சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்

புதுடெல்லி: ‘நீதிமன்றங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளது,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டமாக பேசியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: இந்த ஆண்டு இந்தியா 75வது சுதந்திர தின விழா கொண்டாடுகிறது. இந்தியா குடியரசு ஆகி 72 ஆண்டுகள் ஆகின்றன. அப்படியிருந்தும் அரசியலமைப்பின்படி ஒவ்வொரு அமைப்புக்கும் வழங்கப்பட்ட பணிகள் குறித்து நாம் இன்னும் … Read more

பிரதமர் மோடியை கண்டு கேசிஆர் பயப்படுகிறார் – பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு கருத்து

ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை தொடங்கியது. இக்கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். பிரதமர் மோடியை வரவேற்க அங்கிருந்த கோலாட்டம் கலைஞர்களுடன் இணைந்து அவர் கோலாட்டம் ஆடி கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஹைதராபாத்தில் பிரதமர் மோடி வரும் வழியெல்லாம் ஆளும் டிஆர்எஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பல எதிர்ப்பு பலகைகளை பார்த்தேன். இதைப் பார்க்கும்போது தெலங்கானா முதல்வர் கேசிஆர் எவ்வளவு தூரம் … Read more

பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்

புதுடெல்லி: டெல்லியில் இருந்து  ஜபால்பூர் புறப்பட்டு சென்ற தனியார் விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்திற்குள் புகை வந்ததால் உடனடியாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம், ஜபால்பூர் நோக்கி பயணிகளுடன் நேற்று காலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. 5 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தது. அப்போது, விமானத்திற்குள் திடீரென புகை ஏற்பட்டது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். … Read more

தமிழ்நாடு, ஆந்திராவில் ஆட்சிக்கு வருவது பற்றி பாஜக செயற்குழுவில் ஆலோசனை – ஹைதராபாத் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஒட்டலில் தொடங்கிய இக்கூட்டத்துக்கு கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமை வகித்தார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி மற்றும் யோகி ஆதித்யநாத், பசவராஜ் பொம்மை உட்பட பாஜக ஆளும் மாநிலங்களைச் … Read more

காற்றில் கலந்து வரும் காலன் மண்ணை தொட்டதும் மரணம்: பிறந்த 30 நாளில் ஒரு லட்சம் குழந்தைகள் பலி; ஆண்டுக்கு ஆண்டு குறையும் இந்தியர்கள் ஆயுள்

ஒரு காலத்தில் அனைத்து இடங்களிலும் குடிநீர் இலவசமாக கிடைத்தது. காலப்போக்கில், வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகரங்களில் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, கிராமங்களிலும் கூட பணம் கொடுத்து குடிநீரை மக்கள் வாங்கி வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால், ‘தூய காற்றை’ விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நிலைமை என்னவாகும்? தற்போது அந்த நிலையை நோக்கி பல நகரங்கள் … Read more

முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு

இம்பால்: மணிப்பூரில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களான நிலையில், மண்ணில் புதைந்த 80 பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று இம்மாநில முதல்வர் பைரன் சிங் வேதனை தெரிவித்துள்ளனர். நேற்று வரையில் 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 18 பேர் ராணுவ வீரர்கள். மணிப்பூரில் ேநானி மாவட்டத்தில் துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள பகுதி என்பதால், இவர்களுக்கு … Read more

‘நான்கு முறையும் ஆஜராகவில்லை’ – நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த கொல்கத்தா போலீஸ்

கொல்கத்தா: இறைதூதர் முகமது நபிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது மேற்குவங்க காவல்துறை. டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நுபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் … Read more

வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நன்கொடை பெறலாம்: எப்சிஆர்ஏ சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்

புதுடெல்லி: வெளிநாட்டில் வசிப்பவர்கள், இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரையிலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பணம் அனுப்ப அனுமதிக்கும் வெளிநாட்டு நன்கொடை  ஒழுங்குமுறை சட்ட (எப்சிஆர்ஏ) திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள புதிய விதிகள் குறித்த அரசாணையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: * வெளிநாட்டு நன்கொடை விதிகள் 2011, விதி 6ன்படி, வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு … Read more

ஐதராபாத்தில் பிரமாண்ட ஏற்பாடு கரீப் கல்யாண் திட்டம் பாஜ செயற்குழு தீர்மானம்: பேரணியில் இன்று மோடி பேச்சு

ஐதராபாத்: ஐதராபாத்தில் நேற்று நடந்த பாஜ தேசிய செயற்குழு கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்தை ஆதரித்தும், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாஜ கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. தற்போது பாஜ கட்சி தென் மாநிலங்கள் மீது குறி வைத்துள்ள நிலையில், இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. ஐதராபாத் முழுவதும் முக்கிய இடங்களில் பாஜ கட்சி மற்றும் பிரமதர் மோடி குறித்த கட் … Read more

திரவுபதி முர்மு வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. ‘கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை நிறுத்துவது நல்லது’ – மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திரவுபதி முர்மு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு பெயரை அறிவிப்பதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசனை நடத்தி இருந்தால், அவரை ஆதரிப்பது பற்றி பரிசீலித்து இருப்போம் என கூறினார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா முன்னிறுத்தப்பட்ட நிலையில், மம்தாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link