சிகரெட் வாங்க ரூ.10 தர மறுத்த சிறுவனுக்கு கத்தி குத்து : பள்ளி அருகே பதறவைக்கும் சம்பவம்

புதுடெல்லியில், சிகரெட் வாங்க 10 ரூபாய் தர மறுத்த சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் இதில் தொடர்புடைய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, சிகரெட் வாங்க 10 ரூபாய் தராததால் சிறுவனை குத்தி கொன்றதாக ஒப்புக்கொண்டனர். Source link

நான் சாய் பல்லவியின் ரசிகன்: சொல்கிறார் கரண் ஜோஹர்

மும்பை: விராட பர்வம் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. வேணு இயக்கியுள்ள இப்படத்தில் ராணா, பிரியா மணி, நிவேதா பெத்துராஜ், ஈஸ்வரி ராவ்  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1990களில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தபோது நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு சுரேஷ் பொப்பிலி இசையமைத்துள்ளார்.விராட பர்வம் படத்தின் ரிலீஸ், கொரோனா காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் ஜூலை 1ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் … Read more

நெல் உள்ளிட்ட கரீப் பயிர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தியது மத்திய அரசு

நெல் உள்ளிட்ட கரீப் பயிர்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்த வருட கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒரு குவின்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் ஒளிபரப்புதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். மேலும் சோளம், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தவும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் … Read more

பரிசு பெற வந்த போது கீழே விழுந்த பெண் : பதறிய ஆளுநர் தமிழிசை – ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தார்.

ஆரோவில் சர்வதேச நகரத்தில் நடைபெற்ற மெகா தூய்மைபடுத்தும் பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவரிடம் பரிசு பெற வந்த போது கால் இடறி கீழே விழுந்த பெண்மணியை நாற்காலி போட்டு அமர வைத்து, ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழக சுற்றுலா துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘எம்ப்ரெஸ்’ சொகுசு கப்பலில், சூதாட்டம் சார்ந்த நடவடிக்கைகள் நடைபெறாது என உறுதி செய்த பிறகு தான் அந்த … Read more

அக்‌ஷய் குமார் பட காட்சிகள் ரத்து: தியேட்டர்களில் ஆளில்லை வரி விலக்கு அளித்தும் தோல்வி

மும்பை: நாடு முழுவதும் தியேட்டர்களில் படம் பார்க்க யாரும் வராததால், அக்‌ஷய் குமாரின் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.கொரோனா பாதிப்புக்குப் பிறகு இப்போது பல படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நன்றாக ஓடுகின்றன. இந்நிலையில், பாலிவுட்டில் ஸ்டார் நடிகரான அக்‌ஷய் குமாரின் சாம்ராட் பிருத்விராஜ் படம் கடந்த வாரம் வெளியானது. இந்தியில் மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு படம் வெளியானது. இப்படத்தைப் பார்த்து பாஜ தலைவர்கள் பலரும் பாராட்டினர். முன்னதாக இப்படத்தின் தலைப்பு பிருத்விராஜ் என்று மட்டுமே … Read more

`முகக்கவசம் அணிய மறுப்போரை விமானத்திலிருந்து இறக்கிவிடலாம்'- மாஸ்க்கை கட்டாயமாக்கியது DGCA

விமானத்தில் பயணம் செய்யும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், முகக் கவசம் அணியவில்லை என்றால் விமானத்தில் அந்தப் பயணி ஏற்றப்பட மாட்டார் எனவும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி ஷங்கர் சமீபத்தில் விமான பயணம் மேற்கொண்ட போது, விமானத்தில் கொரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாதது குறித்து புகார் எழுப்பினார். இதைத்தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த வழக்கை … Read more

சர்ச்சை பேச்சு எதிரொலி | ஒரு வாரத்துக்குப் பின் சட்ட நடவடிக்கை – நூபுர் சர்மாமீது எப்ஐஆர் பதிவு

புதுடெல்லி: சர்ச்சை பேச்சுக்களை வெளிப்படுத்தியதால் பாஜகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நூபுர் சர்மாமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா. அப்போது அவர், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து தொழிலதிபரும் பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டால் ட்விட்டரில் சர்ச்சைகுரிய ட்வீட்டை பதிவிட்டார். பின்னர் அந்த கருத்தை நீக்கினார். இதனைக் கண்டித்து கான்பூரில் … Read more

அசூர வேகத்தில் ஸ்கூட்டி மீது நேருக்கு நேர் மோதிய பைக் : பதைபதைக்கும் காட்சி

பீகாரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கா பாதையில் ஸ்கூட்டியில் ஆண் மற்றும் பெண் இருவர் மெதுவாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே அசூர வேகத்தில் வந்த பைக் ஸ்கூட்டியில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பைக்கில் வந்த நபர் சிறுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.       Source link

ஜூலையில் மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங்

ஐதராபாத்: மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்க உள்ளது.மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த சர்காரு வாரி பாட்டா படம் கடந்த மாதம் வெளியாகி வெற்றிபெற்றது. இந்நிலையில், விடுமுறையை கொண்டாட மகேஷ் பாபு தனது குடும்பத்தாருடன் ஜெர்மனிக்கு சென்றிருக்கிறார். அவரது அடுத்த படத்தை திரி விக்ரம் இயக்குகிறார். ஏற்கனவே திரி விக்ரம் இயக்கத்தில் கலேஜா படத்தில் மகேஷ் பாபு நடித்திருந்தார். இந்நிலையில், இப்போது அவர்கள் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை மகேஷ் … Read more

ஹோம் ஒர்க் செய்யாத 5 வயது குழந்தை – மொட்டை மாடியில் உச்சி வெயிலில் தாய் செய்த கொடூரம்

வீட்டுப்பாடம் செய்யாத 5 வயது குழந்தையை, கை – கால்களை கட்டிப்போட்டு உச்சிவெயிலில் மொட்டை மாடியில் தாயே கிடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடப்பாண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதுவும் தலைநகர் டெல்லியில் மக்கள் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு நெருப்பாக தகிக்கிறது. இந்நிலையில் இந்த கொளுத்தும் வெயிலில், 5 வயது குழந்தையை கை – கால்களை கட்டி, நண்பகல் 2 மணியளவில் மொட்டை மாடியில் கிடத்திய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் … Read more