பிஹார் மாநிலத்தில் 191 கி.மீ. தூரம் ரயில் இன்ஜினுக்கு அடியில் பயணம் செய்த மனநோயாளி

பாட்னா: பிஹார் மாநிலத்தில் ஒருவர் ரயில் இன்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ பயணம் செய்துள்ளார். எனினும், அவர் பாதுகாப்பாக பயணம் செய்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பிஹார் மாநிலத்தின் ராஜ்கிர் நகரில் இருந்து வாரணாசிக்கு புத்தபூர்ணிமா சாரநாத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த திங்கட் கிழமை புறப்பட்டது. அந்த ரயில் பிஹார் மாநில தலைநகர் பாட்னா வழியாக அதிகாலை 4.10 மணியளவில் கயா வந்தடைந்தது. ரயிலை நிறுத்திவிட்டு அதன் இன்ஜின் ஓட்டுநர் சவுத்ரி கீழே இறங்கினார். … Read more

13 ஆண்டுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் லாலுபிரசாத் யாதவுக்கு: ரூ6 ஆயிரம் அபராதம்

மெதினி நகர்:  கடந்த 2009ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து ஜார்கண்ட் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2009ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ஜார்கண்ட்டுக்கு ஹெலிகாப்டரில் வந்தார். மெதினி நகரில்  உள்ள ஹெலிபேடில் தரையிறங்குவதற்கு பதிலாக விமானி அங்கிருந்த நெல் வயலில் ஹெலிகாப்டரை தரையிறக்கினார். இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக … Read more

சங்கராச்சாரியார்களின் கோரிக்கையை ஏற்று வாரணாசியில் போராட்டத்தை முடித்த துறவி

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக இந்து அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன. இந்நிலையில் அந்த சிவலிங்கத்துக்கு அன்றாடம் பூஜை செய்ய அனுமதி கோரி அயோத்தி மடத்தின் அதிபதி சுவாமி அவிமுக்தேஷ் வரானந்த் உண்ணாவிரதம் தொடங்கினார். இதில் உணவு, நீர் அருந்தாமல் வாரணாசியின் கங்கை படித்துறையில் உள்ள வித்யாமடத்தில் அமர்ந்தார். இதனால், அவரது உடல்நிலை மோசமானது. இச்சூழலில் உண்ணாவிரதத்தை முடிக்கக் கோரி நேற்று ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த் சரஸ்வதி கடிதம் … Read more

கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: சீனா விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.கடந்த 2010-2014ம் ஆண்டு ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்தது. இந்த … Read more

78 மணி நேரத்தில் 25 கி.மீ. நெடுஞ்சாலை – புனே நிறுவனம் கின்னஸ் சாதனை

புதுடெல்லி: புனேயைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் 25.56 கி.மீ. நீளத்திற்கு தார் சாலையை 78 மணி நேரத்தில் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தேசிய நெடுஞ்சாலையில் (என்ஹெச்-53) இந்த சாதனையை இந்நிறுவனம் புரிந்துள்ளது. கத்தார் நாட்டில் தோஹா எனுமிடத்தில் 25.27 கி.மீ. தூர தார் சாலை போட்டதே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை தற்போது இந்திய நிறுவனம் முறியடித்துள்ளது. ராஜ்பாத் இன்பிராகான் என்ற நிறுவனம் 800 பணியாளர்கள் மற்றும் 700 தொழிலாளர்கள் … Read more

கேரள அரசை கதி கலங்க வைக்கும்2 பெண்கள்: * ஆட்டம் காணும் முதல்வர் பினராய்: விஸ்வரூபம் எடுக்கும் தங்கம் கடத்தல்

‘அரசியல்’ என்றால் ஆண்கள் ஆதிக்கம்தான் என்று கூறுவார்கள். ஆனால், அரசியலில் சாணக்கியர்களாக பெண்கள் உள்ளனர். சிறிய அரசு பதவிகள் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முதல்வர், கவர்னர், ஜனாதிபதி வரை அலங்கரிக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களிலும் தலைமை பொறுப்பில் அமர்ந்து ஆளுமையை வெளிப்படுத்துகின்றனர். அதே நேரம், சட்ட விரோத செயல்களால் சீரழியும் பெண்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட 2 பெண்கள்தான் சரிதா, சொப்னா. விவிஐபி.க்களின் கூடா நட்பு, திடீர் வளர்ச்சி, கத்தை கத்தையாக பணம் போன்ற ஆசை … Read more

கேரள தங்கக் கடத்தல் | முதல்வர் பினராயி, குடும்பத்தினருக்கு தொடர்பு – பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கொச்சி: தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த ஒரு பார்சலை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இருந்த 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர். அந்த பார்சலில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) துணைத் தூதரக முகவரிகுறிப்பிடப்பட்டிருந்தது. … Read more

ஞானவாபி வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு கொலை மிரட்டல் கடிதம்

புதுடெல்லி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததைத்தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்து கடவுள் உருவங்கள் மற்றும் சிலைகள் இருப்பதாகவும் அதனை வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக்கூறி இந்து அமைப்புகள் சார்பில் வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்குகளை வாரணாசி மாவட்ட நீதிபதி ரவிக்குமார் … Read more

பாடம் எடுக்காமல் வகுப்பறையில் தூங்கிய அரசுப் பள்ளி ஆசிரியை : விசிறி விடும் மாணவி

பீகாரில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் உறங்கி கொண்டிருக்க, அவருக்கு மாணவி கைவிசிறி கொண்டு விசிறி விடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மேற்கு சம்பரான் மாவட்டத்தின் பகாஹி புரைனா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை, வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் போதே நாற்காலியில் அமர்ந்து உறங்கியதை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பலர் வலியுறுத்திய நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நாற்காலியில் … Read more

மருத்துவ உலகில் புதிய மைல்கல் புற்றுநோயை பூரண குணமாக்கும் மருந்து: அமெரிக்க ஆய்வில் அதிசயிக்கத்தக்க தகவல்

புதுடெல்லி: மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளின் கட்டிகள் ஆறு மாதம் டோஸ்டார்லிமாப் என்ற புதிய மருந்து எடுத்து கொண்டதில் கரைந்து, அவை இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று அமெரிக்க மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் புதிய மைல்கல்லாகும்.நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:மிஸ்மேட்ச் ரிப்பேர் (எம்எம்ஆர்) குறைபாடுள்ள செல்கள் பொதுவாக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பல டிஎன்ஏ மரபணு மாற்றங்களை கொண்டுள்ளன. இந்த குறைபாடு … Read more