தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் கருத்தரங்கு.. பிரதமர் மோடி பங்கேற்பு.!
வாரணாசியில் மூன்று நாள் நடைபெறும் அகில பாரதிய கல்வி தொடர்பான விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தேசிய கல்விக் கொள்கையின் இலக்கை அடைவதற்கான வழிகாட்டுதல் தொடர்பான கருத்தரங்கில் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் பங்கேற்க உள்ளனர். மாலையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் 1800 கோடி ரூபாய் மதிப்புடைய பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். Source link