புதிய வந்தே பாரத் ரயில்கள் அதிக வசதிகளை தருகின்றன: பிரதமர் மோடி பெருமிதம்

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் ரயில் நிலை​யத்​திலிருந்து 4 புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார். புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​கள் பனாரஸ்​–கஜு​ராஹோ, லக்​னோ–ஷஹா​ரான்​பூர், பிரோஸ்​பூர்​–டெல்​லி, எர்​ணாகுளம்​–பெங்​களூரு ஆகிய வழித்​தடங்​களில் இயக்​கப்​படும். வாராணசி​யில் நடை​பெற்ற விழா​வில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இந்​தியா சர்​வ​தேச அளவில் பொருளா​தார வளர்ச்​சி​யில் மிக வேக​மாக வளர்ந்து கொண்டு இருக்​கிறது. தற்​போது, இந்​திய ரயில்​வே​யில் வந்தே பாரத், நமோ பாரத், … Read more

பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: பிஹாரில் சாலை​யோரம் விவி​பாட் ஒப்​பு​கைச்​சீட்டு கிடந்​தது குறித்து தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​துள்​ளது. பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான முதல்​கட்ட வாக்​குப் பதிவு கடந்த 6-ம் தேதி நடை​பெற்​றது. இந்​நிலை​யில் பிஹாரின் சமஸ்​திபூர் மாவட்​டத்​தில் சாலை​யோரம் விவி பாட் ஒப்​பு​கைச்​சீட்​டு​கள் சிதறிக் கிடக்​கும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யானது. இதையடுத்து தேர்​தல் ஆணை​யம் விரைந்து நடவடிக்கை மேற்​கொண்​டது. இதுகுறித்து தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று கூறிய​தாவது: சம்பவ இடத்​துக்கு சமஸ்​திபூர் மாவட்ட ஆட்​சி​யர் நேரில் … Read more

மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக குடும்பத்தினர் தவிப்பு 

ராய்ப்பூர்: கிறிஸ்​தவத்​துக்கு மதம் மாறிய​வரின் உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதனால் 3 நாட்​களாக உடலை அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவித்து வரு​கின்​றனர். சத்​தீஸ்​கர் மாநிலம் கான்​கெர் மாவட்​டம், கோடிகுர்ஸ் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மனிஷ் நிஷாத் (50). உடல்​நலம் பாதிக்​கப்​பட்ட மனிஷ், ராய்ப்​பூர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் அவர் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது குடும்​பத்​தினர் மனிஷ் உடலை கிராமத்​துக்கு கொண்டு … Read more

மகாத்மா காந்தி அன்று எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது: பிரியங்கா காந்தி

கட்டிஹார் (பிஹார்): ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது என பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்டிஹார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, “பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தைப் பேணவில்லை. ஒருபக்கம் அவர், அகிம்சைக்கான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார். மறுபக்கம், நாட்டு துப்பாக்கி பற்றிப் பேசுகிறார். ஒரு காலத்தில் … Read more

‘நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?’ – பணத்தை இழந்த திரிணமூல் எம்.பி கேள்வி

புதுடெல்லி: திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி கல்​யாண் பானர்​ஜி​யின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.57 லட்​சம் மோசடி செய்​யப்​பட்டது. தற்போது அந்த பணம் அவரது வங்கிக் கணக்கில் மீண்டும் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ‘நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு ஏன் இல்லை?’ என நிதி அமைச்சகத்தை நோக்கி அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் கூறியது: “மக்கள் பிரதிநிதியான நானே சைபர் மோசடியால் பாதிக்கப்பட்ட நிலையில் சாமானிய … Read more

பிஹார் தேர்தலில் வாக்குப் பதிவு அதிகரிப்பது எதற்கான அறிகுறி? – ஒரு விரைவுப் பார்வை

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 1,314 வேட்பாளர்கள் களம் கண்டன இந்தத் தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு பிஹார் தேர்தல் களத்தின் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. 2020 பிஹார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போதைய வாக்குப்பதிவு 7.79% அதிகரித்துள்ளது. 2024 மக்களவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 8.8% அதிகரித்துள்ளது. பொதுவாகவே வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஆட்சிக்கு எதிரான … Read more

“தமிழ் இலக்கியம், கலாச்சாரத்தில் சமணத்தின் பங்களிப்பு உள்ளது” – சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுடெல்லி: தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த பங்களிப்பு உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சமண மத ஆச்சார்யர் ஹன்ஸ்ரத்னா சூரிஷ்வர்ஜி மகாராஜ்-ன் எட்டாவது 180 உபவாச பர்ண விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “உலகின் பழமையான மதங்களில் ஒன்றான சமண மதத்தின் போதனைகளான அஹிம்சை (வன்முறையின்மை), சத்தியம் (உண்மை), அபரிகிரஹா … Read more

வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்காக பொய் சொல்வதா? – ராகுல் காந்தி மீது ராஜ்நாத் சிங் காட்டம்

ரோஹ்தாஸ் (பிஹார்): வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்காக வாக்கு திருட்டு நடப்பதாக பொய் சொல்வதா என ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரின் ரோஹ்தாஸில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “பிஹார் தேர்தலை முன்னிட்டு வாக்கு திருட்டு குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைக்கிறார். இதன்மூலம், தேர்தலுக்கு முன்னதாக அவர் வாக்காளர்களை தவறாக வழிநடத்துகிறார். பிஹார் மக்களின் வாக்குகள் திருடப்படுவதாக ராகுல் காந்தி உண்மையிலேயே நம்பினால், தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் … Read more

‘சரக்கு அடி.. பீடி புடி’ மனைவிக்கு பேய் ஓட்ட கணவன் செய்த காரியம்!

Woman Forces To Drink Alcohol During Black Magic Rituals: பேயை விரட்டுவதாக கூறி,  பெண்ணை அவரது குடும்பமே சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தும், பீடி புகைக்க வைத்தும் கட்டாயப்படுத்தியது தெரியவந்தது.  

பிஹாரில் இருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்: அமித் ஷா

பூர்னியா (பிஹார்): சீமாஞ்சல் பகுதியில் இருந்தும், பிஹாரில் இருந்தும் ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பூர்னியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு குழுக்களாக கட்சிகள் பிரிந்துள்ளன. ஒருபக்கம், குண்டர்களின் கூட்டணி. மறுபக்கம், பஞ்சபாண்டவர்களைப் போல 5 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி. பிஹார் முதற்கட்டத் தேர்தல் நடந்து … Read more