தென்மேற்குப் பருவமழை தீவிரம் : தெலுங்கானாவில் அதிகன மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை..!

தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் 8 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்திருக்கிறது. ஹைதராபாத், நிஜாமாபாத், நிர்மல், அதிலாபாத் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதிக பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Source … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,372,303 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,372,303 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 560,186,958 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 533,065,045 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,852 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜிகாதிகளிடம் இருந்து இந்துக்களை பாதுகாக்க உதவி எண் அறிவித்தது விஎச்பி

லக்னோ: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் என பஜ்ரங் தள் என்ற தனது இளைஞர் அணியை விஎச்பி கேட்டுக் கொண்டது. இந்நிலையில் ஜிகாதி அமைப்புகளிடமிருந்து இந்துக்களை பாதுகாக்க நாட்டின் 20 பகுதிகளை சேர்ந்த பஜ்ரங் தள் தொண்டர்களின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் 44 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம் மாநிலம், மேற்கு உ.பி. கான்பூர், காசி, கோரக்பூர் … Read more

5ஜி செல்போன் அலைக்கற்றை ஏலம் அம்பானிக்கு போட்டியாக களத்தில் குதித்தார் அதானி: கடைசி நேரத்தில் நடந்த பரபரப்பு

புதுடெல்லி: 5ஜி செல்போன் சேவைக்கான அலைக்கற்றையை வாங்குவதற்கான ஏலத்தில், அம்பானிக்கு போட்டியாக கடைசி நேரத்தில் அதானி நிறுவனம் களமிறங்கி உள்ளது.இந்தியாவில் விரைவில் 5ஜி செல்போன் சேவை வழங்கப்பட உள்ளது. இதற்காக, ₹4.3 லட்சம் கோடி மதிப்புள்ள 5ஜி அலைக்கற்றை வரும் 26ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்கும் தேதி நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்தது. ஏற்கனவே, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் மட்டுமே இந்த ஏலத்தில் … Read more

பாஜ.வுடன் இணைந்து செயல்படும் ஷர்மிளா ஜெகன் தாயார் பதவி விலகல் பின்னணியில் மாஸ்டர் பிளான்: தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க முயற்சி

திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இருந்து ஆந்திர முதல்வரின் தாய் பதவி விலகியதின் பின்னணியில் பாஜ.வின் மாஸ்டர் பிளான் இருப்பதாக கூறப்படுகிறது.ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஜெகன் மோகன் ரெட்டி இருக்கிறார். ஆந்திராவை தொடர்ந்து தெலங்கானாவிலும் ஆட்சியை கைப்பற்ற இக்கட்சி முயற்சி செய்து வருகிறது. அதற்கேற்ப சில ஆண்டுகளுக்கு முன் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா, ‘தெலங்கானா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக கட்சி வளர்ச்சி பணிகளில் … Read more

நிலுவை வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வு: ஒன்றிய சட்ட அமைச்சர் கவலை

அவுரங்காபாத்: ‘இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 4 கோடியில் இருந்து 5 கோடியாக அதிகரித்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில்  உள்ள, மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக் கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜு கலந்து கொண்டு பேசியதாவது:கடந்த ஜூலையில் நான் சட்ட அமைச்சராக பதவியேற்ற போது, இந்திய நீதிமன்றங்களில் 4 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்தன.  ஆனால், கடந்த ஓராண்டில் இந்த எண்ணிக்கை … Read more

குற்றம் செய்யாதவர்களை சிறையில் தள்ளுவதா?: அமர்தியா சென் வேதனை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வெளியாகும் ‘ஆனந்தபசார் பத்திரிகா’வின் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென்  காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:இந்தியர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்யப்படுகிறது. அரசியல் சந்தர்ப்பவாதத்துக்காக இந்து, முஸ்லிம் மக்களிடையே பிளவு ஏற்படுத்தப்படுகிறது. குற்றமே செய்யாத அப்பாவி மக்கள் சிறையில் தள்ளப்படுகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும், இந்த ஆங்கிலேயர் கால நடைமுறை … Read more

தற்பெருமை பிடித்தவர் கங்கனா : பாலிவுட் இயக்குனர் சாடல்

மும்பை: இந்தியில் ‘ஷாகித்’, ‘சிட்டிலைட்ஸ்’, ‘அலிகார்’, ‘சிம்ரன்’ உள்பட பல படங்களை இயக்கியவர், ஹன்சல் மேத்தா. அவர் இயக்கிய ‘சிம்ரன்’ படத்தில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். இந்நிலையில், கங்கனாவை அவர் கடுமையாகச் சாடியுள்ளர். அவர் கூறியதாவது: சிம்ரன் என்ற கேரக்டர், சந்தீப் கவுர் என்ற பெண்ணை மையப்படுத்தி எழுதப்பட்டது. அந்தப் பெண் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டு, பிறகு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டவர். அவரைப்போலவே நாங்கள் கங்கனா கதாபாத்திரத்தை எழுதினோம். ஆனால், தான் எதைப் படமாக்க வேண்டுமென விரும்பினாரோ … Read more

சாய் பல்லவிக்கு போலீஸ் நோட்டீஸ் ரத்து செய்ய கோர்ட் மறுப்பு

ஐதராபாத்: மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில், ‘காஷ்மீரில் இந்து பண்டிட்கள் கொல்லப்பட்டதும், வட இந்தியாவில் மாடு இறைச்சி விற்ற இஸ்லாமியரை ‘ஜெய் ராம்’ என்று கூறச்சொல்லி கொடுமைப்படுத்தியதும் ஒரேமாதிரியான மத வன்முறைதான்’ என்று சொன்னார். இதற்கு பல இந்து அமைப்பினர் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். காஷ்மீர் தீவிரவாதிகளையும், பசு பாதுகாப்பு இயக்கத்தினரையும் ஒப்பிடுவதா என்று கூறி, … Read more

இந்திய கதைகளை உலகம் முழுவதும் சொல்ல வேண்டும்: ராஜமவுலி ஆர்வம்

ஐதராபாத்: இதுவரை மகாபாரத கதைகள் பல திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதில் மகாபாரதத்தின் ஒரு பகுதி அல்லது ஒரு கேரக்டர் பற்றி சொல்லப்பட்டு இருக்கும். தற்போது முழு மகாபாரதத்தையும் படமாக்கும் முயற்சிகள் பல்வேறு தரப்பிலும் நடந்து வருகிறது.   ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலமாக  இந்திய திரையுலகினர் கவனத்தை ஈர்த் துள்ள இயக்கு னர் எஸ்.எஸ்.ராஜமவுலி, முழு மகாபாரத கதையையும் இயக்க வேண்டும் என்று பலபேர் கருத்து ெதரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஜமவுலியும் … Read more