Agnipath Scheme: அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது: அஜித் தோவல் திட்டவட்டம்!

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, அக்னிபத் என்ற ராணுவத்தில் சேரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில், ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். 4 ஆண்டுகள் பயிற்சி முடிந்த பிறகு, 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவர். 75 சதவீத … Read more

கடன் தொல்லை .. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலையில் 13 பேர் கைது..!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்திருக்ககலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடன்கொடுத்த நபர்கள் அவர்களை துன்புறுத்தியதாக தற்கொலை செய்து கொண்டவர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவும் , இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். Source link

ஜூன் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: ஜூன் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 6ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும்; அதற்கு மேல் ஒத்திவைக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிப்பு

புது டெல்லி: எதிர்வரும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. “எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை போட்டியிட செய்து மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு சேதம் செய்வதை தடுக்க முடிவு செய்துள்ளோம். இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் யஷ்வந்த் சின்காவை பொது வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். அனைத்து அரசியல் கட்சிகளும் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிக்க வேண்டும்” … Read more

போர்க்கொடி தூக்கிய அமைச்சர் – கட்சி பதவியில் இருந்து நீக்கம்!

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கிய அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சராக உள்ள சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்று … Read more

அப்படியே காலை தூக்கி ஓங்கி அடித்து போலீஸை தவிக்கவிட்ட குடிமகள்..! பல்டி அடித்து ரோட்டில் உருண்டு ரகளை.!

குடி போதையில் வாகனம் ஓட்டிய பெண்ணிடம் சிக்கி, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தவித்த சம்பவத்தின் வீடியோகாட்சிகள் வெளியாகி உள்ளது. மும்பை சாலையில் குடிமகள் செய்த ரகளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. குடிச்சிட்டு கார் ஓட்டிய அந்த பொண்ண பார்த்த போலீசாருக்கு முதலில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அது நம்மகிட்ட சிக்கவில்லை, நாம் தான் அந்த குடிமகளிடம் சிக்கி இருக்கிறோம் என்று..! மும்பையில் குடி போதையில் காரை ஓட்டிவந்த பெண் போலீசில் சிக்கினார். போலீசிடம் சிக்கிய … Read more

உலகின் மிக உயரமான படேல் சிலைக்கு அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு: நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

குஜராத்: குஜராத்தில் ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) எனக் கூறப்படும் வல்லபாய் படேல் சிலைக்கு அருகே 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத்தின் நர்மதா மாவட்டத்தின் கெவாடியா கிராமத்தில் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை உலகிலேயே உயரமான சிலையாக கருதப்படுகிறது. இதை ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) என்று அழைப்பார்கள். இந்தச் சிலைக்கு அருகே நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் வீரியம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக … Read more

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடிவதையொட்டி ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதனால் ஆளும் பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றன. ஆளும் பாஜக கூட்டணி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கடந்த சில தினங்களாக டெல்லியில்  ஆலோசனை நடத்தப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை … Read more

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா வரும் 27-ல் வேட்புமனு தாக்கல்

வரும் 27-ல் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா வரும் 27-ல் வேட்புமனு தாக்கல் குடியரசுத் தலைவர் தேர்தலில் கடந்த 15-ந் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம் 29-ந் தேதி கடைசிநாளாகும் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜுலை 18-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு சரத்பவார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா … Read more