அசாம்: வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, பார்பேடா, துப்ரி, டாரங், காம்ரூப் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அசாம் மாநில அரசு சார்பில் 27 மாவட்டங்களில் ஆயிரத்து 687 … Read more

கேம் ஓவர்.! – ராஜினாமா செய்கிறார் முதல்வர் தாக்கரே? – கவிழ்கிறது கூட்டணி அரசு!

மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே, இன்று மாலை 5 மணிக்கு, சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சராக உள்ள சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், குஜராத் மாநிலம் சூரத்திற்கு … Read more

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்..!

மன்னார் வளைகுடாவில் மீன் பிடித்து கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் ocean sunfish என்றழைக்கபப்டும் அரிய வகை சூரிய மீன் சிக்கியது. 2,000 கிலோ எடை வரை வளரக்க்கூடிய சூரிய மீன்கள் தென் அமெரிக்க நாடுகளை ஒட்டிய கடல் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்குப் பின் பாம்பன் மீனவர் வலையில் சிக்கியுள்ள சூரிய மீனை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். இதனை கேள்விப்பட்டு பாம்பன் துறைமுகம் வந்த கடல்சார் ஆராய்ச்சியாளர்கள், பிடிபட்ட சூரிய மீன் … Read more

பெங்களூருவில் பிரதமர் மோடி இருந்த 4 மணி நேரத்திற்கு மட்டும் ரூ.24 கோடி செலவு: அதிர்ச்சி தகவல்..!

பெங்களூரு: பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி இருந்த 4 மணி நேரத்திற்கு மட்டும் ரூ.24 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூருவில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி 20ம் தேதி கர்நாடகா வந்தார். 12 மணிக்கு வந்து 4.30 மணிக்கு மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார். பெங்களூருவில் இந்திய அறிவியல் கழகம், பொருளாதார பல்கலைக்கழகம், கொம்மகட்டாவில் திட்ட பணிகள் தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டார். பெங்களூரு புறநகர் ரயில் … Read more

'அக்னிபத்' திட்டத்தை பிரதமர் மோடி வாபஸ் பெறுவார் – ராகுல் அதிரடி!

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது போல், அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெறுவார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம், கடந்த 5 நாட்களாக, டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் … Read more

இடுக்கி நீர்மின் விரிவாக்கத் திட்டத்துக்கு முதற்கட்டச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய மத்திய அரசு.!

இடுக்கி நீர்மின் விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் முதற்கட்டச் சுற்றுச்சூழல் அனுமதி அளித்துள்ளது. கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே பெரியாற்றின் குறுக்கே இடுக்கி அணை உள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் நீரைக்கொண்டு 780 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படும் நிலையில், 2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 800 மெகாவாட் மின்னுற்பத்தி செய்வதற்கான டர்பைன்களை நிறுவனக் கேரள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. Source link

பரபரப்பான அரசியல் சூழலில் மராட்டிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது: சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு கெடு..!!

மும்பை: பரபரப்பான அரசியல் சூழலில் மராட்டிய மாநில அமைச்சரவை கூட்டம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் காணொலி மூலம் தொடங்கியது. 46 சிவசேனா எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள சூழலில் அமைச்சரவை கூடியுள்ளது. தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் உள்ளதால் உத்தவ் தாக்கரே பதவி விலகலாம் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கும் நிலையில் இன்று மாலை சிவசேனா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா … Read more

குஜராத் டூ அசாம்… ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே ‘முகாம்’ – மகாராஷ்டிர அரசுக்கு வலுக்கும் நெருக்கடி

மும்பை: தனது ஆதரவாளர்களுடன் குஜராத் மாநிலத்தில் முகாமிட்டிருந்த ஏக்நாத் ஷிண்டே தற்போது ஆதரவாளர்களுடன் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகிக்கிறார். சிவசேனாவின் சட்டப்பேரவை கட்சித் தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, சமீபகாலமாக கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்துவந்தார். கடந்த திங்கட்கிழமை … Read more

தற்போதைக்கு மராட்டிய முதலமைச்சர் ராஜினாமா இல்லை: சஞ்சய் ராவத் தகவல்

மும்பை: மகாராட்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திருப்பி வரும் வரை முதலமைச்சர் ராஜினாமா தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வாரா என்ற கேள்விக்கு சஞ்சய் ராவத் பதில் தெரிவித்துள்ளார்.

பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளிக்கு வழிகாட்ட புதிய சாதனம் அறிமுகம்!

பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளிகள் துணையின்றி சாலையில் நடந்து செல்ல உதவும் புதிய சாதனத்தை பிரான்ஸைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. பொதுவாக பார்வை சவால் உடைய மாற்றுத்திறனாளிகள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, கைத்தடியை எடுத்துச் செல்வது வழக்கம். இப்போது அந்த கைத்தடி அவசியம் இல்லை. அவர்கள் தங்கள் தோள்பட்டையில் பொருத்திக் கொள்வது போன்ற ஒரு சாதனம் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் உள்ள 3டி கேமரா மூலம் சாலையில் உள்ள தடைகளும் … Read more