ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேக வெடிப்பு, நிலச்சரிவு: 7 பேர் உயிரிழப்பு

கதுவா: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர், ஐந்து பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜோத் காட்டியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் 5 பேர் காயமடைந்தனர். கதுவா மேகவெடிப்பால் ஏற்பட்ட … Read more

65 வயது தாயை பலாத்காரம் செய்த மகன்… கொடூரத்தை செய்ய காரணம் அவன் சொன்ன காரணம்?

Crime News In Tamil: பெற்ற தாயை மகனே இரு முறை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பேருந்து நடத்துனருக்கு ஜாக்பாட்: கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு

கல்பெட்டா: கேரள மாநிலம் கல்​பெட்டா பகு​தி​யில் தனி​யார் பேருந்து ஓட்​டுன​ராக வேலை செய்​பவர் ஜெயேஷ் குமார். இவர் கல்​பெட்டா புது பேருந்து நிலை​யத்​துக்கு அரு​கில் உள்ள அம்மா லாட்​டரி கடை​யில் உள்ள ஊழியர்​களிடம் 5 தனலட்​சுமி லாட்​டரி டிக்​கெட்​டு​களை எடுத்து வைக்​கும்​படி கூறி​யுள்​ளார். அதற்​கான பணத்தை பிறகு கொடுப்​ப​தாக கூறி​யுள்​ளார். அதன்​படி ஜெயேஷ் குமாருக்கு 5 லாட்​டரி டிக்​கெட்​டு​களை ஊழியர் ஸ்வாதி சத்​யன் தனி​யாக எடுத்து வைத்து விட்​டார். இந்​நிலை​யில், கடந்த புதன்​கிழமை குலுக்​கல் நடை​பெற்​றது. அதில் … Read more

நீச்சல் வீராங்கனையின் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் திருட்டு: கொல்கத்தா போலீஸார் விசாரணை

கொல்கத்தா: நீச்சல் வீராங்கனையின் வீட்டில் இருந்து அவரது பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டன. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரி. இவர் 5 கண்டங்களில் உள்ள 7 கடல்களையும் நீந்தி கடந்தவர் என்ற பெருமையையும், பல்வேறு தேசிய சாதனைகளையும் படைத்தவர். இவரது சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலம், நந்தப்பூர் … Read more

பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்த வான் பாதுகாப்பு சுதர்சன சக்கரத்தின் சிறப்புகள் என்ன?

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2010-ம் ஆண்​டில் இஸ்​ரேல் ராணுவம், அயர்ன் டோம் என்ற வான் பாது​காப்பு கவசத்தை நிறு​வியது. எதிரி​களின் போர் விமானங்​கள், ஏவு​கணை​கள், ட்ரோன்​களை அயர்ன் டோமில் இருந்து புறப்​படும் ஏவு​கணை​கள் நடு​வானில் … Read more

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனைகளில் தேர்ச்சி

புதுடெல்லி: இந்தியாவின் முதல் ஹைட்​ரஜன் ரயில் சேவை விரை​வில் அறி​முக​மாவதற்கு முன்​பாகவே முக்​கிய சோதனை​களில் அது தேர்ச்சி பெற்​றுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நாட்​டில் உள்ள பல்​வேறு பாரம்​பரிய மலைப்​பாதைகளில் ‘‘ஹைட்​ரஜன் பார் ஹெரிட்​டேஜ்’’ திட்​டத்​தின் கீழ் 35 ஹைட்​ரஜன் ரயில்​களை இயக்க ரயில்வே அமைச்​சகம் திட்​ட​மிட்​டுள்​ளது. சென்​னை​யில் உள்ள ஒருங்​கிணைந்த ரயில் பெட்டி தொழிற்​சாலை​யில் (ஐசிஎப்) உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த ரயில் சுத்​த​மான எரிசக்தி ஆதா​ர​மான ஹைட்​ரஜன் எரிபொருளில் இயக்​கப்பட உள்​ளது. பூஜ்ய கார்​பன் உமிழ்வு இலக்​கு​களை அடை​யும் வகை​யில் … Read more

மும்பையில் கனமழைக்கான ரெட் அலர்ட்: விக்ரோலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழப்பு

மும்பை: மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், விக்ரோலியில் உள்ள பார்க்சைடில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த சூழலில், மும்பைக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மும்பை விக்ரோலியில் பார்க்சைட் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மற்றும் கற்கள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஜன்கல்யாண் சொசைட்டியில் உள்ள ஒரு வீட்டின் மீது சரிந்து விழுந்தன. இதில் அந்த வீட்டில் வசிக்கும் மிஸ்ரா குடும்பத்தைச் … Read more

ட்ரம்ப் – புதின் சந்திப்புக்கு இந்தியா வரவேற்பு: பேச்சுவார்த்தையே தீர்வு தரும் என கருத்து

புதுடெல்லி: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையே நடந்த பேச்சுவார்த்தையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள இந்தியா, பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்தள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான சந்திப்பை இந்தியா வரவேற்கிறது. அமைதியை நோக்கிய அவர்களின் தலைமை … Read more

ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதையடுத்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பாஜக ஆலோசனை

புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, ‘குடியரசு துணைத் தலைவர் தேர்வு ஒருமனதாக நடைபெற்றால் வழக்கம் போல நியமனம் நடைபெறும். அப்படி இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. … Read more