வயலில் வேலை செய்தபோது விபத்தில் சிக்கிய இளைஞர்.. ஆற்றின் குறுக்கே ரோப் கட்டி மீட்ட ராணுவத்தினர்..!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் செனாப் ஆற்றின் குறுக்கே வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது விபத்தில் சிக்கியவரை ஆற்றின் குறுக்கே இருபுறமும் ரோப் கட்டி ராணுவத்தினர் மீட்டனர். குண்டல் கிராமத்தை சேர்ந்த 24 வயதான அங்கித் குமார் கை டிராக்டருடன் வயலில் வேலை செய்யும்போது இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். Source link

பேருந்து உரசியதில் நிலைதடுமாறி விழுந்த தந்தை, மகள்.. சக்கரம் ஏறி இறங்கியதில் தந்தை கை நசுங்கியது..!

கேரளாவில், தனியார் பேருந்து பக்கவாட்டில் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், அதில் பயணித்த தந்தை, மகள் நூலிழையில் உயிர்தப்பிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நென்மாரா பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், தனது மகளுடன் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற போது பக்கவாட்டில் வந்த பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி சுரேஷ்குமாரும் அவரது மகளும் பேருந்தின் சக்கரத்துக்கு அருகில் விழுந்த நிலையில், சுரேஷ்குமாரின் கை மீது பேருந்தின் முன்சக்கரம் … Read more

ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்

ஜம்முவில் பிடிபட்ட லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதி ஒருவர் பாஜக நிர்வாகியாக இருந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவின் ரியாஸி கிராமத்தில் புதிதாக வந்து தங்கியிருந்த இரு இளைஞர்களின் நடவடிக்கை தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இருந்து வந்துள்ளது. பகலில் வெளியே செல்வதும் நடு இரவில் வீடு திரும்புவதுமாக அவர்கள் இருந்து வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், நேற்று இரவு அவர்களின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர்களின் வீட்டில் ஏகே … Read more

இந்தியாவின் இளம் வயது சபாநாயகர் இவர் தான்!

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்களை அணி திரட்டிய அக்கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அலரது தலைமையிலான அரசு மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நாளை (ஜூலை 4) நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. இதற்கு முன்பாக, புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கரும், சிவசேனா சார்பில் ராஜன் சால்வியும் போட்டியிட்டனர். … Read more

டோலிவுட் நடிகர் நரேஷை அவரது மூன்றாவது மனைவி செருப்பால் அடிக்க முயன்றதால் பரபரப்பு..!

மைசூருவில், விடுதியில் ஒன்றாகத் தங்கியிருந்த டோலிவுட் நடிகர் நரேஷ் மற்றும் நடிகை பவித்ரா லோகேஷை, நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவரான நரேஷ், தனது மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதியிடம் இருந்து விவகாரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். நரேஷும், துணை நடிகை பவித்ரா லோகேஷும் தங்கியிருந்த விடுதிக்கு வந்த ரம்யா ரகுபதி அவர்களை ஆபாசமாகத் திட்டி விட்டு செருப்பால் அடிக்க முற்பட்ட போது அங்கிருந்த போலீசார் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினாரா?- ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு அதிமுக., தலைமையை ராகுல் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் தவறானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். வரும் 18- ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், யஷ்வந்த் … Read more

தென்மேற்கு பருவமழை தீவிரம்…. ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீிவிரமைடந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. குறிபபாக இடுக்கி, கோழிக்கோடு, திருச்சூர், காசர்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஐந்து மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் மலப்புரம் மாவட்டத்துக்கு நாளையும் (ஜூலை 4), பாலக்காடு, கோட்டயம், பத்தினம்திட்டா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நாளை மறுதினமும் (ஜூலை 5) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை … Read more

மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்!

மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்க முடிவு செய்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கண்டித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ பணிகளுக்காக ஆரே காலனியில் ஆயிரத்து 287 ஹெக்டேர் வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்டுவதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய சிவசேனா அரசு தடை விதித்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மெட்ரோ பணிமனை அமைக்க ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டுள்ளார். Source link

பாஜக தலைவர்களுக்கு 50 வகையான உணவுகளை சமைத்து வழங்கிய சமையற் கலைஞர் யாதம்மா..!

ஐதராபாத் தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர்களுக்குத் தெலங்கானாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலைஞர் யாதம்மா தலைமையிலான குழுவினர் ஐம்பது வகையான தென்னிந்திய சைவ உணவு வகைகளைச் சமைத்துப் பரிமாறியுள்ளனர். ஆந்திர தெலங்கானா மாநிலங்களுக்கு உரிய குழம்பு, கூட்டு, பொரியல், அவியல் வகைகள், கோங்குரா துவையல், ஜவ்வரிசிப் பாயசம் உள்ளிட்ட ஐம்பது உணவு வகைகளைக் கூட்ட அரங்கில் உள்ள சமையற் கூடத்தில் தயாரித்து வழங்கினர். பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த பாஜக தலைவர்கள், தாங்கள் சமைத்து … Read more

ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொல்லப்பட்ட நபர்.. அதிர்ந்து போன போலீஸ்.. உ.பியில் பயங்கரம்!

குடி போதையில் தாய் வழி உறவினரை கழுத்தை நெறித்து கொன்ற கோலு மிஷ்ரா என்பவரை கைது செய்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தின் அயோத்யாவில் இன்று (ஜூலை 3) நடந்திருக்கிறது. கொல்லப்பட்ட நபர் பங்கஜ் சுக்லா (35) அமேதியை சேர்ந்தவர் என்றும், இவர் அயோத்யாவின் புஹாபுர் பகுதியில் உள்ள தாய்வழி தாத்தாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு பங்கஜ் சுக்லாவும், கோலு ஷர்மாவும் இணைந்து நேற்று இரவு (ஜூலை 2) மது குடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் … Read more