8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். … Read more

இரு நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி

ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டிரக்சர் நிறுவனங்களின் இயக்குனர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்தார். இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன மோசடிப் புகாரில் அனில் அம்பானி உள்பட 3 பேரை தடை செய்தது. மேலும் செபியுடன் தொடர்புடைய நபர்கள், செபியில் பதிவு செய்த, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்டோரை தொடர்பு கொள்ளவும் தடை விதித்தது. இதனால் ரிலையன்ஸ் பவர்,  ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டிரக்சர் நிறுவனங்களின் நிதி முதலீடு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,137,986 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,137,986 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 479,315,282 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 413,891,864 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,470 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்களவையில் கதறி அழுத ரூபா கங்குலி

மேற்குவங்க கொலை தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான ரூபா கங்குலி பேசினார். அவர் பேசும்போது ‘‘மேற்குவங்கத்தில் மக்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்படுவது சாதாரணமாகி விட்டது. வாழ முடியாத மாநிலமாக மேற்குவங்கம் மாறிவிட்டது. அச்சம் காரணமாக மக்கள் வெளியேறுகிறார்கள். மக்கள் பேசவே முடியாத நிலை உள்ளது. மக்களைக் கொல்லும் அரசு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. குற்றவாளிகளை மாநில அரசு பாதுகாக்கிறது. மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். நாம் எல்லாரும் மனிதர்கள். … Read more

நடிகையானாலும் குற்றம் சாட்டப்பட்டவர்தானே: கங்கனாவுக்கு கோர்ட் கண்டிப்பு

மும்பை: நீங்கள் நடிகையாக இருக்கலாம். ஆனால், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் என்பதை ஒரு போதும் மறந்து விடக் கூடாது என்று, மான நஷ்ட வழக்கில் ஆஜராக நிரந்தர விலக்கு கேட்ட கங்கனாவை கோர்ட் கண்டித்துள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தரை இழிவு படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஜாவேத் அக்தர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் நடிகை கங்கனாவுக்கு எதிராக … Read more

கேரளாவில் அதிவேக ரயில் பாதை சர்வே பணி நிறுத்தம்

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை 532 கி.மீ. தூர அதிவேக ரயில் பாதைக்கான சர்வே பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல பகுதிகளில் சர்வே கல் பதிக்க வந்த அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.நேற்றும் எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சர்வே பணிகளை மேற்கொள்ள வந்த … Read more

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை மீட்க உயர்மட்ட அளவில் முயற்சி: மக்களவையில் அமைச்சர் உறுதி

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த பல எம்பி.க்கள் இந்த பிரச்னையை எழுப்பினர்.  இதற்கு  வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளிக்கையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளில் 170 … Read more

உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?.. திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பாக ஒன்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்று எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக அவர் எழுப்பிய கேள்விகளின் விவரங்கள் பின் வருமாறு: * உக்ரைன் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்காக சேர்ந்த … Read more

பயணிகள் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு 220 புதிய விமானம்

ஐதராபாத்: விங்க்ஸ் இந்தியா -2022’ விமான கண்காட்சி, ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டை விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நேற்று முடிந்தது. இதில்நேற்று பங்கேற்று பேசிய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. விமான பயணிகள் எண்ணிக்கை அடுத்தாண்டில் ஒரு நாளைக்கு 4.10 லட்சமாக உயரும். இதனால், விமானங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது. நாட்டில் 400 விமானங்கள் மட்டுமே இருந்த நிலையில், விமானங்களின் எண்ணிக்கை … Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காங்கிரஸ், திமுக எம்பி.க்கள் மக்களவையில் வெளிநடப்பு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலைகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. ஐந்து மாநில  சட்டபேரவைகளுக்கு தேர்தல் நடந்ததால் கடந்த நான்கரை மாதங்களாக பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக இவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. மக்களவையில் இப்பிரச்னையை நேற்று எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய், ‘கொரோனாவால் கடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்த மக்கள் இப்போதுதான் அதில் … Read more