பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பேச்சு: உக்ரைன், காசா போர் குறித்து முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: பி​ரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்​ரான், பிரதமர் நரேந்​திர மோடியை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். உக்​ரைன் போரை நிறுத்​து​வது தொடர்​பாக கடந்த 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வில் சந்​தித்​துப் பேசினர். இதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்​பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்​ரான் உட்பட ஐரோப்​பிய தலை​வர்​கள் உடன் இருந்​தனர். இந்த சூழலில் … Read more

ஜப்பான்​ உச்​சி மாநாட்டில்​ பங்கேற்க பிரதமர்​ மோடி அடுத்த வாரம்​ பயணம்​

புதுடெல்​லி: இந்​தி​யா​வில்​ அடுத்​த 10 ஆண்​டு​களில்​ 68 பில்​லியன்​ டாலரை அதாவது இந்​தி​ய மதிப்​பில்​ சுமார்​ ரூ.6 லட்​சம்​ கோடியை முதலீடு செய்​ய ஜப்​பான்​ இலக்​கு நிர்​ண​யித்​துள்​ளது. இதுகுறித்​து ஜப்​பானிய செய்​தி நிறு​வன​மான அசாஹி ஷிம்​பன்​ கூறி​யுள்​ள​தாவது: இந்​தி​யா-ஜப்​பான்​ வரு​டாந்​திர உச்​சி மா​நாட்​டில்​ கலந்​து கொள்​வதற்​காக பிரதமர்​ நரேந்​திர மோடி அடுத்​த வாரம்​ ஜப்​பானுக்​கு பயணம்​ மேற்​கொள்​ளஉள்​ளார்​. அப்​பேது அந்​நாட்​டு பிரதமர்​ ஷிகெரு இஷி​பாவை பிரதமர்​ மோடி சந்​தித்​துப்​ பேச உள்​ளார்​. இந்​த பயணத்​தின்​போது இரு​நாடு​களுக்​கு இடையி​லான … Read more

ம.பி. கிராமத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பல் நடமாட்டம்: ரகசிய போதைப் பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

போபால்: மத்​தி​யப் பிரதேசத்​தில் போபால் அருகே உள்​ளது ஜெக​திஸ்​புரா என்ற கிராமம். மக்​கள் குறை​வாக வசிக்​கும் இந்த கிராமத்​தில் மிகப் பெரிய வீடு ஒன்று இருந்​தது. இது எப்​போதும் மூடப்​பட்ட நிலை​யிலேயே இருந்​தது. ரகசிய தகவலின் அடிப்படை யில், வரு​வாய் புல​னாய்​வுத்​துறை இயக்​குநரகம் கடந்த 16-ம் தேதி அந்த வீட்டில் சோதனை நடத்​தி​யது. அங்கு 61 கிலோ திரவ மெபட்​ரோன் என்ற போதைப் பொருள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதன் மதிப்பு ரூ.92 கோடி. இது போதைப் பொருட்​கள் விற்​கப்​படும் … Read more

காஷ்மீரில் மேகவெடிப்பால் பெருவெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சசோட்டி என்ற கிராமத்தில் கடந்த 14-ம் தேதி மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் சசோட்டி கிராமத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 4 பேரின் உடல்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட இரு கால்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் காயம் அடைந்தவர்கள் 30 கி.மீ. தொலைவில் அத்தோலியில் உள்ள மாவட்ட துணை … Read more

வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம்

புதுடெல்லி: ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டில் செய்தி வெளி​யானதை தொடர்ந்து வெளி​மாநில தமிழ்ச் சங்க பள்​ளி​களுக்கு பாடநூல்​களை தொடர்ந்து இலவச​மாக அளிக்க தமிழக அரசு அரசாணை வெளி​யிட்டுள்​ளது. நாட்​டின் பிற மாநிலங்​களின் முக்​கிய நகரங்​களில் தமிழ்ச் சங்​கங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்த சங்​கங்​களாலும் தமிழ் கல்வி அமைப்​பு​களாலும் நடத்​தப்​படும் பள்​ளி​களில் தமிழ்​வழிக் கல்வி மற்​றும் தமிழ் பாடப்​பிரிவுக்கு நூல்​கள் தேவைப்​படு​கின்​றன. இவை நீண்ட வருடங்​களாக தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகத்​தின் சார்​பில் இலவச​மாக வழங்​கப்​பட்டு … Read more

தெரு நாய்கள் பாதுகாப்பு எல்லாம் ஓகே… ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய எவ்வளவு செலவாகும் தெரியுமா?

Cost For Stray Dog Sterilization: அனைத்து தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய எவ்வளவு செலவாகும் என்பதை இங்கு பார்க்கலாம்.

மலையாள நடிகையின் பாலியல் புகார்: கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

திரு​வனந்​த​புரம்: மலை​யாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் நேற்று முன்​தினம் கூறுகையில், “சமூக ஊடகம் மூலம் என்​னுடன் நட்​புடன் பழகிய அரசி​யல்​வா​தி ஒருவர் எனக்கு ஆபாச​மான செய்​தி​களை அனுப்​பி, ஓட்​டல் அறைக்கு அழைத்​தார். காங்​கிரஸில் இருப்​பவர்​கள் உட்பட மேலும் பல பெண்​களுக்கு இது​போன்ற அனுபவம் ஏற்​பட்​டுள்​ளது” என்று குற்றம்சாட்டினார். அரசி​யல்​வா​தி​யின் பெயரை வெளி​யிட அவர் மறுத்​து​விட்​டார். என்​றாலும் அது பாலக்​காடு எம்​எல்​ஏ​வும் மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வரு​மான ராகுல் தான் என ஊகங்​கள் வெளி​யாகின. கடந்த ஆண்டு … Read more

ஆர்எஸ்எஸ் கீதத்தை பாடிய டி.கே.சிவகுமார்: பாஜக விமர்சனத்தை தொடர்ந்து விளக்கம்

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்ததை, காங்கிரஸ் கட்சி விமர்சித்த நிலையில், சிவகுமாரின் தற்போதைய செயல் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் 73 விநாடிகள் கொண்ட காணொளியில், துணை முதல்வர் சிவகுமார், ஆர்எஸ்எஸ் கீதமான ‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே’ பாடலை சட்டப்பேரவையில் பாடுகிறார். சிவகுமாரின் ஆர்எஸ்எஸ் கீதத்தை தொடர்ந்து, … Read more

2 மாத பென்ஷன் சேர்த்து கிடைக்கும்… மாநில அரசு உத்தரவு – குஷியில் 62 லட்சம் பேர்!

Pension Scheme: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு மாத ஓய்வூதியத்தையும் விடுவிப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

Bihar SIR: “நீங்கள் ஏன் செயல்படவில்லை?” – அரசியல் கட்சிகள் மீது உச்ச நீதிமன்றம் காட்டம்

புது டெல்லி: சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபட்டவர்களுக்கான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உதவுவதில், பிஹார் அரசியல் கட்சிகள் செயலற்ற தன்மையுடன் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் ஆணையத்தால் பட்டியலிடப்பட்ட 11 ஆவணங்கள் அல்லது ஆதார் அட்டையை கொண்டு சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, பெயர்கள் நீக்கப்பட்டவர்களின் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வழிகாட்டுமாறு பிஹாரின் 12 அரசியல் கட்சிகளுக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான இரு … Read more