மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது
மும்பை: மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் தேர்வாகிறார்.நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மும்பை: மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் தேர்வாகிறார்.நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
புதுடெல்லி: உதய்பூர் தையல்காரர் கன்னையா லால் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, வரும் 12-ம் தேதி வரை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது அங்கு கூடியிருந்த பொது மக்களும் வழக்கறிஞர்களும் தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள், “கன்னையா லாலை கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க … Read more
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மருந்துக் கடைக்காரரான உமேஷ் கோலே கடந்த மாதம் 21ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இர்பான் கான் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். முதலில் இது வழிப்பறிக் கொள்ளை தொடர்பான கொலை என்று கூறி வந்த போலீசார் தற்போது நுபுர் சர்மாவை ஆதரித்ததற்காக கொல்லப்பட்டப்பட்டதாகக் கூறியுள்ளனர். உதய்பூர் தையற்கலைஞர் … Read more
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதி அருகே பாகிஸ்தான் பகுதியில் 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். நேற்று இரவு 7 மணியளவில் அவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளான். புதிய இடம் என்பதால் வீட்டிற்கு செல்வதற்கு வழி தெரியாமல் சிறுவன் அப்பா, அப்பா என அழுதுள்ளான். இதனை பார்த்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அவனை மீட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை முன்னிலையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் சிறுவன் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டான்.
புதுடெல்லி: மத்திய அரசு செயல்படுத்தும் பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு உலக வங்கி 175 கோடி டாலர் (ரூ.13,834.54 கோடி) கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 100 கோடி டாலர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கும் 75 கோடி டாலர் மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கும் வழங்கப்படுகிறது. இத்தகவலை இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குநர் ஹைதெகி மோரி தெரிவித்துள்ளார். தனியார் முதலீடுகள் குறைந்துள்ள சூழலில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க 75 கோடி டாலரை முதலீட்டு திட்டப் பணிகளில் முதலீடு செய்ய … Read more
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனையில் … Read more
புதுடெல்லி: நாடு முழுவதும் 6 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தென் பருவமழை வழக்கமாக நாடு முழுவதும் ஜூலை 8ம் தேதி தொடங்கும். ஆனால், இந்தாண்டு பெரும்பாலான மாநிலங்களில் முன்கூட்டியே தொடங்கி விட்டது. ராஜஸ்தான், குஜராத்தில் மட்டும் மழை இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் முதல் இங்கும் பருவ மழை பெய்ததால், தென்மேற்குப் பருவமழை சாதாரண தேதிக்கு 6 நாட்களுக்கு முன்பாகவே நாடு முழுவதும் தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், … Read more
மும்பை: மகாராஷ்டிர பேரவைத் தலைவர் தேர்தலில் பாஜக, சிவசேனா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு அசாமில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கினார். இதையடுத்து பேரவையில் பலத்தை நிரூபிக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, ஆளுநர் … Read more
புதுடெல்லி: ‘நீதிமன்றங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளது,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டமாக பேசியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: இந்த ஆண்டு இந்தியா 75வது சுதந்திர தின விழா கொண்டாடுகிறது. இந்தியா குடியரசு ஆகி 72 ஆண்டுகள் ஆகின்றன. அப்படியிருந்தும் அரசியலமைப்பின்படி ஒவ்வொரு அமைப்புக்கும் வழங்கப்பட்ட பணிகள் குறித்து நாம் இன்னும் … Read more
ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை தொடங்கியது. இக்கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். பிரதமர் மோடியை வரவேற்க அங்கிருந்த கோலாட்டம் கலைஞர்களுடன் இணைந்து அவர் கோலாட்டம் ஆடி கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஹைதராபாத்தில் பிரதமர் மோடி வரும் வழியெல்லாம் ஆளும் டிஆர்எஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பல எதிர்ப்பு பலகைகளை பார்த்தேன். இதைப் பார்க்கும்போது தெலங்கானா முதல்வர் கேசிஆர் எவ்வளவு தூரம் … Read more