மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி கலைகிறது? – செம கடுப்பில் முதல்வர் தாக்கரே!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சராக உள்ள சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். இதைத் … Read more

ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு

மேலைநாடுகள் பொருளாதாரத் தடை விதித்ததற்கு மாறாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி ஏப்ரலில் முந்தைய ஆண்டைவிட மூன்றரை மடங்காக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைப்பதால் சீனா, இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றன. ஏப்ரலில் ரஷ்யாவில் இருந்து இந்தியா 130 கோடி டாலர் அளவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. நிலக்கரி, சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய், உரங்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்தால் இறக்குமதி மதிப்பு … Read more

மேகாலயாவில் வெளுத்து வாங்கிய கனமழை!: நிலச்சரிவில் சிக்கி குழந்தை உள்பட 8 பேர் பலி; 40,000 பேர் பாதிப்பு..முதலமைச்சர் நேரில் ஆய்வு..!!

கரோமலை: மேகாலயாவின் தெற்கு கரோமலை மாவட்டத்தில் நேரிட்ட கடும் நிலச்சரிவால் 4 நாட்களாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துவிட்டனர். வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மேகாலயாவில் பெய்த கனமழையை தொடர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு கரோமலை மாவட்டம், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. 6 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி 4 வயது குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கிராமங்களுக்கு … Read more

நீலகிரி: 2 குட்டிகளுடன் ஜாலியாக உலாவரும் கரடி – காட்டுக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னிகாதேவி காலணி கிராமத்தில் 2 குட்டிகளுடன் ஆக்ரோஷமாக உலாவரும் கரடியை அடர்ந்த வனப் பகுதிக்குள் அனுப்பு கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேவரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கோத்தகிரி அருகே கன்னிகா … Read more

நோபல் பரிசை ஏலம் விட்டு குழந்தைகளுக்காக ரூ.808 கோடி வழங்கிய பத்திரிகையாளர்..!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில், தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்க பதக்கத்தை விற்க ரஷ்யாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். கடந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுயுடன் இவருக்கு தங்கப் பதக்கமும், 5 லட்சம் டாலரும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசு தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு … Read more

#BIG NEWS:- பயங்கர நிலநடுக்கம்.. 130 பேர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு..!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தென்கிழக்கு கோஸ்ட் நகருக்கு அருகே, இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் … Read more

யார் இந்த திரெளபதி முர்மு? – கவுன்சிலர் முதல் ஜனாதிபதி வேட்பாளர் வரை…

குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களை காண்போம். இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற … Read more

கல்லூரி முதல்வரின் கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ

கர்நாடகாவில், அரசு ஐடிஐ கல்லூரியில் ஆய்வுக்கு சென்ற எம்.எல்.ஏ அக்கல்லூரியின் முதல்வரை அறைந்துள்ளார். மாண்டியாவில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஸ்ரீனிவாஸ், அக்கல்லூரி முதல்வர் நாகநாத்திடம் அது தொடர்பாக கேள்விகள் எழுப்பியதாக தெரிகிறது. ஆனால், கல்லூரி முதல்வர் அளித்த பதிலில் திருப்தி அடையாத எம்.எல்.ஏ, யாரும் எதிர்பாராத வகையில் சக ஊழியர்கள், அதிகாரிகள் முன்னிலையில் அவரை திட்டியதோடு கன்னத்தில் இருமுறை அறைந்தார்.  Source link

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 130 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 130 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தான், அதனை ஒட்டிய பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கியது ஒன்றிய அரசு!!

புதுடெல்லி: பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு ஒன்றிய அரசு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் … Read more