மாநிலங்களவைத் தேர்தல் | மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜக வெற்றி – ஆளும் சிவசேனா, தேசியவாத காங். கூட்டணிக்கு பின்னடைவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஏற்கெனவே தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், பஞ்சாப், தெலங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் இருந்து 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வாகினர். கர்நாடகா, ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் 16 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள 4 இடங்களில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | டெல்லியில் ஆலோசனை கூட்டம் – சோனியா, ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாததை வெளிச்சம் போட்டுக் காட்டின. இந்த சூழ்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான … Read more

'எதிர்க்கட்சியின் போராட்டங்கள் எந்த பலனையும் தரப்போவதில்லை' – தங்கக்கடத்தல் விவகாரத்தில் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: மக்கள் இடதுசாரி அரசாங்கத்துடன் இருக்கிறார்கள், இதனால் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்திவரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தங்கம் … Read more

ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்: சொப்னா பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில் உள்ள சொப்னா நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் சூட்கேசில் துபாய்க்கு பணத்தை கடத்தினார் என்றும், அமீரக துணைத் தூதரின் வீட்டிலிருந்து பிரியாணி பாத்திரங்களில் பினராயி விஜயனின் வீட்டுக்கு தங்கம் கடத்தப்பட்டது என்றும் அவர் கூறியதால், பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் கேரளா முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பினராயி விஜயனின் சார்பாக ஷாஜ் … Read more

காஷ்மீரில் இன்று அதிகாலை ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக் கொலை: 6 லஷ்கர் தீவிரவாதிகள் அதிரடி கைது

குல்காம்: கண்டிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி ஒருவன் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம்  பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்றிரவு முகாமிட்டு தீவிரவாதிகளை சுற்றிவளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். அப்போது நடந்த பதிலடி என்கவுன்டரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் … Read more

மாநிலங்களவைத் தேர்தல் – 8 இடங்களில் பாஜக வெற்றி

நான்கு மாநிலங்களில் 16 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக 8 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் மூன்று இடங்களையும், பாஜக ஓரிடத்தையும் பிடித்தன. பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட ஊடக அதிபர் சுபாஷ் சந்திரா தோல்வியடைந்தார். மகாராஷ்டிரத்தில் பாஜக மூன்று இடங்களையும், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியன ஒவ்வொரு இடத்தையும் பிடித்தன. சிவசேனாவின் இரண்டாவது வேட்பாளர் சஞ்சய் பவார் தோல்வியடைந்தார். கர்நாடகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் உட்பட பாஜகவின் மூன்று வேட்பாளர்களும் … Read more

நித்யானந்தா, ஜீவசமாதி அடைந்தாரா?.. சிலைகளை வைத்து நடத்தப்பட்ட சிறப்பு பூஜையால் சர்ச்சை

புதுடெல்லி: சர்ச்சை சாமியார் நித்யானந்தா, ஜீவசமாதி அடைந்தாரா, அவரது உடல் நிலை எப்படி இருக்கிறது என்று அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் அவரது சிலைகளை வைத்து நடத்தப்பட்ட பூஜையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கைலாசாவில் இருக்கும் சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில மாதங்களாகவே இந்த பேச்சு உள்ளது. சமீபத்தில் வீடியோ வெளியிட்ட அவர், ‘நான் நல்ல … Read more

நடப்பு நிதியாண்டில் மின்சார வாகனங்கள் விற்பனை மும்மடங்காக அதிகரிக்கும் – உற்பத்தியாளர் சங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் மும்மடங்காக அதிகரிக்கும் என மின்வாகன உற்பத்தியாளர் சங்கம் கணித்துள்ளது. மின்சார வாகனங்களில் ஒருசில தீவிபத்துக்கள் நேர்ந்தாலும் 2021 – 2022 நிதியாண்டில் மூன்று இலட்சத்து 40 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 42 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்ற நிலையில், தீவிபத்துக்களின் காரணமாக மே மாதத்தில் 20 விழுக்காடு சரிந்து 32 ஆயிரத்து 600 ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும் … Read more

ரயில்வே வாரிய தேர்வுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தமிழகத்தில் இருந்து ரயில்கள் புறப்படும் இடங்கள் எவை?

புதுடெல்லி: இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி வருகிறது. வழக்கமாக தேர்வு மையங்கள் வெவ்வேறு நகரங்கள், மாநிலங்களில் இடம்பெறும். இதனால் விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே தயாராக வேண்டி வரும். இதையொட்டி ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்து தரப்படும். அந்த வகையில் நடப்பு வாரத்தின் இறுதி நாட்களில் ஆர்ஆர்பி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வை முன்னிட்டு புவனேஸ்வர் – தாம்பரம் இடையே கிழக்கு கடற்கரை … Read more

3 கொரோனா அலைகளை சந்தித்த இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது – அமெரிக்கா பாராட்டு

3 கொரோனா அலைகளை சந்தித்த இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டு வருவதாக அமெரிக்க நிதித்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 2020ஆம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் குறைந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியதுடன் எட்டு சதவித வளர்ச்சியை அடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தியதும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றியதாக அமெரிக்கா கூறியுள்ளது.  Source link