ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி

பீகார்: ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பாட்னா தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் வீட்டு மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எரிபொருள் தட்டுப்பாடு; போக்குவரத்து முடக்கம் | இலங்கையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் இன்று (ஜூலை 4) பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேலும் ஒரு வாரத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. எரிபொருள், உணவுப்பொருள் தட்டுப்பாடு, மின்சார, மருத்துவ சேவையில் சிரமம் என பலவகைகளிலும் அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கடந்த சில நாட்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இன்று (ஜூலை 4) பள்ளிகள் … Read more

நிலத்தகராறு காரணமாக பெண்ணை உயிருடன் எரித்த 3 பேர்.!

மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ராம் பியாரி என்ற பழங்குடி இனப் பெண் உடலில் தீ வைத்து கருகிய நிலையில் தமது வயலில் கிடந்ததாக அவர் கணவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அரசு நலத்திட்டத்தின் கீழ் ஒதுக்கித் தந்த நிலத்தை அபகரிக்க முயன்ற சிலர் இந்த கொடிய செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பெண் உயிருடன் … Read more

ஜனாதிபதி வேட்பாளருக்காக எடப்பாடியிடம் ராகுல் ஆதரவு கேட்கவில்லை: காங்கிரஸ் விளக்கம்

புதுடெல்லி: ‘ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஸ்வந்த் சின்காவுக்காக எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் காந்தி ஆதரவு கேட்கவில்லை’ என காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் போனில் பேசியதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது, எடப்பாடியிடம் ராகுல் பேசியதாக வெளியான … Read more

மக்களவை இடைத்தேர்தல் தோல்வி: சமாஜ்வாதி கட்சி பதவிகளை கலைத்தார் அகிலேஷ் யாதவ்

லக்னோ: மக்களவை இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, மாநில தலைவர் பதவியை தவிர அனைத்து கட்சி பதவிகளையும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று கலைத்தார். உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மற்றும் அசம்கர் மக்களவை தொகுதிகள், சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக இருந்து வந்தன. சமீபத்தில் இங்கு நடந்த இடைத்தேர்தலில், இந்த இரண்டு தொகுதிகளையும் சமாஜ்வாதி கட்சி பா.ஜ.க.விடம் இழந்தது. இது அகிலேஷ் யாதவுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது. இந்நிலையில் மாநில தலைவர் பதவியை தவிர, இதர … Read more

ஸ்வப்னா சுரேஷூக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்.!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் பெயர்களை வாக்குமூலத்தில் கூறியதால் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகத் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள டிஜிபி அலுவலகத்தில் அவர் புகார் மனு அளித்தார். தனக்கு மிரட்டல் விடுத்த நபரின் பெயர் மரது அனிஷ் என்றும் ஸ்வப்னா தெரிவித்தார். Source link

குஜராத் டிஜிட்டல் திருவிழாவில் பிரதமருடன் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் கலந்துரையாடல்

அகமதாபாத் : இன்று நடக்கும் குஜராத் டிஜிட்டல் திருவிழாவில் பிரதமருடன் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் கலந்துரையாட உள்ளனர். விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பங்கேற்கின்றனர்.பிரதமர் மோடியுடன் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பெற்ற பயன் குறித்து 7 பேரும் கலந்துரையாடுகின்றனர்.

’எனக்கு வேற வழி தெரியல ஆத்தா’ : ஸ்விக்கி டெலிவரி ஊழியரின் வியக்கத்தகு செயல்!

மழைக்காலம் வந்தாலே போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டிராஃபிக் ஜாமிற்கு பஞ்சமே இருக்காது. மேலும் ஊர்ந்து ஊர்ந்து செல்வதற்குள் படாத பாடு பட வேண்டியிருக்கும். அதுவும் மழை நேரங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் நிலை வார்த்தையில் அடங்காது. மழை, டிராஃபிக் எல்லாவற்றையும் சமாளித்து முட்டி மோதி டெலிவரி செய்தால் சில கஸ்டமர்கள் அவர்களை ஏசவும் செய்வார்கள். ஆனால் இந்த மும்பை ஃபுட் டெலிவரி நபருக்கு அந்த கஷ்டங்கள் எதுவும் இருக்காது என்பது அண்மையில் வைரலான வீடியோ … Read more

மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆளும் பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தலைவராக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கைவாக்கெடுப்பு நடக்கிறது. இதுதொடர்பாக ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின. மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணிஇணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சிவசேனா … Read more

பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைப்பாரா ஏக்நாத் ஷிண்டே?

மும்பை : மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்று உள்ள நிலையில்,  ஷிண்டே வசம் போதுமான எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.