பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளிக்கு வழிகாட்ட புதிய சாதனம் அறிமுகம்!

பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளிகள் துணையின்றி சாலையில் நடந்து செல்ல உதவும் புதிய சாதனத்தை பிரான்ஸைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. பொதுவாக பார்வை சவால் உடைய மாற்றுத்திறனாளிகள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, கைத்தடியை எடுத்துச் செல்வது வழக்கம். இப்போது அந்த கைத்தடி அவசியம் இல்லை. அவர்கள் தங்கள் தோள்பட்டையில் பொருத்திக் கொள்வது போன்ற ஒரு சாதனம் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் உள்ள 3டி கேமரா மூலம் சாலையில் உள்ள தடைகளும் … Read more

மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா உறுதி: காங். மூத்த தலைவர் கமல்நாத் தகவல்..!!

மும்பை: மராட்டிய முதலமைச்சர் உத்தவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தகவல் தெரிவித்துள்ளார். சற்று நேரத்தில் மராட்டிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தவ் தாக்கரேவை சந்திக்க முடியவில்லை என கமல்நாத் தெரிவித்திருக்கிறார். மராட்டிய சட்டப்பேரவை கலைக்கப்படுமா?சிவசேனா எம்.எல்.ஏக்கள் 40 பேர் உத்தவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் மராட்டிய சட்டப்பேரவை கலைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. … Read more

அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி – முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் உத்தவ் தாக்கரே?

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பதால், தனது முதல்வர் பதவியை அவர் இன்று ராஜினாமா செய்வார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனாவை சேர்ந்த 33 எம்எல்ஏக்களுடன் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அசாமில் முகாமிட்டுள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்த வேண்டும் என அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. ஆனால், இதனை முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கவில்லை. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் … Read more

#BREAKING ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் ஓபிஎஸ்!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பரபரப்பு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குறையாமல் உள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஓபிஎஸ் மீண்டும் தர்மயுத்தத்தை மீண்டும் கையில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தை நடத்த அனுமதி வழங்க கூடாது என ஓபிஎஸ் … Read more

அதிமுகவில் தற்போது அராஜகப் போக்கு, தர்மம் மீண்டும் வெல்லும் : ஓபிஎஸ்!!

அதிமுகவில் தற்போது சர்வாதிகார அராஜகப் போக்கு நிலவுவதாகவும், தர்மம் மீண்டும் வெல்லும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். காவலில் இருந்த காவல் துறையினர், அவரை தடுத்து தண்ணீரை ஊற்றினர். பின்னர் காவல் நிலையத்துக்கு அனைவரையும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியபிறகு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more

அசாம் மாநிலத்தை புரட்டிப் போட்ட கனமழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக அதிகரிப்பு

அசாம் மாநிலத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழையால் அசாம் மாநிலத்தில் சுமார் 32 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  உயிரிழப்புகளின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பாஜக உடன் கூட்டணி சேர சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி: உத்தவ் தாக்கரே நடத்திய தொலைபேசி வழி சமரச பேச்சு தோல்வி

மும்பை: மராட்டியத்தில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று சிவசேனா எம்எல்ஏக்கள் 40 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளதால் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தும், முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார். அவரது ஆட்சிக்கு இதுவரை ஆபத்து ஏற்படாத நிலையில், … Read more

15 வயது சிறுமி பலமுறை பலாத்காரம்.. 68 வயது முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், தான் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த … Read more

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு.. வெளியானது சூப்பர் அறிவிப்பு..!

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் பாடங்களை நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அனுமதித்துள்ளது. அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பு, தமிழகம் உட்பட 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருச்சி,மதுரை உட்பட 12 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசுப் … Read more

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி கலைகிறது? – செம கடுப்பில் முதல்வர் தாக்கரே!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சராக உள்ள சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். இதைத் … Read more