78 மணி நேரத்தில் 25 கி.மீ. நெடுஞ்சாலை – புனே நிறுவனம் கின்னஸ் சாதனை

புதுடெல்லி: புனேயைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் 25.56 கி.மீ. நீளத்திற்கு தார் சாலையை 78 மணி நேரத்தில் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தேசிய நெடுஞ்சாலையில் (என்ஹெச்-53) இந்த சாதனையை இந்நிறுவனம் புரிந்துள்ளது. கத்தார் நாட்டில் தோஹா எனுமிடத்தில் 25.27 கி.மீ. தூர தார் சாலை போட்டதே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை தற்போது இந்திய நிறுவனம் முறியடித்துள்ளது. ராஜ்பாத் இன்பிராகான் என்ற நிறுவனம் 800 பணியாளர்கள் மற்றும் 700 தொழிலாளர்கள் … Read more

கேரள அரசை கதி கலங்க வைக்கும்2 பெண்கள்: * ஆட்டம் காணும் முதல்வர் பினராய்: விஸ்வரூபம் எடுக்கும் தங்கம் கடத்தல்

‘அரசியல்’ என்றால் ஆண்கள் ஆதிக்கம்தான் என்று கூறுவார்கள். ஆனால், அரசியலில் சாணக்கியர்களாக பெண்கள் உள்ளனர். சிறிய அரசு பதவிகள் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முதல்வர், கவர்னர், ஜனாதிபதி வரை அலங்கரிக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களிலும் தலைமை பொறுப்பில் அமர்ந்து ஆளுமையை வெளிப்படுத்துகின்றனர். அதே நேரம், சட்ட விரோத செயல்களால் சீரழியும் பெண்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட 2 பெண்கள்தான் சரிதா, சொப்னா. விவிஐபி.க்களின் கூடா நட்பு, திடீர் வளர்ச்சி, கத்தை கத்தையாக பணம் போன்ற ஆசை … Read more

கேரள தங்கக் கடத்தல் | முதல்வர் பினராயி, குடும்பத்தினருக்கு தொடர்பு – பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கொச்சி: தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த ஒரு பார்சலை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இருந்த 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர். அந்த பார்சலில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) துணைத் தூதரக முகவரிகுறிப்பிடப்பட்டிருந்தது. … Read more

ஞானவாபி வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு கொலை மிரட்டல் கடிதம்

புதுடெல்லி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததைத்தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்து கடவுள் உருவங்கள் மற்றும் சிலைகள் இருப்பதாகவும் அதனை வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக்கூறி இந்து அமைப்புகள் சார்பில் வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்குகளை வாரணாசி மாவட்ட நீதிபதி ரவிக்குமார் … Read more

பாடம் எடுக்காமல் வகுப்பறையில் தூங்கிய அரசுப் பள்ளி ஆசிரியை : விசிறி விடும் மாணவி

பீகாரில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் உறங்கி கொண்டிருக்க, அவருக்கு மாணவி கைவிசிறி கொண்டு விசிறி விடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மேற்கு சம்பரான் மாவட்டத்தின் பகாஹி புரைனா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை, வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் போதே நாற்காலியில் அமர்ந்து உறங்கியதை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பலர் வலியுறுத்திய நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நாற்காலியில் … Read more

மருத்துவ உலகில் புதிய மைல்கல் புற்றுநோயை பூரண குணமாக்கும் மருந்து: அமெரிக்க ஆய்வில் அதிசயிக்கத்தக்க தகவல்

புதுடெல்லி: மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளின் கட்டிகள் ஆறு மாதம் டோஸ்டார்லிமாப் என்ற புதிய மருந்து எடுத்து கொண்டதில் கரைந்து, அவை இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று அமெரிக்க மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் புதிய மைல்கல்லாகும்.நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:மிஸ்மேட்ச் ரிப்பேர் (எம்எம்ஆர்) குறைபாடுள்ள செல்கள் பொதுவாக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பல டிஎன்ஏ மரபணு மாற்றங்களை கொண்டுள்ளன. இந்த குறைபாடு … Read more

சிகரெட் வாங்க ரூ.10 தர மறுத்த சிறுவனுக்கு கத்தி குத்து : பள்ளி அருகே பதறவைக்கும் சம்பவம்

புதுடெல்லியில், சிகரெட் வாங்க 10 ரூபாய் தர மறுத்த சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் இதில் தொடர்புடைய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, சிகரெட் வாங்க 10 ரூபாய் தராததால் சிறுவனை குத்தி கொன்றதாக ஒப்புக்கொண்டனர். Source link

நான் சாய் பல்லவியின் ரசிகன்: சொல்கிறார் கரண் ஜோஹர்

மும்பை: விராட பர்வம் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. வேணு இயக்கியுள்ள இப்படத்தில் ராணா, பிரியா மணி, நிவேதா பெத்துராஜ், ஈஸ்வரி ராவ்  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1990களில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தபோது நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு சுரேஷ் பொப்பிலி இசையமைத்துள்ளார்.விராட பர்வம் படத்தின் ரிலீஸ், கொரோனா காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் ஜூலை 1ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் … Read more

நெல் உள்ளிட்ட கரீப் பயிர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தியது மத்திய அரசு

நெல் உள்ளிட்ட கரீப் பயிர்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்த வருட கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒரு குவின்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் ஒளிபரப்புதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். மேலும் சோளம், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தவும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் … Read more

பரிசு பெற வந்த போது கீழே விழுந்த பெண் : பதறிய ஆளுநர் தமிழிசை – ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தார்.

ஆரோவில் சர்வதேச நகரத்தில் நடைபெற்ற மெகா தூய்மைபடுத்தும் பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவரிடம் பரிசு பெற வந்த போது கால் இடறி கீழே விழுந்த பெண்மணியை நாற்காலி போட்டு அமர வைத்து, ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழக சுற்றுலா துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘எம்ப்ரெஸ்’ சொகுசு கப்பலில், சூதாட்டம் சார்ந்த நடவடிக்கைகள் நடைபெறாது என உறுதி செய்த பிறகு தான் அந்த … Read more