புனித் ராஜ்குமார் படத்தை திரையிட பாஜ எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடகத்தில் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் படத்தை திரையிட பாஜ எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் ஜேம்ஸ். இந்த படம் சமீபத்தில் வெளியானது. புனித்தின் கடைசி படம் என்பதால் சென்டிமென்ட்டாக அவரது ரசிகர்கள் இந்த படத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். பேமிலி ஆடியன்சும் இந்த படத்துக்கு வரவேற்பு அளித்துள்ளனர். கர்நாடகத்தில் பல தியேட்டர்களில் இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை நீக்கிவிட்டு, காஷ்மீர் பைல்ஸ் இந்தி படத்தை … Read more

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சீன அமைச்சரின் கருத்துகளை நிராகரித்தது இந்தியா

புதுடெல்லி: பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தின் தொடக்க விழாவில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கலந்து கொண்டார்.  அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாக கூறினார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சீன அமைச்சரின் கருத்துகளை இந்தியா … Read more

தெலங்கானாவில் அதிகாலையில் மர குடோனில் பயங்கர தீ 11 தொழிலாளர் கருகி பலி: பீகாரை சேர்ந்தவர்கள்

திருமலை: ஐதராபாத் மர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்ற பீகாரை சேர்ந்த 11 தொழிலாளர்கள் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் அருகே போயாகூடா பகுதியில் மர குடோன் மற்றும் பழைய பொருட்கள் சேகரிக்கும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு கடந்த 9 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த குடோன்களில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு … Read more

காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்- 26ந் தேதி நடைபெறுகிறது.

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தல் தோல்விக்கு பின்னர்  காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குலாம் நபி ஆசாத்,  ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி மற்றும் விவேக் தங்கா ஆகியோர்  அண்மையில் சோனியாகாந்தியை சந்தித்து பேசினர்.  இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டுமாறு சோனியா காந்தி, கட்சித் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.  இதையடுத்து  காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் … Read more

கனமழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய அவசியமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணையில் கனமழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே அணையை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை’ என கேரள அரசுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் கேரள அரசு தரப்பில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு,  பலம், அணையின் தன்மை  தொடர்பாக முழு … Read more

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு மீண்டும் எய்ம்சில் அனுமதி

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் நேற்று அதிகாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் தொடர்ந்து தண்டனை பெற்று வருகிறார். சமீபத்தில் தொரந்தோ கருவூல முறைகேடு வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் … Read more

பீர்பூம் வன்முறை: மம்தா அரசுக்கு நெருக்கடி- குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் வலியுறுத்தல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.  இதனையடுத்து, இவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் உள்ள போக்டுய் கிராமத்தில் வன்முறை வெடித்தது.  ஒரு கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அம்மாநிலத்தை ஆளும் மம்தா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.   இந்த வன்முறைக்கு … Read more

நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு முன்பாகவே ரூ.30 லட்சம் கோடியை தாண்டியது ஏற்றுமதி: மோடி பெருமிதம்

புதுடெல்லி: ரூ.30 லட்சம் கோடி  ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக ரூ.30  லட்சம் கோடிக்கான (400 பில்லியன் டாலர்) சரக்குகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இந்த இலக்கை எட்ட காரணமான விவசாயிகள், நெசவாளர்கள், சிறுகுறு உற்பத்தியாளர்கள், ஏற்றமதியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய தற்சார்பு திட்ட பயணத்தில் இது முக்கிய மைல்கல்,’ என்று … Read more

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பகதூர் ஷேக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில் உள்ள ராம்பூர்ஹாட் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்தது. இதில் எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதால், … Read more

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு மக்களவையில் அமளிக்கு தலைமை வகித்த சோனியா: எதிர்க்கட்சி எம்பி.க்களையும் வழி நடத்தி ஆவேசம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 2வது நாளாக நேற்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் மக்களவையில் வழக்கத்திற்கு மாறாக சோனியா காந்தியே நேற்று அனைத்து எதிர்க்கட்சி எம்பி,க்களையும் வழி நடத்தினார். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, காஸ் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக நேற்றும் அதிகரித்தது. சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. பெட்ரோல், … Read more