கோடிக்கணக்கில் வரி ஏய்த்த விவோ – அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

இந்தியாவில் செயல்படும் சீனாவின் விவோ மொபைல் நிறுவனம் வரி விதிப்பைத் தவிர்க்க விற்பனைத் தொகையில் ஐம்பது விழுக்காட்டை அதாவது 62 ஆயிரத்து 476 கோடி ரூபாய் அளவுக்குச் சீனாவுக்கு அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. பண மோசடி மற்றும் வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டில் டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் விவோ நிறுவனம், அதன் 23 துணை நிறுவனங்கள், இயக்குநர்களின் வீடுகள் என நாற்பதுக்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 119 வங்கிக் … Read more

டாக்டரை கரம் பிடித்தார்; பஞ்சாப் முதல்வர் திருமணம் எளிமையாக நடந்தது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் திருமணம் இன்று எளிமையாக நடந்தது. டாக்டர் பெண்ணை கரம்பிடித்துள்ளார். மணமக்களுக்கு டெல்லி முதல்வர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நகைச்சுவையாளர், பாடகர், நடிகர், சமூக சேவகர், அரசியல் பிரமுகர் என பன்முக திறமை படைத்தவர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். கடந்த மார்ச் மாதம் நடந்த பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக 48 வயது நிரம்பிய பகவந்த் மான் பொறுப்பேற்றார். அன்று முதல் … Read more

உ.பி: தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில் காங்கிரஸ் தலைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகரும் காங்கிரஸ் தலைவருமான ராஜ் பப்பருக்கு 2 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியில் மூத்த தலைவராக இருப்பவர் ராஜ் பப்பர். இவர் பல பாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஆவார். கடந்த 1996ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது நடிகர் ராஜ் பப்பர், உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் தேர்தல் … Read more

இயக்குனர் லீனா மணிமேகலைக்கு போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ்.!

இந்து கடவுள் காளியை தவறாக சித்தரித்ததாக எழுந்த புகாரில், இயக்குனர் லீனா மணிமேகலைக்கு மத்திய பிரதேசத்தின் போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். ‘காளி’ என்ற பெயரில் அவர் இயக்கிய ஆவணப் படத்தின் போஸ்டர் வெளியான நிலையில், அதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்து அமைப்புகள் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போபால் போலீசார், அம்மாநில உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.  Source link

மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி

ஷியோபூர்: மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  ராம்பரத் (28), திலீப் (27), முகேஷ் (20). பழங்குடியினத்தை சேர்ந்த இந்த 3 பேர் உள்பட 6 பேர், நேற்று அஜ்னோய் காட்டு பகுதியில் உள்ள ஆற்றுக்கு அருகில் சுற்றுலா சென்றனர். அப்போது, மிகுந்த ஆர்வத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென மின்னல் தாக்கியது. இதில் 3 பேரும், மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு … Read more

புதிய கல்விக்கொள்கையின் அடிப்படை நோக்கம் இதுதான் – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

குறுகிய மனப்பான்மையுடன் கூடிய சிந்தனைகளில் இருந்து கல்வியை மீட்பதே புதிய கல்விக்கொள்கையின் அடிப்படை நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உயர் கல்வி குறித்த கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர் 21 ஆம் நூற்றாண்டிற்கு தேவையான நவீன சிந்தனைகளுடன் கூடியதாக தேசிய கல்விக்கொள்கை இருக்கும் என்றும் தெரிவித்தார். மாணவர்களை பட்டப்படிப்புக்கு தயார் செய்வதோடு மட்டும் நின்று விடாமல் இங்குள்ள மனித வளங்களை கொண்டு நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மாணவர்கள் தத்தமது தாய் மொழிகளில் கற்பதற்கு வாய்ப்பளிக்கும் தேசிய … Read more

ஆகாசா ஏர் விமான நிறுவனம், வணிக ரீதியில் விமானங்களை இயக்க விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி.!

ஆகாசா ஏர் விமான நிறுவனம், வணிக ரீதியில் விமானங்களை இயக்க விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனம் இம்மாத இறுதியில் விமான சேவையை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ்  ரகத்தில் 72 விமானங்களை வாங்க கடந்த ஆண்டே அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. 2022 – 23 நிதியாண்டின் இறுதிக்குள், அந்நிறுவனம் 18 விமானங்களையும், அதன் பிறகு ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் 14 விமானங்கள் வரை … Read more

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேச்சு: கேரள மாஜி அமைச்சர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசியதாக கேரள மாஜி அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசில் கலாச்சாரம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் சஜி செரியான். செங்கணூர் தொகுதி எம்எல்ஏவான இவர்,  சில தினங்களுக்கு முன் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அமைச்சர் சஜி செரியான் பதவி … Read more

குழந்தைகளுக்குத் வாங்கிய பானி பூரியை சாப்பிட வேண்டாம் என கூறிய மனைவியை அடித்து கொலை செய்த கணவன்.!

கர்நாடக மாநிலத்தில், குழந்தைகளுக்குத் வாங்கி கொடுத்த பானி பூரியை சாப்பிட வேண்டாம் என கூறிய மனைவியை அடித்து கொலை செய்து விட்டு பெண் தோழி வீட்டில் பதுங்கியிருந்த கணவரை போலீசார் கைது செய்தனர். மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ரவி கவுடா என்பவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி யோகிதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ரவி கவுடா குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்த பானி பூரியை யோகிதா சாப்பிட வேண்டாம் என கூறியதால் ஆத்திரமடைந்த ரவி … Read more

கர்நாடகாவில் கனமழை: மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாப பலி

பெங்களூரு: கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள தட்சிண கன்னடா மாவட்டம் பண்டுவால் பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த 3 பேர், உத்தர கனடாவை சேர்ந்த 2 பேர் என்று மொத்தம் 5 பேர் குடிசை அமைத்து தங்கி, அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர். நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக மண் … Read more