ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. … Read more

நீச்சல் பழக சென்ற 3 மாணவர்கள் உயிரிழப்பு

குப்பம்: சித்​தூர் மாவட்​டம், குப்​பம் அருகே உள்ள வி.கோட்டா மாட்​லபல்லி கிராமத்தை சேர்ந்த குஷால், நிகில், ஜெகன் ஆகியோர் 8-ம் வகுப்பு படித்து வந்​தனர். இவர்​கள் தின​மும் மாட்​ல பல்லி ஏரி​யில் நீச்​சல் பழகி வந்​துள்​ளனர். இந்​நிலை​யில், இவர்​கள் வழக்​கம் போல் நீச்​சல் பழக நேற்று அதே ஏரிக்கு சென்​றனர். அப்​போது இதில் ஒரு மாணவர் நீரில் மூழ்​கு​வதை பார்த்து மற்ற இரு​வரும் அந்த மாணவரை காப்​பாற்ற சென்​றனர். ஆனால், 3 பேரும் பரி​தாப​மாக நீரில் மூழ்​கினர். … Read more

அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் உள்ள புதிய 8 சன்னதிகளில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை

அயோத்தி: அயோத்தி ராமர் கோயி​லில் குழந்தை ராமர் சிலை​யின் பிராண பிர​திஷ்டை நிகழ்ச்சி கடந்​தாண்டு ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்​னிலை​யில் நடை​பெற்​றது. ராமர் கோயில் வளாகத்​தில் மற்ற சன்னதி​களின் கட்​டு​மானம் தொடர்ந்து நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில் அந்​தப் பணி​கள் நிறைவடைந்​த​தால், புதி​தாக கட்​டப்​பட்ட சன்னதிகளில் சுவாமி சிலைகள் பிர​திஷ்டை செய்​யும் நிகழ்ச்சி நேற்று காலை அபிஜித் முகூர்த்​தத்​தில் நடை​பெற்​றது. இதற்​கான யாக பூஜைகள் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்​கின. அதன்​பின் அனைத்து சன்னதி … Read more

நாடு முழுவதும் சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகள் 4,866 ஆக உயர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 … Read more

திருப்பதியில் இன்று முதல் திவ்ய தரிசன டோக்கன் விநியோகம்

திருப்பதி: திருப்​பதி ஏழு​மலை​யானை அலிபிரி அல்​லது ஸ்ரீவாரி மெட்டு மார்க்​க​மாக மலை​யேறி செல்​லும் பக்​தர்​களுக்கு பாதி வழி​யில் திவ்ய தரிசன டோக்​கன்​ வழங்​கப்​பட்டு வந்​தது. மேலும் ஒரு லட்டு பிர​சாத​மும் இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்​தது. இதனை ஜெகன் ஆட்​சி​யில் ரத்து செய்​தனர். தற்​போது சந்​திர​பாபு நாயுடு மீண்​டும் முதல்​வ​ரானதும், திவ்ய தரிசன டோக்​கன்​கள் வழங்​கப்பட வேண்​டும் என பக்​தர்​கள் கோரிக்கை விடுத்​தனர். அதன்​படி, இன்று ஜூன் 6-ம் தேதி மாலை 5 மணி முதல் அலிபிரி அருகே … Read more

“ஒவ்வொரு சாதாரண இந்தியரின் பொருளாதார அழுத்தம்…” – ராகுல் காந்தி ‘டேட்டா’ விமர்சனம்

புதுடெல்லி: “பிரமாண்டமான நிகழ்வுகளை விட, அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் வேலை செய்யும் பொருளாதாரம் வேண்டும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் மொபைல் போன்களின் விற்பனையில் சரிவைக் காட்டும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புள்ளிவிவரங்கள் உண்மையைச் சொல்கின்றன. கடந்த … Read more

நாட்டு நலனுக்காக பணிபுரிவது கட்சி விரோத செயலா? – காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி

வாஷிங்டன்: நாட்டு நலனுக்காக பணிபுரிவதை கட்சி விரோத செயல் என கூறுபவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை துல்லிய தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக நாடாளுமன்ற எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதில் காங்கிரஸ் … Read more

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதை ஒட்டி ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பசுமை காக்க “தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” பிரச்சாரத்தையும் பிரதமர் முன்னெடுத்தார். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) கீழ் 1973 முதல் ஆண்டுதோறும் ஜூன் 5 -ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கு இந்தநாள் மிகப்பெரிய தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக … Read more

சத்தீஸ்கரில் ரூ.40 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

ராய்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ரூ.40 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிஜப்பூர் மாவட்டத்தின் தேசிய பூங்கா பகுதியில் மூத்த நக்சல் போராளிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல் படை (டிஆர்ஜி) மற்றும் சிறப்புப் பணிப் படை (எஸ்டிஎஃப்) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று வனப்பகுதியில் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. பின்னர் கூட்டுப் படைகளுக்கும், நக்சல்களுக்கும் … Read more

பெங்களூரு காவல் துறை ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்: சித்தராமையா நடவடிக்கை

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு நகரில் புதன்கிழமை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் உட்பட உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் புதன்கிழமை அன்று மாலை பெங்களூரு சின்னசாமி … Read more