போலி கிரிப்டோகரன்ஸி பரிமாற்றம்: ரூ.1000 கோடியை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்

போலி கிரிப்டோகரன்ஸி பரிமாற்றத்தின் மூலம் இந்தியர்கள் ரூ.1,000 கோடியை இழந்துள்ளதாக தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பெரும் முதலீடாக கருதி பலரும் கிரிப்டோகரன்சியில் தற்போது தங்கள் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் போலியான இணையத்தளங்கள் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறு போலி கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் காரணமாக இந்தியர்கள் 1,000 கோடி ரூபாயை இழந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுடுசெக் தெரிவித்துள்ளது. கிரிப்டோகரன்சி வாங்கும் இணையதளம் என … Read more

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆதரவு..!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு நிதிஷ் குமார் ஆதரவு அளிப்பார் என கூறப்பட்டது. எனினும் கூட்டணி தர்மப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். Source link

உத்தரபிரதேசத்தில் போலீசின் புல்டோசர் அணிவகுப்பு

லக்னோ: பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து  வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளை உத்தரபிரதேச அதிகாரிகள் புல்டோசர்களைப் பயன்படுத்தி இடித்தனர். அநேரேம் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற இடங்களில், பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அதையடுத்து பொது அமைதியை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் நடத்திய அணிவகுப்பில் புல்டோசர் இடம்பெற்றது சர்ச்சையாகி உள்ளது. இதை காவல்துறை மறுக்கவோ ஏற்கவோ இல்லை. ஆனால் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டதாக … Read more

பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்.!

பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரான சஞ்சய் குப்தா, இடைத்தரகர்கள் பங்குச்சந்தையை முன்கூட்டியே அணுகுவதன் மூலம் லாபம் ஈட்டுவதற்கான வசதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, புதுடெல்லியில் இன்று தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களை சந்தித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினர். பின்னர் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக குழுவினர் மேகதாது … Read more

ஜார்கண்டில் நிஜத்தில் நடந்த ‘காத்துவாக்குல 2 காதல்’ சம்பவம்!

ஒரே நேரத்தில் தான் காதலித்த இரண்டு பெண்களையும் இளைஞர் ஒருவர் மணமுடித்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இந்தியாவில் சீனப் பொருட்களின் இறக்குமதி கடந்த நிதியாண்டில் 45 சதவீதம் அதிகரிப்பு..!

இந்தியாவில் சீனப் பொருட்களின் இறக்குமதி கடந்த நிதியாண்டில் 45 விழுக்காடு அதிகரித்து 7 இலட்சம் கோடி ரூபாய் என்னும் அளவைத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் சீனாவுக்கு இந்திய பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு அரை விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது. மினரல் ஆயில், வேதிப்பொருட்கள், உரங்கள், பிளாஸ்டிக், இரும்பு மற்றும் உருக்கு, மின் கருவிகள், மருத்துவக் கருவிகள் ஆகியன சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.  Source link

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் அடித்துக் கொலை: பத்தனம்திட்டா அருகே பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முன்ற நபரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கூடல் பகுதியை சேர்ந்தவர் ரஜனி (42). கணவனை விவாகரத்து செய்து விட்டார். தற்போது 18 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த சசிதரன் (50) என்பவருடன் ரஜனிக்கு பழக்கம் ஏற்பட்டது. சசிதரன் அடிக்கடி ரஜனியின் வீட்டுக்கு வந்து … Read more

"யாரோ என் மொபைலை ஹேக் பண்ணிட்டாங்க!' – ஹேக்கரைக் கண்டறிந்தததும் தம்பதிக்கு கிடைத்த ஷாக்!

ஜெய்ப்பூரில் ஆன்லைன் கேமிற்கு அடிமையான 13 வயது சிறுவன் ஒருவன், தனது பெற்றோரின் செல்போன்களையே ஹேக் செய்த விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் தனது பெற்றோரின் செல்போன்களில் இருந்த அனைத்து தரவுகளையும் அழித்துவிட்டு, ஆபாச செய்திகளை அவர்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன், அதைவைத்து மிரட்டியும் உள்ளான் அந்த சிறுவன். மேலும் அவர்களுடைய செல்போன் திரைகளில் விசித்திர அனிமேஷன்களையும் ஃப்லாஷ் செய்துள்ளான். தங்களுடைய செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தபின்னரே இந்த விஷயம் … Read more

மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி | “ராஜினாமா செய்யத் தயார்” – முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி தூக்கியுள்ளதால், மகாராஷ்டிர மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தான் ராஜினாமா செய்யத் தயார் என்று அம்மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சரத்பவாரும், கமல்நாத்தும் தன்னை தொடர்புகொண்டு பேசியதாகவும், முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஏக்னாத் ஷிண்டேவுடன் சென்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அவர்கள் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் … Read more