“சித்து மூசா பாதுகாப்புடன் செல்லவில்லை புல்லட் புரூப் காரில் பயணிக்கவில்லை” – காவல்துறை

பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூசேவாலாவுக்கு அளிக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பை அவர் ஏற்கவில்லை. புல்லட் புரூப் காரில் பயணிக்கவில்லை என்று காவல்துறை டிஜிபி வி.கே.பார்வா செய்தியாளர்களிடம் கூறினார். பாதுகாப்பு குறைபாடு குறித்த சர்ச்சை எழுந்த நிலையில்அவர் விளக்கம் அளித்தார். 3 துப்பாக்கிகள் மூலமாக 30 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சித்து மூசாவாலாவின் காரைப் பின்தொடர்ந்து சென்ற மர்மக் கார் குறித்த கண்காணிப்பு காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். Source link

18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?- நக்மா வேதனை

புதுடெல்லி: தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகையாக இருந்தவர் நக்மா. நடிகை ஜோதிகாவின் அக்காவான இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்று திகழ்ந்தார். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தவர் என்ற பெருமையும் நக்மாவுக்கு உண்டு. இவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. … Read more

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்க ஏற்பாடு : பிரதமர் மோடி

டெல்லி : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் பாஸ்புக் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருடன் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் … Read more

''18 ஆண்டுகளாகி விட்டது; இன்னும் எனக்கு தகுதியில்லையா?" – நக்மா கேள்வி

காங்கிரஸ் கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என நடிகை நக்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் 10 வேட்பாளா்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரிலிருந்து இருவரும், தமிழ்நாடு, ஹரியானா, கா்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவரும் போட்டியிடுகின்றனா். இந்த நிலையில் தனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் மகளிரணி பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா … Read more

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் சிறப்பாக பணியாற்றும் அமைச்சர்கள்: ஸ்மிருதி இரானிக்கு முதலிடம்

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சிறப்பாக பணியாற்றுவதில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-ல் அமைந்தது. தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. கடந்த 8 ஆண்டுகளில்… பதவியேற்று தற்போது 8 ஆண்டுகளை இந்த அரசு நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் … Read more

ஆந்திராவில் சரக்கு லாரியின் பின்புறத்தில் மோதி மினி லாரி விபத்து.!

ஆந்திர மாநிலம் பலநாடு மாவட்டம் ஸ்ரீ சேலம் பகுதியில் சாலையோரம் நின்ற சரக்கு லாரியின் பின்புறத்தில் மினி லாரி பலமாக மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பழுது காரணமாக சாலையோரம் நின்ற லாரியை கவனிக்காத மினி லாரி ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மினி லாரியில் பயணித்த 38 பேரில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

புல்வாமாவின் குண்டிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் தீவிரவாதி 2 பேர் சுட்டுக்கொலை

புல்வாமா: புல்வாமாவின் குண்டிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் தீவிரவாதி 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

'ராமர் கோயில் வெற்றியைத் தொடர்ந்தே காசி, மதுரா கோயில்கள் கோரிக்கைகள் எழுந்துள்ளன' – யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதைத் தொடர்ந்தே காசி, மதுராவில் கோயில்களின் உரிமைக் குரல் எழுந்துள்ளன என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கோயில் மசூதி சர்ச்சை தொடர்பான வழக்குகள் பல எழுந்துள்ள நிலையில் யோகி ஆதித்யாந்த் கூறியுள்ள இக்கருத்து கவனம் பெறுகிறது. லக்னோவில், பாஜக மாநில செயற்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசி யோகி ஆதித்யநாத், “உத்தரப் பிரதேசத்தில் மதக் கலவரங்கள் இல்லை. மாநிலத்தில் ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி … Read more

தூக்கத்திற்காக கஞ்சா பயன்படுத்தியதாக ஆர்யன் கான் வாக்குமூலம்: குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

மும்பை : மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மத்திய விசாரணை அமைப்பான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். நடுக்கடலில் கப்பல் சென்றபோது நடந்த இந்த சோதனையில், அங்கு போதைப்பொருள் விருந்து நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போதை விருந்தில் கலந்து கொண்டதாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் … Read more

இந்திய பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட ஒரே சாதனை : ராகுல் காந்தி விளாசல்

மும்பை : இந்திய பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட ஒரே சாதனை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு உயர் மதிப்புகளை கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழந்ததாக பிரதமர் மோடி அறிவித்தார். உயர் மதிப்புள்ள நோட்டுகளால் தான் ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு புழக்கம் போன்ற மோசடிகள் நடப்பதாக கூறிவிட்டு அதை விட அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது சர்ச்சையானது. பணமதிப்பு … Read more