25 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த குழந்தையை 40 நிமிடங்களில் உயிருடன் மீட்ட அதிகாரிகள்!

குஜராத்தில் 25 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை கடும் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டது. சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் நேற்றிரவு கூலித் தொழிலாளி தம்பதியின் 2 வயது மகனான சிவம், அருகிலுள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் அவன் தவறி விழுந்தான். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் உள்ளூர் பேரிடர் மேலாண்மை மற்றும் அகமதாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினரை வரவழைத்தனர். … Read more

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை – பத்திரமாக மீட்ட ராணுவம்!

குஜராத் மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 40 நிமிட போராட்டங்களுக்கு பிறகு இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் (2) என்கிற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் அப்போது கூலி வேலை செய்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் சிறுவன் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து 20 – … Read more

இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்ததால் தடுத்து நிறுத்திய போலீசார் மீது இளம்பெண் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல்

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்ததால் தடுத்து நிறுத்திய போலீசாரை இரு இளம் பெண்களும் அவர்களது நண்பரும் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் அவர்கள் பயணம் செய்ததுடன், தவறான பாதையில் சென்றுள்ளனர். இதனால் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை சரமாரியாக தாக்கினர்.   Source link

கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு: வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயரலாம் என தகவல்

மும்பை: கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கடனுக்கான வட்டி விகிதம் 4.40 … Read more

ஒத்திவைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு… முழு விவரம்!

சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்க முறைகேடாக பணம் பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், கைதிலிருந்து தப்பிக்க கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம். கடந்த 2010 – 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட … Read more

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தையை ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் பத்திரமாக மீட்டனர். துடாபூர் கிராமத்தில் உள்ள பண்ணையில் குழந்தையின் பெற்றோர் பணியாற்றி வருகின்றனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிவம் நேற்றிரவு 8 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில், சுமார் 25 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராணுவ வீரர்களும், போலீசாரும் நிகழ்விடத்திற்கு வந்த 40 நிமிடங்களில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை … Read more

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம்: அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக தகவல்

மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் – ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் அளிப்பவர்களின் அடாவடி வசூல் நடவடிக்கைகளால் பல தற்கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில், இத்தகைய மோசடி செயலிகள் மூலம் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார். கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான், மின்னஞ்சல் விவரங்களை பெறும் ஆன்லைன் செயலிகள், வாடிக்கையாளரின் தொலைபேசியில் உள்ள விவரங்களையும் பதிவிறக்கம் செய்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை மிரட்டி கந்துவட்டி போன்று … Read more

உ.பி. அதிர்ச்சி: பப்ஜி விளையாட தடை விதித்த தாயைச் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுவன் கைது

லக்னோ: ‘பப்ஜி‘ விளையாடுவதற்கு தடையாக இருந்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வளரிளம் சிறுவன் ஒருவரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள யமுனாபுரம் காலனியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் தனது 16 வயது மகன் மற்றும் 9 வயது மகளுடன் யமுனாபுரத்தில் வசித்து வந்துள்ளார். ராணுவத்தில் இளநிலை அதிகாரியான அவரது கணவர் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பப்ஜி … Read more

நடனக் கலைஞர்களுடன் கைகோத்து நடனமாடிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு திருமண விழாவில் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அலிப்பூர்துவாரில் நடைபெற்ற திருமண விழாவுக்குச் சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையில் நடனமாடிய கலைஞர்களுடன் கைகோத்து நடனமாடினார்.