​ராகுல் காந்​தி​யின் 55-வது பிறந்த நாள்: பிரதமர் நரேந்​திர மோடி வாழ்த்து

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 55-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கிய வாழ்க்கையும் பெற்றிட கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார். இதுபோல் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் … Read more

ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: இலங்கைக்கு தப்ப முயன்ற முன்னாள் எம்எல்ஏ கைது

திருப்பதி: ஆந்​தி​ரா​வில் ஜெகன் ஆட்​சி​யின் போது நடை​பெற்ற மது​பான கொள்கை ஊழல் குறித்த விசா​ரணை​யில் ரூ.1000 கோடிக்​கும் மேல் ஊழல் நடந்​துள்​ளது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவ்​வழக்​கில் சந்​திரகிரி பேரவை தொகு​தி​யின் முன்​னாள் எம்எல்ஏ​வும், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முன்​னாள் சிறப்பு அறங்​காவலர் குழு உறுப்​பினரு​மான செவிரெட்டி பாஸ்​கர் ரெட்​டியை ஆந்​திர போலீ​ஸார் செவ்​வாய்க்கிழமை இரவு பெங்​களூரு விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர். இவர் இலங்கை தப்​பிச்செல்ல முயன்​ற​தாக கூறப்​படுகிறது. இவ்​வழக்​கில் ஏற்​கெனவே கைதான முக்​கிய குற்​ற​வாளி​யான கசிரெட்டி ராஜசேகர … Read more

அகமதாபாத் விமான விபத்தில் ஆயுள் காப்பீடு செய்தவரும் நியமனதாரரும் இறப்பு: இழப்பீடு வழங்குவதில் சிக்கல்

அகமதாபாத்: ஏர் இந்​தியா விமான விபத்​தில் பயணம் செய்த பெரும்​பாலான காப்​பீட்​டு​தா​ரரும், அவர் நியமித்த நாமினி​யும் ஒருசேர உயி​ரிழந்​துள்​ளனர். இதனால், இழப்​பீட்டு தொகையை வழங்குவதில் காப்​பீட்டு நிறு​வனங்​களுக்கு மிகப்​பெரிய குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது. ஜூன் 12-ம் தேதி அகம​தா​பாத்​தில் இருந்து லண்​டன் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. விமானத்​தில் பயணம் செய்த 241 பேர், கட்​டிடத்​துக்​குள் இருந்த 29 பேர் என மொத்​தம் 270 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் குடும்​பத்​துடன் லண்​டன் சென்​றபோது இந்த துயர சம்​பவம் … Read more

ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து – வேறு நீதிபதிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நீதிமன்றத்தில் ஆஜரான … Read more

கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம்: 4 மாநில இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது

புதுடெல்லி: கேரளா, குஜராத் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 73 சதவீத வாக்குகள் பதிவானது. கேரளாவில் நிலம்பூர், மேற்கு வங்கத்தில் காலிகஞ்ச், பஞ்சாபில் மேற்கு லூதியானா, குஜராத்தில் விசாவதர், காடி ஆகிய 5 தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. நிலம்பூரில் சுயேச்சை எம்எல்ஏ பி.வி.அன்வர், விசாவதரில் ஆம் ஆத்மி எல்ஏ புபேந்திர பயானி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் … Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

புதுடெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி, சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து இன்று வீடு திரும்பினார். காங்​கிரஸ் நாடாளு​மன்ற கட்சி தலை​வர் சோனியா காந்​திக்கு வயிறு தொடர்​பான பிரச்​சினை ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து டெல்​லி​யில் உள்ள சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனு​ம​திக்​கப்​பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து கங்கா ராம் மருத்​து​வ​மனை​யின் தலை​வர் டாக்​டர் அஜய் ஸ்வரூப் … Read more

3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: கூட்ட நெரிசல் சம்பவங்களை கையாள கர்நாடகா திட்டம்

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கர்நாடக அரசு கூட்டங்களைக் கையாள புதிய சட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெரும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு பொறுப்பாவார்கள், மூன்று வருட சிறை தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் என்று பல்வேறு விதிகளை வகுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையில், நிகழ்ச்சிகளை நடத்தும் முன்னர் நிகழ்ச்சி நடத்தும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் … Read more

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. புகார் அளித்த ஊழியர்கள் பணிநீக்கம்!

ஏர் இந்திய விமான ஊழியர்கள், விமானத்தில் ஏற்பட்ட கோளாறை புகாராக தெரிவித்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுத்தி உள்ளார். 

“விபத்துக்குள்ளான போயிங் 787 விமானம் நன்கு பராமரிக்கப்பட்டதே” – ஏர் இந்தியா சிஇஓ

புதுடெல்லி: விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நன்கு பராமரிக்கப்பட்டு, விமானம் மற்றும் என்ஜின்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார். கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்தனர். … Read more

“இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவர்…” – அமித் ஷா பேச்சு

புதுடெல்லி: “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி ஆசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவின் அடையாளத்துக்கு தாய்மொழிகள் முக்கியமானவை. வெளிநாட்டு மொழிகளை விட அவை முன்னுரிமை பெற வேண்டும். இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் … Read more