எரிவாயு வாகனங்களின் விற்பனை புதிய உச்சம் தொடும் – தயாரிப்பு நிறுவனங்கள்

எரிவாயு வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தை எட்டக் கூடும் என வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஐந்தரை ரூபாய் வரை செலவாகும் அதே நேரத்தில் எரிவாயு வாகனங்களுக்கு இரண்டு ரூபாய் 20 காசுகளே செலவாகிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 2 இலட்சத்து 61 ஆயிரம் எரிவாயு வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டில் டீசல் வாகனங்களைவிட எரிவாயு வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பத்தாயிரம் … Read more

பழைய பொருள் வியாபாரியிடம் 1,105 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்; புனே போலீசார் அதிரடி நடவடிக்கை

புனே: புனேயில் பழைய பொருட்கள் வியாபாரியிடம் இருந்து 1,105 துப்பாக்கி குண்டுகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அந்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் குருவார் பெத் பகுதியில் ஸ்கிராப் டீலர் (பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரி) தினேஷ் குமார் (34) என்பவரிடம் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதாக குற்றப்பிரிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு, ஸ்கிராப் டீலரின் இருப்பிடங்களில் சோதனை … Read more

ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட போகேஷ்வரா யானை மறைவு: இணையத்தில் புகைப்பட அஞ்சலி

பந்திப்பூர்: ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட யானை என அறியப்பட்டு வந்த போகேஷ்வரா கர்நாடகாவில் உயிரிழந்தது. அந்தச் செய்தியை அறிந்து கானுயிர் ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்திப்பூர் – நாகர்ஹோளே காப்புக் காட்டுப்பகுதியில் கடந்த 11-ஆம் தேதி அன்று யானை ஒன்று உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அந்த யானையின் உடலை பார்த்த வனவிலங்கு அதிகாரிகள் உயிரிழந்தது போகேஷ்வரா யானை என்பதை உறுதி செய்துள்ளனர். இதன் நீளமான தந்தத்திற்காக … Read more

சத்யேந்திர ஜெயினுக்கு நீதிமன்ற காவல்: ஜாமீன் மனு நாளை விசாரணை!

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். உள்துறை, மின்சாரம், பொதுப்பணித் துறை, தொழில், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய முக்கிய இலாகாக்களையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி.!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதன் முறையாக 78 ரூபாய் என்கிற வரம்புக்கும் கீழ் சரிந்துள்ளது. முந்தைய நாள் வணிகநேர முடிவில் ஒரு டாலர் 77 ரூபாய் 84 காசுகளாக இருந்தது.  கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீடு திரும்பப் பெறல் ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக வணிக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.  Source link

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பு; ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை: திருத்தப்பட்ட சட்ட அறிவிப்பை வெளியிட அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு, ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும் உள்ளிட்ட புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பான சட்ட திருத்த அறிவிப்பை வெளியிடுமாறு ஒன்றிய அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டு வருவதற்குத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல, வாக்காளர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. … Read more

உ.பி: அபராதம் விதித்த இன்ஸ்பெக்டரை பழிவாங்க மின்ஊழியர் செய்த வேற லெவல் சம்பவம்

உத்தரப் பிரதேசத்தில் அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளரை பழி வாங்கும் வகையில், காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்ட திருட்டு மின் இணைப்பை லைன் மேன் ஒருவர் துண்டித்துள்ளார். பரேலி அருகே தலைக்கவசம் அணியாமல் சென்ற பகவான் ஸ்வரூப் என்ற மின்வாரிய ஊழியருக்கு காவல் உதவி ஆய்வாளர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட காவல் ஆய்வாளர் பணியாற்றும் ஹர்தாஸ்புர் காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை ஸ்வரூப் துண்டித்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஸ்வரூப், “காவல் நிலையம் மின்சார … Read more

'விசாரணை அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி' – காங்., பேரணிக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜராவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேரணி, விசாரணை அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விசாரணை அமைப்புக்கு அழுத்தம் தரும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று பேரணி நடத்தியுள்ளனர். காந்தி குடும்ப ஊழல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதனால், காந்தி குடும்பத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியாகவே … Read more

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா கொலை வழக்கில் மேலும் இருவர் கைது..!

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை குஜராத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ் ஜாதவ், நவ்நாத் சூர்யவன்ஷி ஆகியோரை ஜூன் 20ம் தேதி வரை காவலில் எடுத்துள்ளதாகவும், சித்து மூசாவாலா கொலைக்கும், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மகாராஷ்டிராவின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி குல்வந்த் சாரங்கல் தெரிவித்துள்ளார்.  Source link

ராஜஸ்தான் காங். அமைச்சரின் மகனால் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண் மீது ‘மை’ வீச்சு; தாயுடன் நடந்து சென்ற போது தாக்குதல்

புதுடெல்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரின் மகன் ரோஹித் ஜோஷியால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், தனது தாயுடன் நடந்து சென்ற போது மர்ம நபர்கள் மை வீசிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்கிழக்கு டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் 23 வயது இளம்பெண் கடந்த மே 8ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் டெல்லி போலீசில் புகார் அளித்தார். அதில், ‘ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அமைச்சர் மகேஷ் … Read more