சமாஜ்வாதி எம்.பி இக்ரா ஹசன் உ.பி கோயிலுக்கு ரூ.10 லட்சம் அறிவிப்பு

புதுடெல்லி: மேற்கு உ.பி.​யின் ஷாம்லி மாவட்​டம், கைரானா தொகுதி சமாஜ்​வாதி கட்​சி​யின் எம்​.பி.​இக்ரா ஹசன். இவரது தொகு​தி​யில் பாபா சமந்​தாஸ் என்ற பிரபல கோயில் உள்​ளது. கியான் பிக் ஷு மகா​ராஜ் என்​பவரது நினை​வாக இக்​கோ​யில் கட்​டப்​பட்​டுள்​ளது. இங்கு கியான் பிக்‌ஷு மஹராஜின் 173-வது பிறந்த நாள் கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழா​வில் கலந்​து​கொண்ட முஸ்​லிம் எம்​.பி.​யான இக்ரா ஹசன், தனது தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து கோயில் வளர்ச்​சிப் பணிக்கு ரூ.10 லட்​சம் ஒதுக்​கு​வ​தாக அறி​வித்​தார். விழா​வில் அவர் பேசுகை​யில், … Read more

இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது: அஜித் தோவல் கருத்து 

புதுடெல்லி: இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது என்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் தெரி​வித்​துள்​ளார். தேசிய ஒற்​றுமை தினத்தை ஒட்டி டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற விழா​வில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் கூறிய​தாவது: ஓர் அரசு வலு​வாக இருந்​தால் மட்​டுமே நாடு வளர்ச்சி அடை​யும். அண்மை காலத்​தில் இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் ஆட்​சிகள் மாறின. அந்த நாடு​களில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. பலவீனம், சுயநலம், … Read more

48 இந்திய தொழிலாளர்கள் துனிசியாவில் தவிப்பு: மத்திய அரசு மீட்க கோரிக்கை

துனிஸ்: துனிசி​யா​வுக்கு வேலைக்கு சென்ற இந்​திய தொழிலா​ளர்​கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்​களாக சம்​பளம் வழங்​கப்​பட​வில்​லை. அவர்​கள் உணவுக்கு வழி​யின்றி தவிப்​ப​தால், மத்​திய அரசு மீட்க வேண்​டும் என கோரிக்கை எழுந்துள்​ளது. டெல்லி குரு​கி​ராமைச் சேர்ந்த பிரேம் பவர் கன்​ஸ்ட்​ரக்​ஷன் நிறு​வனம் ஜார்​க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலா​ளர்​கள் 48 பேரை ஆப்​பிரிக்க நாடான துனிசி​யா​வுக்கு வேலைக்கு அழைத்​துச் சென்​றுள்​ளது. ஆனால், அவர்​களுக்கு ஒப்​பந்த ஆவணங்​கள் எது​வும் வழங்​கப்​பட​வில்​லை. 8 மணி நேரம் வேலை எனக் கூறி … Read more

ஆளுங்கட்சி வேட்பாளர் அதிரடி கைது… அதுவும் கொலை வழக்கில்… பீகாரில் பரபரப்பு

JDU Candidate Arrested: கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பீகார் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் அனந்த் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரில் பொற்காலம் தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் 

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் பொற்​காலம் தொடங்​கி​யிருக்​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். கடந்த 2000-ம் ஆண்டு நவம்​பர் 1-ம் தேதி சத்​தீஸ்​கர் மாநிலம் உதய​மானது. கடந்த 2005-ம் ஆண்​டில் அந்த மாநில தலைநகர் ராய்ப்​பூர் அருகே நயா ராய்ப்​பூர் நகரம் உரு​வாக்​கப்​பட்​டது. அங்கு 52 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.324 கோடி செல​வில் பிரம்​மாண்ட சட்​டப்​பேரவை கட்​டப்​பட்டு உள்​ளது. புதிய சட்​டப்​பேர​வையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த 2000-ம் ஆண்​டில் முன்​னாள் … Read more

இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக மாறியது கேரளா: பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாநில சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 1) கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “கேரள மாநிலம் உருவான தினமான இந்த நாள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது, ஏனெனில் கேரளாவை தீவிர வறுமை இல்லாத … Read more

அனைத்துவித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ-பசிபிக் விடுபட வேண்டும்: ராஜ்நாத் சிங்

கோலாலம்பூர்: அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ – பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என்று மலேசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆசியான் – இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் கடந்த 2010-ல் ஹனேயில் தொடங்கப்பட்டபோது அது தனது தொலைநோக்குப் பார்வையை … Read more

உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்குச் செல்லும் நாடு இந்தியா: பிரதமர் மோடி

ராய்ப்பூர்: உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்குச் செல்லும் நாடு இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் நவ ராய்ப்பூரில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் தியான மையமான சாந்தி ஷிகார்-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று உலகில் எங்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டாலும், எங்கு ஒரு பேரழிவு ஏற்பட்டாலும் உதவி வழங்க ஒரு நம்பகமான கூட்டாளியாக இந்தியா உள்ளது. இந்தியா எப்போதும் … Read more

ஸ்ரீகாகுளம் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள், 12 வயது சிறுவன் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா கிராமத்தில்  வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இதனை ஹரிமுகுந்த் பண்டா என்பவர் கட்டினார். இவருக்கு … Read more

நாட்டின் வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அளப்பரியது: கார்கேவுக்கு அமித்ஷா பதிலடி!

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமித்ஷா, “நாட்டை சிறந்த இடமாக மாற்ற என்னைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களை ஊக்குவித்த அமைப்பு ஆர்எஸ்எஸ் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளை விதைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் உருவாக்கிய இரண்டு பேர் (அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி) … Read more