பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2007ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை நர்மதா நவநிர்மான் அபியான் தொண்டு நிறுவனம் மூலம் பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக திரட்டப்பட்ட 13 கோடி ரூபாய் நிதியை தேச விரோத நடவடிக்கைகாக பயன்படுத்தியதாக மேதா பட்கர் உள்பட 12 பேர் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்யயப்பட்டுள்ளது.  Source link

மும்பையில் கல்லூரி மாணவர் கொலை.. இன்ஸ்டாகிராம் செயலி மூலம் 8 மணி நேரத்திற்குள் கொலையாளிகளை கைது செய்த போலீசார்.!

மகாராஷ்டிராவின் மும்பையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில், இன்ஸ்டாகிராம் செயலி மூலம் 8 மணி நேரத்திற்குள் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர். விஷால் என்ற இளைஞர் போவாய் பகுதியில் சென்றபோது 2 பேர் அவரை கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இந்நிலையில், விஷாலின் இன்ஸ்டாகிராம் கணக்கில், நண்பர்கள் பட்டியலில் இருந்த அவரது நெருங்கிய நண்பரான அல்தாபை தொடர்பு கொண்டு விசாரித்த போலீசார், உயிரிழந்தவருக்கு அஜய், அனில் ஆகியோருடன் முன்விரோதம் இருந்ததை கண்டறிந்தனர். அந்த இருவரிடமும் … Read more

இலங்கைக்கு 44,000 மெட்ரிக் டன் யூரியா வழங்கிய இந்தியா

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்திய அரசு 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஞாயிற்றுக்கிழமை வழங்கியது. விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், உணவுப் பாதுகாப்பிற்கான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் நீட்டிக்கப்பட்ட கடன் வரியின் கீழ் இவைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய பருவ சாகுபடிக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக இந்திய அரசு யூரியாவை வழங்கியுள்ளது.  Source link

மராட்டியத்தில் பெய்துவரும் தொடர் மழை: ஜூன் 1-ம் தேதியில் இருந்து இதுவரை 76 பேர் பலி

மும்பை: மராட்டியத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஜூன் 1-ம் தேதியில் இருந்து இதுவரை 76 பேர் பலியாகியுள்ளனர்.மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழைக்காலம் தொடங்கியது. இதில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ந் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.இதையடுத்து மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் … Read more

தெலங்கானாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ஐதராபாத், நிஜாமாபாத் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், மழை காரணமாக தெலங்கானாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

இண்டிகோ நிறுவனத்தின் விமான பராமரிப்புத் தொழில்நுட்பக் குழுவினர் பலர் விடுப்பு

விமானிகள், சிப்பந்திகளைத் தொடர்ந்து இன்டிகோ நிறுவனத்தின் விமான பராமரிப்புத் தொழில்நுட்பக் குழுவினர் பலரும் மொத்தமாக விடுப்பு எடுத்துள்ளனர். டெல்லி, ஐதராபாத்தில் பணிபுரியும் அந்த ஊழியர்கள், தங்களுக்கு மிக குறைவான ஊதிய உயர்வே வழங்கப்பட்டதாக கூறி விடுப்பு எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், விமான சேவை ஏதும் பாதிக்கப்படவில்லை என விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பெட்ரோல், காஸ் விலை உயர்வு தைரியம் இருந்தால் தடுத்து நிறுத்துங்கள்: மோடிக்கு சவால் விடும் மக்கள்

புதுடெல்லி: ‘காஸ், பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையும் உருவாக்கியவர் பிரதமர் மோடிதான் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்’ என ராகுல் காந்தி கூறி உள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘சமீபத்தில் ஆந்திராவில் சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு சிலை திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஆங்கிலேயர்களிடம் அல்லூரி ‘உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்’ என கூறியதை நினைவு … Read more

இலங்கை மக்களின் பக்கம் இந்தியா நிற்கும் என வெளியுறவு அமைச்சகம் தகவல்

செழிப்பு, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான இலங்கை மக்களின் விருப்பங்கள் நனவாக அவர்களின் பக்கம் இந்தியா நிற்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருநாடுகளும் நெருங்கிய பண்பாட்டுப் பிணைப்பைக் கொண்டுள்ளதாகவும், சிக்கலான காலக்கட்டத்தைக் கடக்க இலங்கை மக்களுக்கு இந்தியா துணைநிற்கும் என்றும் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு இதற்கு முன் இல்லா வகையில் இந்த ஆண்டில் 380 கோடி டாலர் கடனுதவியை இந்தியா வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. Source link