‘காளி’ போஸ்டர் குறித்து சர்ச்சை கருத்து பெண் எம்பி மொய்த்ரா மீது மபி. போலீஸ் வழக்குப் பதிவு: எதிர்ப்பு வலுத்ததால் திரிணாமுல் விளக்கம்

கொல்கத்தா: ‘காளி’ போஸ்டர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை சமீபத்தில் ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில் ‘காளி’ வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்துக் கொண்டு, ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டருக்கு உலகளவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் … Read more

வானிலை ரேடார் பழுது கொல்கத்தா திரும்பிய தனியார் விமானம்: விளக்கம் கேட்டு டிஜிசிஏ நோட்டீஸ்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இருந்து சீனாவின் சாங்கிங் நோக்கி நேற்று முன்தினம் தனியார் சரக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமானத்தில் வானிலையை காட்டும் ரேடார் கருவி செயல்படவில்லை என்பதை விமானி கண்டறிந்தார். எனவே, பாதுகாப்பு கருதி விமானத்தை தரையிறக்க அவர் முடிவு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா விமான நிலையத்திலேயே விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்த தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் கடந்த சில நாட்களாக … Read more

கனமழையால் பொறியியல் கல்லூரியின் சுற்று சுவர் இடிந்து விழுந்து சேதம்..!

கர்நாடகாவில் கல்லூரியின் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் கார்கள் சேதமடைந்தன. தொடர் கனமழை காரணமாக மங்களூரு அருகேயுள்ள மூட்பிட்ரி என்ற இடத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் சுற்று சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது Source link

அரசியலமைப்பு குறித்து சர்ச்சை கருத்து – கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சாஜி செரியன் ராஜினாமா

கேரளா: அரசியலமைப்பு சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கேரள கலாச்சாரம், மீன்வளம் மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் சாஜி செரியன் ராஜினாமா செய்துள்ளார். சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் ராஜினாமா செய்துள்ளார். செவ்வாய்க்கிழமை பத்தனம்திட்டாவின் மல்லப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சாஜி செரியன், “இந்தியாவில் அழகான அரசியலமைப்பு உள்ளது என்று நாம் அனைவரும் கூறுகிறோம். ஆனால் நான் அதனை மக்கள் கொள்ளையடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்றே கூறுவேன். அரசியல் சாசனம், ஆங்கிலேயர்களால் சொல்லப்பட்டு இந்தியர்களால் … Read more

நாளை 2-வது திருமணம் செய்கிறார் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்கின் இரண்டாவது திருமணம் நாளை நடைபெறவிருக்கிறது. விவாகரத்து பெற்ற நிலையில் பகவத் மான் சிங் முதல் மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், தாய் மற்றும் சகோதரியின் விருப்பத்திற்கு ஏற்ப மருத்துவர் குர்பீத் கவுரை நாளை பகவந்த் நாளை கரம்பிடிக்கிறார். சண்டிகரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.   Source link

இமாச்சலத்தில் மேக வெடிப்பு: 4 பேர் வெள்ளத்தில் மாயம்

சிம்லா:  இமாச்சலில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பினால் கனமழை பெய்தது. இதனால்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 4 பேர் அடித்து செல்லப்பட்டனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமாகி வருகிறது. கடந்த மாதம் அசாம், திரிபுராவில் பெய்த மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அசாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் உள்ள மணிகரன் பகுதியில் நேற்று காலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு … Read more

நடுக்கடலில் சரக்கு கப்பலில் இருந்து பெறப்பட்ட பேரிடர் எச்சரிக்கை.. உடனடியாக விரைந்து 22 பேரை மீட்ட கடலோர காவல்படை!

குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்கரை அருகே உள்ள அரபிக்கடல் பகுதியில், சரக்குக் கப்பலில் இருந்து பேரிடர் எச்சரிக்கை பெறப்பட்டதையடுத்து, கடலோர காவல் படையினர் துருவ் ரக ஹெலிகாப்டர்களில் சென்று 22 ஊழியர்களை மீட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் கோர் பக்கானிலிருந்து இந்தியாவின் கர்வார் பகுதிக்கு,  6 ஆயிரம் டன் ஆஸ்பால்ட் ((Bitumen )) திரவத்தை ஏற்றி வந்த கப்பலில், நீர் உட்புகுந்து வெள்ளம் ஏற்பட்டதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  Source link

அதிமுக பொதுக்குழு விவகாரம் தனி நீதிபதியிடம் முறையிடலாம்: 23 தீர்மான வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வரும் 11ம் தேதி நடத்தப்பட உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த பிரச்னையில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதியை நாடலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், கடந்த மாதம் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் தடை விதித்துள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி … Read more

பஞ்சாப் முதல்வருக்கு இன்று 2வது திருமணம்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியை சேர்ந்த பக்வந்த் மான் இருந்து வருகின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டு முதல் மனைவியை பக்வந்த் மான் விவாகரத்து செய்தார். இந்நிலையில், பக்வந்த் இன்று 2வது திருமணம் செய்து கொள்கிறார். இது தொடர்பாக ஆம் ஆத்மியின் பஞ்சாப் தலைமை செய்தி தொடர்பாளர் மால்விந்தர் சிங் காங் கூறுகையில், ‘முதல்வர் பக்வந்த் மான் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். குர்பிரீத் கவுர் என்ற … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தன்னை யாரும் அவமதிக்கவில்லை – தமிழிசை செளந்தரராஜன்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றிருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார். சிதம்பரம் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனத்திற்கு சென்றிருந்தாக கூறிய அவர், கோவில் வளாகத்திற்குள் தான் அமர்ந்த போது இங்கே அமரக்கூடாது என்றும் அருகில் உள்ள இடத்தில் ஒருவர் சொன்னதாகவும் கூறியவர் அதனை அவமானமாக நினைக்கவில்லை என்றார். மேலும் சிதம்பரம் கோயில் என்றாலே பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் ஆனால் பிரச்சனைதான் வருகிறது. அவர்களுடைய பிரச்சனையை … Read more