தலித், ஒபிசி, முஸ்லிம் சமூகத்தின் 3 துணை முதல்வர்கள்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்!

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட உள்ளார். வெற்றிக்கு பின் தலித், ஒபிசி மற்றும் முஸ்லிம் சமூகங்களிலிருந்து 3 துணை முதல்வர்களை நியமிக்கும் அறிவிப்பும் வெளியாக உள்ளது. பாஜக தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்க்கட்சியாக இருப்பது காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி. தேசிய அளவிலான இக்கூட்டணியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), திமுக உள்ளிட்ட சுமார் 25 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், பிஹாரில் இண்டியா, … Read more

நிலச்சரிவு நடந்த பகுதிக்கு ஜிப்லைனில் சென்ற டாக்டர்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 28-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இதனால் இர்பான் மோல்லாவால் அங்கு செல்ல … Read more

கேரளாவில் ஆலியா பட் பசுவை பார்வையிட்ட பிரியங்கா காந்தி

கோழிக்கோடு: கேரளாவின் வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி நேற்று இம்மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியில் ஒரு பால் பண்ணையை பார்வையிட்டார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிகவும் அழகான குடும்பம் நடத்தும் பால் பண்ணைக்கு சென்று பால் பண்ணையாளர்களை சந்தித்தேன். (ஆலியா பட் என்ற பசுவையும் சந்தித்தேன்!! திருமதி ஆலியா பட் மன்னிக்க வேண்டும். என்றாலும் அது ஒரு அழகான பசு)” என்று குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா பட்-ஐ டேக் செய்து இதனை … Read more

டெல்லி – கொல்கத்தா நெடுஞ்சாலை நெரிசல்: பிஹாரில் 4 நாட்களாக சிக்கித் தவிக்கும் வாகனங்கள்

பாட்னா: பிஹார் மாநிலம் ரோட்​டாஸ் மாவட்​டத்​தில் கடந்த சில தினங்​களுக்கு முன்பு கனமழை பெய்து ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் தேசிய நெடுஞ்​சாலை​யின் (19) பல இடங்​களில் வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது. இதனால் டெல்​லி, கொல்​கத்தா நெடுஞ்​சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டுள்​ளது. ரோட்​டாஸ் மாவட்​டம் முதல் அவுரங்​கா​பாத் வரையி​லான 65 கிலோமீட்​டர் தூரத்​துக்கு வாக​னங்​கள் ஊர்ந்​த​படி செல்​கின்​றன. சில கிலோமீட்​டர் தூரத்​தைக் கடக்​கவே பல மணி நேரம் ஆகிறது. இதனால் பல வாக​னங்​கள் கடந்த 4 நாட்​களாக … Read more

அயோத்தியில் தென்னிந்திய இசை மேதைகளின் சிலை திறப்பு!

அயோத்தி: வட தென்​னிந்​திய கலாச்​சார ஒற்​றுமைக்கு புதிய அடை​யாள​மாக அயோத்​தி​யில் தென்​னிந்​தி​யா​வைச் சேர்ந்த மூன்று துற​வி – இசை மேதைகளின் சிலைகள் திறந்​து​வைக்​கப்​பட்​டன. தமிழகத்​தைச் சேர்ந்த தியாக​ராஜ சுவாமிகள், அருணாசல கவி மற்​றும் கர்​நாட​காவைச் சேர்ந்த புரந்தரதாசர் ஆகியோர் இசைத் துறைக்கு ஆற்​றிய பங்​களிப்பை கவுரவிக்​க​வும், வட மற்​றும் தென்​னிந்​திய கலாச்​சார சங்​கமத்​தின் அடை​யாளத்தை வெளிப்​படுத்​தும் வித​மாக​வும் அயோத்​தி​யில் அவர்​களுக்கு சிலையை நிறுவ உத்தர பிரதேச அரசு முடி​வெடுத்​தது. அதன்​படி, அயோத்​தி​யில் தேடி பஜாரில் உள்ள பிரஹஸ்​பதி … Read more

நடிகர் மோகன்பாபு பல்கலைக்கழகத்துக்கு ரூ.15 லட்சம் அபராதம்

திருப்பதி: தெலுங்கு திரை​யுல​கின் மூத்த நடிகர்​களில் ஒரு​வர் மோகன்​பாபு. இவருக்கு சொந்​த​மாக திருப்​பதி அருகே ரங்​கம்​பேட்டை எனும் இடத்தில் மோகன்​பாபு பல்​கலைக்​கழகம் (எம்​பி​யு) உள்ளது. இங்கு உயர்கல்வி ஒழுங்​கு​முறை மற்​றும் கண்​காணிப்பு ஆணை​யத்​தின் 3 அதி​காரி​கள் குழு கடந்த மாதம் 17-ம் தேதி ஆய்வு செய்​தது. மேலும் மாணவர்​கள், பெற்​றோர்​களிடம் விசா​ரணையை நடத்​தி​யது. இதையடுத்து மோகன்​பாபு பல்​கலைக்​கழகத்​திற்கு அதிகாரிகள் குழு ரூ.15 லட்​சம் அபராதம் விதித்​தது. மேலும் மாணவர்​களிடம் இருந்து கூடு​தலாக வசூலித்த ரூ.26 கோடியே 27 … Read more

விவாகரத்து பெற்ற கணவன் பாலாபிஷேக கொண்டாட்டம்!

புதுடெல்லி: மனை​வி​யிட​மிருந்து விவாகரத்து பெற்​றதை பாலாபிஷேகம் செய்து கணவர் கொண்​டாடிய வீடியோ வைரலாகி வரு​கிறது. டெல்​லியைச் சேர்ந்​தவர் பிராடர் டி.கே. பிராடருக்கு அவரது மனை​வி​யுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக விவாகரத்து கோரி நீதி​மன்​றத்​தில் மனு செய்​திருந்​தார். இந்​நிலை​யில் நீதி​மன்​றத்​திலிருந்து அவருக்கு அண்​மை​யில் விவாகரத்து கிடைத்​துள்​ளது. இதையடுத்து வீட்​டுக்கு வந்த அவருக்கு தாய், பாலால் அபிஷேகம் செய்​தார். இதுகுறித்து பிராடர் டி.கே. தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறும்​போது, “விவாகரத்து கிடைத்து விட்​டது. நான் இப்​போது தனி​யாக(சிங்​கிள்) இருக்​கிறேன். … Read more

பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை 32 மீட்டர் ஆழத்தில் அமைகிறது

புதுடெல்லி: நாட்​டில் முதல் முறை​யாக அசாம் மாநிலத்​தில் பிரம்​மபுத்​திரா நதி​யின் கீழ் சுரங்​கப்​பாதை அமைக்​கும் திட்​டத்​துக்கு அறிக்கை தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. ரூ.6,000 கோடி மதிப்​பிலான இத்​திட்​டத்​துக்கு மத்​திய அமைச்​சரவை விரை​வில் ஒப்​புதல் அளிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அசாம் மாநிலத்​தில் நுமலிகர் என்ற இடத்​திலிருந்து கோஹ்பூர் வரை, பிரம்​மபுத்​திரா நதி​யின் கீழ் சுரங்​கப்​பாதை அமைப்​ப​தற்​கான திட்​டம் ரூ.6,000 கோடி மதிப்​பீட்​டில் தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. இது ஆற்​றுக்கு கீழே அமைக்​கப்​படும் நாட்டின் முதல் சுரங்​கப்​பாதை திட்​ட​மாகும். சீன எல்லை அருகே … Read more

பிரதமர் அலுவலக அதிகாரி என கூறி ஏழுமலையானை தரிசித்தவர் யார்? – டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை 

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதி வழங்குமாறு, கடந்த மே 1-ல் டெல்லி பிரதமர் அலுவலகத்தின் பெயரில் ஒரு கடிதம் திருமலைக்கு வந்தது. அனைவருக்கும் மே 10-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு கோயில் பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆனால் வந்தவர் … Read more

மகாராஷ்டிரா,  சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.24,634 கோடியில் 4 ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்​பில் 4 மல்​டி-டி​ராக்​கிங் ரயில்வே திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை: மகா​ராஷ்டி​ரா, மத்​திய பிரதேசம், குஜ​ராத் மற்​றும் சத்​தீஸ்​கரில் உள்ள 18 மாவட்​டங்​களை உள்​ளடக்கி 4 ரயில் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன. இதனால் இந்​திய ரயில்​வே​யின் தற்​போதைய நெட்​வொர்க் கூடு​தலாக 894 கி.மீ. அதி​கரிக்​கும். இந்த திட்​டங்​கள் மகா​ராஷ்டி​ரா​வில் (வர்தா மற்​றும் பூசாவல் இடையே 3-வது மற்​றும் … Read more