உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா தாக்குதல் நடத்தியிருக்காது: அமெரிக்காவில் சசி தரூர் விளக்கம்

புதுடெல்லி: உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்காது என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தி அழித்தது. இந்நிலையில் ‘ஆபரேஷன் … Read more

வக்பு வாரிய சொத்து பதிவு செய்ய புதிய இணையதளம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ வலைதளத்தை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து வக்பு சொத்துகளை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுவதற்காக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இணையதளம் தொடங்குவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார். இதனிடையே புதிய … Read more

இந்தியாவில் 5000-ஐ தாண்டிய கரோனா பாதிப்பு: கேரளா, குஜராத், டெல்லியில் தாக்கம் அதிகம்

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இந்தியாவில் 5,364 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கேரளாவில் 2 பேர், பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் என மொத்தம் நான்கு பேர் கோவிட் 19 பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கேரளா தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளான மாநிலமாக உள்ளது, கேரளாவில் நேற்று ஒரே … Read more

பெங்களூரு கூட்ட நெரிசல்: கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரும் தாங்களாக முன்வந்து பதவி விலகி உள்ளனர். குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 3-ம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, … Read more

ராமர் கோயிலில் 45 கிலோ தூய தங்கமும், சூரத் வைர வியாபாரி நன்கொடையின் பங்கும்!

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் சூரத்தின் வைர வியாபாரியின் நன்கொடை அதிக விலைமதிப்பு உள்ளவையாகக் கருதப்படுகிறது. அயோத்தி ராமர் கோயிலின் முக்கியக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. எட்டு துணை கோயில்களின் கர்ப்பக்கிரகங்களுக்கான சிலைகளின் பிராண பிரதிஷ்டைப் பணியும் முடிவடைந்துள்ளன. சமீபத்திய நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். பிரதான ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எனினும், அருங்காட்சியகம், அரங்கம் மற்றும் விருந்தினர் மாளிகை … Read more

பக்ரீத் பண்டிகை முஸ்லிம்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்: உமர் அப்துல்லா

ஹஸ்ரத்பால்: உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு இந்த பக்ரீத் பண்டிகை அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறினார் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் ஹஸ்ரத்பால் தர்காவில் தொழுகை நடத்தினர். இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “இந்த ஈத் பண்டிகை இந்திய மற்றும் உலக முஸ்லிம்களுக்கு சிறந்த நாட்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன். இது … Read more

உயிரிழந்த ஆர்சிபி ரசிகர்களின் குடும்பத்தினரை கோலி சந்திக்காதது ஏன்? – வைரலாகும் கேள்வி

பெங்களூரு: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் காரணமாக விராட் கோலி கைது செய்யப்படாதது குறித்து சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், அவர் உயிரிழந்த ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்காதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்த கூட்ட நெரிசலுக்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி … Read more

“பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை நட்பு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்” – ஜெய்சங்கர்

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்றும், நட்பு நாடுகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தலைமையிலான குழுவினர், புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஜெய்சங்கர், “காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்ததற்கும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு இங்கிலாந்து … Read more

ஆந்திராவில் ஊழியர்கள் 10 மணி நேரம் பணி செய்யும் வகையில் சட்டத் திருத்தம்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தொழிற்சலைகளில் தொழிலாளர்கள் தினசரி 10 மணி நேரம் வேலை பார்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காகவும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் அதிகபட்ச வேலை நேரத்தை ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ப … Read more

பிஹார்: சாலை விபத்தில் உயிர் தப்பிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹாரின் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிஹாரின் மாதேபுராவில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ், அங்கிருந்து சாலை மார்க்கமாக கட்சி செய்தித் தொடர்பாளர் சக்தி யாதவ் ஆகியோருடன் தேசிய நெடுஞ்சாலை 22 இல் திரும்பிக் கொண்டிருந்தார். வைஷாலி மாவட்டத்தின் ஹாஜிபூரில் இன்று (ஜூன் 7) அதிகாலை 1:30 மணிக்கு, தேநீர் அருந்துவதற்காக அவரது … Read more