மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் லக் ஷயா சென்..!

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக் ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் லக் ஷயா சென் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் எதிர்கொண்டார். இதில் அவர் 21-18, 21-15 என்ற நேர் செட்களிலேயே வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். Source link

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் தேசிய பொதுச்செயலாளர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நபிகளை அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் – ஈரானிடம் அஜித் தோவல் உறுதி

நபிகள் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்ததாக ஈரான் கூறியுள்ளது. பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா கடந்த வாரம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் நபிகள்  குறித்து ஆட்சேபணைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அதேபோல, டெல்லி பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டாலும் நபிகள் குறித்து அவதூறான கருத்துகளை கூறியிருந்தார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில், இந்தியாவையும் … Read more

2 மாத சம்பளத்தில் பழைய பேருந்தை நூலகமாக மாற்றிய மேகாலயா பேராசிரியர்கள்!

வகுப்புக்கு வந்தோமா, பாடம் நடத்தினோமா, கடமை முடிந்தது என்று இல்லாமல், மாணவர்களுக்காக பேராசிரியர்கள் சிலர் சிந்தித்தன் விளைவாக பழைய பேருந்து ஒன்று பயன் தரும் நூலகமாக மாறியுள்ளது. மேகாலயா மாநில துரா அரசுக் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள்தான் இதனை செய்துள்ளனர். இந்த பேருந்து மினி நூலகமாக இருப்பதோடு ஏழை, எளிய மாணவர்கள் தங்களுக்கான புத்தகங்கள், ஆடைகள், எழுது பொருட்கள் ஏன் சில நேரங்களில் உணவுகளை கூட இங்கிருந்து பெற முடிகிறது. இது குறித்து அந்தக் கல்லூரியின் … Read more

கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அசாம் ; நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்

அசாமில் பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில பெய்து வரும் தொடர் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. கவுகாத்தியின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. அசாமை ஒட்டியுள்ள மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் காம்பேக்ரே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.   Source link

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு நிபந்தனை ஜாமீன்; டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: விசா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் பாஸ்கர ராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூபாய் 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டு, தற்போது சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை … Read more

ஜூலை 18-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்; 21-ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போதைய குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையொட்டி வரும் 18-ஆம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25-ஆம் தேதிக்குள் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுக் கொள்ள வேண்டும். இந்நிலையில், ஜூன் 29-ஆம் … Read more

Presidential Election: குடியரசுத் தலைவர் தேர்தல் எப்போது?- தேதியை அறிவித்தது ஆணையம்!

நாட்டின் 14 ஆவது குடியரசுத் தலைவராக, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். இவரது ஐந்தாண்டு பதவிக் காலம் வரும் ஜுலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது. இதனையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 … Read more

கர்நாடக மாநிலத்தில் துண்டாக வெட்டப்பட்ட இரண்டு பெண்களின் உடல்கள் கண்டெடுப்பு

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேபி கிராமத்தில் உள்ள கால்வாயில் துண்டாக வெட்டப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் இடுப்புவரை உள்ள பாதி உடல் நேற்று மிதந்து வந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி மற்ற உடல் பாகத்தை போலீசார் தேடி வந்த நிலையில், அப்பகுதிக்கு அருகே உள்ள அரகெரே கிராமத்தின் குட்டையில் 40 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண்ணின் பாதியளவு உடலை அங்கு மீன் பிடிக்க … Read more

ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல்; ஜூன் 15ல் வேட்புமனு தாக்கல்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு..!!

டெல்லி: இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாநிலங்களவை தலைமைச் செயலாளர் பிரமோத் சந்திர மோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். நாடு முழுவதும் 776 எம்.பி.க்கள், 4,033 எம்.எல்.ஏக்கள் என 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர். 776 … Read more