அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை; மாநில அரசு அறிவிப்பு

அசாம்: அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசாமில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜூலை … Read more

டெல்லிக்குள் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கனரக வாகனங்கள் நுழைய தடை..!

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை டெல்லிக்குள் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக டெல்லியில் சரக்கு வாகனங்கள் போன்றவை நவம்பர் அல்லது டிசம்பரில் 20 நாட்கள் வரை நுழைய தடை விதிக்கப்படும் நிலையில், இம்முறை அந்த தடைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்குள் தினசரி சுமார் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை சரக்கு வாகனங்கள் … Read more

பஞ்சாபில் பன்றி காய்ச்சலுக்கு பாஜ நிர்வாகி பலி; சிகிச்சையில் மேலும் 2 பேர்

லூதியானா: லூதியானாவில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாஜ நிர்வாகி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பன்றி காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஸ்வைன் ஃப்ளூ எனப்படும் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. எச்1 என்1 வைரஸ் மூலம் பரவும் இந்த காய்ச்சல் ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஏப்ரலில் தீவிரமாக பரவியது. தொடர்ந்து அங்கிருந்து, மற்ற நாடுகளுக்கு பரவி வருகிறது. … Read more

சிவில் இன்ஜினியரின் வித்தியாசமான முயற்சி.. புல்டோசரில் திருமண ஊர்வலம் சென்ற மணமகன்..!

மத்திய பிரதேசத்தில் மணமகன் ஒருவர் புல்டோசரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.  பெட்டூல் மாவட்டத்தைச் சேர்ந்த அன்குஷ் ஜெய்ஸ்வால், சிவில் இன்ஜினியராக உள்ளார். கட்டடப் பணிகளுக்கு தேவைப்படும் புல்டோசர் உள்ளிட்ட இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் ஜெய்ஸ்வால், தனது திருமண ஊர்வலத்தை வித்தியாசமாக நடத்த விரும்பினார். இதையடுத்து அவர் புல்டோசரில் மண் அள்ள பயன்படுத்தப்படும் பகுதியில் அமர்ந்து திருமண ஊர்வலமாக சென்றார். Source link

கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவு

டெல்லி: கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டேவிடம் இணையும் எம்.எல்.ஏக்கள் – முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு மேலும் சிக்கல்

சிவசேனாவில் அதிருப்தி ஏற்பட்ட சில எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே உடன் இணைந்திருப்பதால் முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்துவரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே திடீரென போர்க்கொடி எழுப்பினார். முதலில் பத்துக்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் … Read more

பிரதமர் மோடியுடன் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சந்திப்பு.!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரவுபதி முர்மு சந்தித்தார். இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்த பிரதமர், வேட்பாளராக முர்முவை அறிவித்தமைக்காக நாடு முழுவதும் அனைத்து பிரிவினரும் பாராட்டுவதாக குறிப்பிட்டார். மேலும், மக்களின் அடிமட்ட பிரச்சனைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது பார்வை அளப்பரியது என்றும் பிரதமர் கூறினார். Source link

சக்தி வாய்ந்த பூகம்பத்தில் 1000 பேர் பலி; ஆப்கானுக்கு தேவையான நிவாரணம் விரைந்து வழங்க தயார்: பிரதமர் மோடி தகவல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் 1000 பேர் பலியாகி உள்ளனர். 1500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தேவையான அனைத்து நிவாரண பொருட்களையும் விரைந்து வழங்க தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் நேற்று காலை சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 6.1 புள்ளிகளாக பதிவானது. கோஸ்வ் என்ற இடத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இதன் … Read more

தன்னை வெளிநாட்டவர் என்று கூறிய சமாஜ்வாடி தலைவர் – பாடம் புகட்டிய 10 வயது மணிப்பூர் சிறுமி

பாஜகவை சாடுவதற்காக சமாஜ்வாடி கட்சித் தலைவர் மணீஷ் ஜெகன் அகர்வால், தவறுதலாக மணிப்பூர் சிறுமியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி என்று ட்விட்டரில் குறிப்பிட்டதை அடுத்து அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். அண்மையில் நடந்த உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பெரும்பான்மை வாக்கு சதவிகிதத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கூட்டணி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதேபோல், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் 125 தொகுதிகளை கைப்பற்றி யாரும் எதிர்பாராத … Read more

அனைத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகத் தயார் – சஞ்சய் ராவத்

அனைத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகத் தயார் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவேசனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவாத், கவுகாத்தியிலிருந்து பேசுவதை தவிர்த்து மும்பை வந்து முதலமைச்சருடன் எம்.எல்.ஏ.க்களுடன் விவாதிக்கலாம் என்றார். Source link