விமான பைலட், சிப்பந்திகளுக்காக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் நூலினால் ஆன சீருடைகளை அறிமுகப்படுத்தியது ஆகாசா ஏர் விமான நிறுவனம்

இந்தியாவை சேர்ந்த ஆகாசா ஏர் புதிய தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது பைலட்டுகள் மற்றும் விமான சிப்பந்திகளுக்காக, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் நூலினால் ஆன சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களது காலணிகளும் மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பரால் உருவாக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தை இந்த சீருடைகள் வலியுறுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.   Source link

இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40% அபராதம் விதிப்பு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் மெதுவாக ஓவர் வீசியதற்காக இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை இந்தியா இழந்தது.

டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு!

டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என விமானி அச்சம் தெரிவித்ததால் விமானம் பாகிஸ்தான் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி 11 விமானத்தின் இடது பக்க எரிபொருள் டேங்கில் இருந்து வேகமாக எரிபொருள் குறைவதை கண்டறிந்த விமானிகள் அதை சரிசெய்ய முயன்றும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அம்முயற்சிகள் பலனளிக்காத சூழலில் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் உதவியுடன் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி சர்வதேச விமான … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை..45 கோடி பரிவர்த்தனைகள்.. திட்டத்தை வலுப்படுத்த அரசு நடவடிக்கை..!

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் இதுவரை 45 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்… உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. அதில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார். உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து … Read more

பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம்; லீனா மீது டெல்லி போலீஸ் வழக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம்

புதுடெல்லி: பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில் பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட பெண் இயக்குனர் லீனா மணிமேகலை தனது சமீபத்திய ஆவணப் படமான ‘காளி’ போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. கனடாவில் நடைபெற்ற ‘அண்டர் தி டெண்ட்’ என்ற திட்டத்தின் கீழ் இப்படத்தின்  போஸ்டர் திரையிடப்பட்டது. சர்ச்சைக்குரிய இந்த படத்தின் போஸ்டர் டுவிட்டரில் ட்ரெண்டானது. அதில், இந்து தெய்வமான காளி … Read more

ராகுல் குறித்து தவறான செய்தி பரப்பிய டிவி நெறியாளர் – சத்தீஸ்கர், உ.பி. மாநில போலீஸ் மோதல்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தொடர்பான வீடியோவை தவறாக சித்தரித்து ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நெறியாளரை கைதுசெய்ய சென்போது சத்தீஸ்கர் காவல்துறையினருக்கும், உத்தரப்பிரதேச காவல்துறையினருக்கும் வாக்குவாதம் முற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, கேரளாவில் தனது சொந்த தொகுதியான வயநாட்டில், கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தவறு செய்தவர்கள் தெரியாமல் செய்திருப்பார்கள். அதில் சில சிறுவர்கள் கூட இருந்திருக்கிறார்கள். அவர்களை … Read more

“நுபுர் சர்மா வழக்கில் உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையை தாண்டிவிட்டது” – ஓய்வு பெற்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள் குற்றச்சாட்டு..!

நுபுர் சர்மா வழக்கில் உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையை தாண்டிவிட்டதாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தலைமை நீதிபதி ரமணாவுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இரு நீதிபதிகளின் கருத்துகள் துரதிர்ஷடமானது என்றும், இதுவரை இல்லாத வகையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் நீதிபதிகள் கருத்துகள் நீதிமன்ற இயல்பான செயலோடு ஒத்துபோகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். தன் மீதான வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி நுபுர் சர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், … Read more

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றோரு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி

கண்ட்லா: ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றோரு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் கண்ட்லாவில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் விமானி அறை ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. துணை விமானியின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

கர்நாடக ஏ.டி.ஜி.பி.யை விமர்சித்த ஐகோர்ட் நீதிபதிக்கு மிரட்டல்!

கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.ஜி.பி. சீமந்த் குமார் சிங்கை விமர்சனம் செய்ததற்காக தன்னை இட மாற்றம் செய்வதாக மிரட்டல் விடுப்பதாக அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதி சந்தேஷ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். பெங்களூர் நகர்ப்புற மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது, நில தகராறு தொடர்பாக சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக, மாவட்ட ஆணைய நீதிமன்ற ஒப்பந்த ஊழியர் சேத்தன் மற்றும் உதவி தாசில்தார் மகேஷ் ஆகியோர், 5 லட்சம் ரூபாய் … Read more

ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது…அமைச்சர் சக்கரபாணி உரை

டெல்லி: உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு தொடர்பாக இன்று டெல்லி நடைபெற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக உணவு  மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உரை ஆற்றினார். அதனை காண்போம், ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சருக்கும், ஒன்றிய இணை அமைச்சர்கள் மற்றும் அனைத்து  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் … Read more