எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது: பாக். பிரதமரின் மிரட்டலுக்கு எம்.பி. அசாதுதீன் ஒவைஸி பதில்

புதுடெல்லி: காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “பாகிஸ்தானுக்கு வரவேண்டிய ஒரு சொட்டு நீரைக்கூட இந்தியா நிறுத்தி வைக்க முடியாது. தண்ணீரை நிறுத்த முயற்சித்தால், மறக்க முடியாத வகையில் பாகிஸ்தான் பாடம் கற்பிக்கும். சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் வரும் தனது உரிமைகளில் பாகிஸ்தான் சமரசம் செய்து கொள்ளாது” என்றார். பாகிஸ்​தான் … Read more

நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸின் தாஜா செய்யும் கொள்கையே காரணம்: யோகி ஆதித்யாநாத்

லக்னோ: நாட்டின் பிரிவினைக்கும், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்கள் சந்தித்த துயரங்களுக்கும் காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த தாஜா செய்யும் கொள்கையே காரணம் என்று யோகி ஆதித்யாநாத் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், உத்தரப் பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யாநாத் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பிரிவினை துயர் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியின் தாஜா செய்யும் அரசியல் கொள்கைதான் காரணம். சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நமது நாட்டின் புரட்சியாளர்கள் மற்றும் … Read more

ரேணுகாசுவாமி கொலை வழக்கு: ஜாமீன் ரத்தானதால் கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் கைது

பெங்களூரு: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகாசுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் … Read more

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு, 200 பேரை காணவில்லை

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் நகரில் உள்ள சோசிட்டி கிராமத்தில் இந்த மிகப்பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள மாதா சண்டி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் இந்த மேகவெடிப்பு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் … Read more

பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

புதுடெல்லி: “பயங்கரவாதத்துக்கு எதிரான மனித சமூகத்தின் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணமாக திகழும். பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் ஒரு சோதனைக் களமாகவும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அமைந்தது” என்று சுதந்திர தினத்தையொட்டிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு குறிப்பிட்டார். 79-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: “சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது … Read more

தமிழகத்தின் 32 பேர் உட்பட 1,090 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்!

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி, வீரதீர செயல்கள் மற்றும் சேவைகளுக்கான குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 32 பேர் உட்பட 1,090 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, காவல் துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்த சேவைகளில் சிறப்பாக பணியாற்றிய 1,090 பேருக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீரதீர செயல்களுக்கான விருதுகள் 233 பேருக்கும், … Read more

திருடிய நகையை திரும்பி திருடன்! மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிட்ட விஷயம்..வைரல் செய்தி

Kerala Thief Gives Back Jewel : கேரளாவில் ஒரு ருசிகர சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.   

Bihar SIR: 65 லட்சம் வாக்காளர்கள் விவரத்தை நீக்கியதன் காரணத்துடன் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், நீக்கத்துக்கான காரணத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுகிறது. இதை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் … Read more

பிஹார், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தொடரும் கனமழை: டெல்லிக்கு ஆர்ஞ்ச் அலர்ட்

புதுடெல்லி: பிஹார், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்லிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் என பல மாநிலங்களில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. டெல்லியில் கனமழை: டெல்லியில் பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. டெல்லி-என்சிஆர், லஜ்பத் நகர், ஆர்கே புரம், … Read more

கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து – உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட மேலும் … Read more