தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் கருத்தரங்கு.. பிரதமர் மோடி பங்கேற்பு.!

வாரணாசியில் மூன்று நாள் நடைபெறும் அகில பாரதிய கல்வி தொடர்பான விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தேசிய கல்விக் கொள்கையின் இலக்கை அடைவதற்கான வழிகாட்டுதல் தொடர்பான கருத்தரங்கில் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் பங்கேற்க உள்ளனர். மாலையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் 1800 கோடி ரூபாய் மதிப்புடைய பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். Source link

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்!!

காத்மாண்டு : 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

‘காளி’ போஸ்டர் சர்ச்சை | கொலை மிரட்டல் விடுத்த துறவி – லீனா மணிமேகலைக்கு வடமாநிலங்களில் வலுக்கும் எதிர்ப்பு

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த லீனா மணிமேகலை, ‘காளி’ என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரித்துள்ளார். இதன் சுவரொட்டி சமூக வலைதலங்களில் கடந்த 4-ம் தேதி வெளியானது. அதில், ஒரு பெண் காளி உருவத்தில் புகைப்பிடிப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்தது. அதற்கு பலதரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்நிலையில், உ.பி. அயோத்தி துறவிகள், சுவரொட்டியைப் பார்த்து மிகவும் மனம் புண்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்களில் ஹனுமன்கடி மடத்தின் தலைவர் துறவி ராஜு தாஸ் கூறியதாவது: லீனா மணிமேகலை … Read more

சிவசேனா எம்.பி.க்களும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாற திட்டம்..?

சிவசேனாவைச் சேர்ந்த சில எம்.பிக்கள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியில் சேர இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து மக்களவையில் கட்சியின் கொறடாவை மாற்றியது சிவசேனா தலைமை. பாவன காவாலி என்ற எம்.பி.தான் சிவசேனா அதிருப்தியாளர் – பாஜக கூட்டணிக்கு திட்டம் வகுத்து தந்ததாகக் கூறப்படுகிறது. மக்களவையின் சிவசேனா கொறடாவான அவருக்கு பதிலாக தானே தொகுதி எம்பியான ராஜன் விச்சாரேயை நியமித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஷான் ஜோஷிக்கு சிவசேனா கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இந்த … Read more

டிவி தொகுப்பாளர் கைது விவகாரம் உத்தர பிரதேசம், சட்டீஸ்கர் போலீசார் ஆடு புலி ஆட்டம்: ராகுல் விவகாரத்தால் பரபரப்பு

ராய்ப்பூர்: ராகுல் மீது அவதூறு பரப்பியதாக கைதான டிவி தொகுப்பாளர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளார். இந்த விவகாரத்தில் உ.பி, சட்டீஸ்கர் போலீசாரின் ஆடு, புலி ஆட்டத்தால் பரபரப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது வயநாடு எம்பி அலுவலகம் தாக்குதல் சம்பந்தமாக பேசிய கருத்தை உதய்பூரில் நடந்த கொலையுடன் தொடர்புபடுத்தி பாஜ மூத்த தலைவர்கள் போலியான வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதேபோல், ராகுல் வீடியோ குறித்து தவறான கருத்தை தனியார் தொலைக்காட்சி … Read more

கடந்த 2012 முதல் 2020 வரை அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியில் விளம்பர செலவு 4,200% அதிகரிப்பு

புதுடெல்லி: டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியில், விளம்பரங்களுக்கு அரசு செலவிடும் தொகை கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் 4,273 சதவீதம் அதிகரித்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. டெல்லி அரசு விளம்பரங்களுக்கு அதிக செலவிடுவதாக பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், பிஹாரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளர் கன்னையா குமார், டெல்லி அரசுவிளம்பரங்களுக்காக செலவிடும் தொகை குறித்த விவரங்களை தகவல் … Read more

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி-காத்மாண்டு பேருந்து சேவை தொடக்கம்

வட மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி மற்றும் நேபாளத்தின் காத்மாண்டு இடையே பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மாநில போக்குவரத்து அமைச்சர்  ஃபிர்ஹாத் ஹக்கீம், தொடங்கி வைத்தார். வாழ்வாதாரத்திற்காக சிலிகுரி, டார்ஜிலிங் மற்றும் அண்டை நாடான சிக்கிம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான நேபாள மக்களுக்கு இந்த சேவை பயனளிக்கும் என்றும், இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இந்த பேருந்து தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.  Source … Read more

இறக்குமதி செய்த நிலை மாறியது பொம்மைகள் ஏற்றுமதி 61 சதவீதம் அதிகரிப்பு: மோடியின் திட்டத்தால் பலன்

புதுடெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் ஏற்றுமதி கடந்த 3 ஆண்டுகளில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது, இறக்குமதி 70 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன. குழந்தைகளின் விளையாட்டு சம்பந்தப்பட்ட இந்த துறையில், பல லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடப்பதை கண்ட பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியாவில் பொம்மை தயாரிப்பை ஊக்கப்படுத்தி வருகிறார். இதற்கு, … Read more

வெளிநாடுகளில் கிராக்கி அதிகரிப்பு – நெல், கோதுமையை அதிகமாக பயிரிட மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: நடப்பு சீசனில் நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது. இதை அதிகரிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இந்தியாவின் அரிசி, கோதுமைக்கு கடுமையான தேவை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பரப்பளவை அதிகரிக்குமாறு மத்திய உணவுத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மாநில உணவு அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். நெல், கோதுமை அதிகம் பயிரிடும் மாநிலங்கள் மாற்று பயிர்களான எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகளை பயிரிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தேசிய அளவில் நெல் பயிரிடும் … Read more

சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ 10 குறைக்க வேண்டும் … மத்திய அரசு உத்தரவு

சமையல் எண்ணெயின் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே சீரான  விற்பனை விலையை நிர்ணயிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவதாகும். சர்வதேச விலை உயர்வை அடுத்து உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய் விலை உயரும் நிலை ஏற்பட்டது. ஆயினும் உலகளவில் விலை வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரிகளைஅழைத்து ஆலோசனை நடத்திய உணவுத்துறை … Read more