செகந்திராபாத் மரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: பிஹாரை சேர்ந்த 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் தில் மரக்கிடங்கு ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பிஹாரைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹைதராபாத் அருகில் உள்ள செகந்திராபாத் போயகூடா ஐடிஎச் காலனி பகுதியில் பல ஆண்டுகளாக மரக் கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதின் ஒரு பாதி மரக் கிடங்காகவும் மற்றொரு பாதி பழைய இரும்பு பொருட்களை வாங்கும் மையமாகவும் செயல்பட்டு வந்தது. இங்கு பிஹாரைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். … Read more

உத்தரப்பிரதேச முதலமைச்சராக இரண்டாவது முறை பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச முதலமைச்சராக இரண்டாவது முறை நாளை பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துக் கொள்ள உள்ளனர். டேராடூனில் புஷ்கர் சிங் தாமியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் டெல்லியில் முகாமிட்டுள்ள யோகி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அவர்களின் இல்லத்தில் நேரில் சென்று தமது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தமது அமைச்சரவை குறித்தும் மூத்த பாஜக … Read more

ஜம்மு காஷ்மீருக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு பட்ஜெட்டில் ரூ.1.42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 2 மசோதாக்களை மாநிலங்களவை திருப்பி அனுப்பியது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான ரூ.1.42 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு மக்களவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த பட்ஜெட் தாக்கலின்போது, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டம் நீக்கப்படுவதற்கு முன் நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக ஆளும் பாஜ.வுக்கும் எதிர்க்ட்சியான காங்கிரஸ் … Read more

நாடாளுமன்ற துளிகள்…

* கொங்கன் ரயில்வே இணைப்பு இல்லைமக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய ரயில்வே இணையமைச்சர் ராவ்சாகேப் பாட்டீல் தன்வே அளித்த பதிலில், `இந்திய ரயில்வேயுடன் கொங்கன் ரயில்வேயை இணைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. ரயில்வே திட்டம் மண்டலம் வாரியாக செயல்படுத்தப்படுகிறதே தவிர, மாநிலங்கள் வாரியாக அல்ல. 16 புதிய வழித்தடங்கள், 2 அகல ரயில் பாதை, 17 இருவழித்தடங்கள் என மொத்தம் ரூ.91,137 கோடி மதிப்பிலான 35 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,’ என தெரிவித்தார்.* 320 ஆப்களுக்கு தடைமக்களவையில் கேள்வி … Read more

புனித் ராஜ்குமார் படத்தை திரையிட பாஜ எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடகத்தில் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் படத்தை திரையிட பாஜ எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் ஜேம்ஸ். இந்த படம் சமீபத்தில் வெளியானது. புனித்தின் கடைசி படம் என்பதால் சென்டிமென்ட்டாக அவரது ரசிகர்கள் இந்த படத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். பேமிலி ஆடியன்சும் இந்த படத்துக்கு வரவேற்பு அளித்துள்ளனர். கர்நாடகத்தில் பல தியேட்டர்களில் இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை நீக்கிவிட்டு, காஷ்மீர் பைல்ஸ் இந்தி படத்தை … Read more

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சீன அமைச்சரின் கருத்துகளை நிராகரித்தது இந்தியா

புதுடெல்லி: பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தின் தொடக்க விழாவில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கலந்து கொண்டார்.  அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாக கூறினார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சீன அமைச்சரின் கருத்துகளை இந்தியா … Read more

தெலங்கானாவில் அதிகாலையில் மர குடோனில் பயங்கர தீ 11 தொழிலாளர் கருகி பலி: பீகாரை சேர்ந்தவர்கள்

திருமலை: ஐதராபாத் மர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்ற பீகாரை சேர்ந்த 11 தொழிலாளர்கள் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் அருகே போயாகூடா பகுதியில் மர குடோன் மற்றும் பழைய பொருட்கள் சேகரிக்கும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு கடந்த 9 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த குடோன்களில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு … Read more

காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்- 26ந் தேதி நடைபெறுகிறது.

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தல் தோல்விக்கு பின்னர்  காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குலாம் நபி ஆசாத்,  ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி மற்றும் விவேக் தங்கா ஆகியோர்  அண்மையில் சோனியாகாந்தியை சந்தித்து பேசினர்.  இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டுமாறு சோனியா காந்தி, கட்சித் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.  இதையடுத்து  காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் … Read more

கனமழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய அவசியமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணையில் கனமழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே அணையை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை’ என கேரள அரசுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் கேரள அரசு தரப்பில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு,  பலம், அணையின் தன்மை  தொடர்பாக முழு … Read more

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு மீண்டும் எய்ம்சில் அனுமதி

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் நேற்று அதிகாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் தொடர்ந்து தண்டனை பெற்று வருகிறார். சமீபத்தில் தொரந்தோ கருவூல முறைகேடு வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் … Read more