மோந்தா புயல் எதிரொலி: 11 ரயில்களின் நேரம் மாற்றம்.. முழு விவரம்!

Train Rescheduled: மோந்தா புயல் எதிரொலியால், 11 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சுயேச்சையாக போட்டியிடும் பாஜக எம்எல்ஏ நீக்கம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கஹல்கான் தொகுதி பாஜக எம்எல்ஏ பவன் யாதவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத்தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த பவன் யாதவ் இத்தொகுதியில் என்டிஏ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதையடுத்து கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக பவன் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக … Read more

மோந்தா புயல்: இப்போது எங்கு உள்ளது.. எப்போது கரையை கடக்கும்?

Montha Cyclone: மோந்தா புயல் காரணமாக தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அந்த புயல் எப்போது கரையை கடக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம். 

கர்நாடகாவில் நவம்பரில் அமைச்சரவை மாற்றம்: முதல்வர் சித்தராமையா தகவல்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் வரும் நவம்​பரில் அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​யப்​படும் என அம்​மாநில முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார். கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்​தலில் காங்​கிரஸ் வென்​றதை தொடர்ந்து சித்​த​ராமையா முதல்​வ​ராக பதவி​யேற்​றார். அப்​போது முதல்​வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்​கிரஸ் மேலிடம் துணை முதல்​வர் பதவி வழங்​கியது. முதல்​வ​ராக சித்​த​ராமையா பொறுப்​பேற்று வரும் நவம்​பருடன் இரண்​டரை ஆண்டு நிறைவடைகிறது. எனவே டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவி வழங்க வேண்​டும் என‌ அவரது ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். ஆனால் … Read more

பிளாஸ்டிக் கழிவுக்கு உணவு பெறும் திட்டம்: சத்தீஸ்கரின் முயற்சிக்கு மன்கி பாத் உரையில் பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: பிளாஸ்​டிக் கழிவை கொடுத்து உணவு பெறும் திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சுற்​றுச்​சூழலை பாது​காக்​கும் வகை​யில் சத்​தீஸ்​கர் அரசு எடுத்​துள்ள முன்​முயற்​சிக்கு மன்கி பாத் உரை​யில் பிரதமர் நரேந்​திர மோடி பாராட்டு தெரி​வித்​துள்​ளார். மாதம் தோறும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை பிரதமர் மோடி வானொலி வழி​யாக நாட்டு மக்​களிடம் உரை​யாற்றி வரு​கிறார். அந்த வகை​யில் நேற்​றைய 127-வது மன் கி பாத் நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்திர மோடி பேசி​ய​தாவது: சூரிய கடவுளுக்கு மரி​யாதை செலுத்​தும் சாத் பூஜை இந்​தி​யா​வின் சமூக … Read more

சல்மான் கான் தீவிரவாதியாம்: சொல்கிறது பாகிஸ்தான்

புதுடெல்லி: இந்​தி நடிகர் சல்​மான் கான் தீவிர​வாதியாம் என பாகிஸ்​தான் அரசு கூறியுள்​ளது. சவுதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் சமீபத்​தில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் இந்தி நடிகர்​கள் சல்​மான் கான், ஷாருக் கான், அமீர் கான் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதில் சல்​மான் கான் பேசும்​போது, “இப்​போது, இந்தி திரைப்​படத்தை இங்கு வெளி​யிட்​டால் அது சூப்​பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்​லது மலை​யாள திரைப்​படம் வெளி​யிட்​டாலும் பல நூறு கோடி வசூலாகும். ஏனென்​றால், இங்கு பலுசிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், … Read more

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி – முழு விவரம்

புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் … Read more

தெருநாய்கள் வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் நவ.3-ல் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் தெரு​நாய்​களால் ஏற்​படும் பிரச்​சினை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரிக்​கும் வழக்​கில் உரிய காலக்​கெடு​வுக்​குள் பதில்​மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட பிற மாநிலங்​களின் தலை​மைச் செயலர்​கள் வரும் நவ.3-ம் தேதி ஆஜராகி விளக்​கமளிக்க வேண்​டுமென சம்​மன் பிறப்​பித்து உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். தலைநக​ரான டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு​நாய்​கள் துரத்​தி, துரத்தி கடித்து ரேபிஸ் தொற்று பரவியது தொடர்​பாக வெளி​யான செய்​தி​யின் அடிப்​படை​யில் நாடு முழு​வதும் உள்ள தெரு​நாய்​கள் பிரச்​சினை … Read more

திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு: உத்தராகண்ட் கிராமத்தில் விதி மீறினால் ரூ.50,000 அபராதம்

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம், ஜான்​சர் – பவார் பகு​தி​யில் உள்​ளது கந்​தார் கிராமம். பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் இந்த கிராமத்​தில் சமீபத்​தில், பழங்​குடி​யின தலை​வர்​களின் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது திரு​மணம் மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்க நகைகள் அணிய கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன. அதன்​படி, திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்​கத்​தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம். மற்​றபடி ஆடம்​பர​மான தங்க நகைகளை அணிய கூடாது. மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் … Read more

தன் மீதான தாக்குதல் வழக்கை புறக்கணிக்க கவாய் விருப்பம்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நீதிமன்ற அறையில் நிகழ்ந்த தாக்குதலை அவர் புறக்கணிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசா​ரணைக்​காக கடந்த 6-ம் தேதி கூடியபோது, வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாயை நோக்கி வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் போலீ​ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். … Read more