8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! சம்பளம் உயராது?
8th Pay Commission: பல்வேறு நிதி நிறுவனங்களின் அறிக்கைகள், 8வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வு மிதமானதாகவே இருக்கும் என்று கணித்துள்ளன. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
8th Pay Commission: பல்வேறு நிதி நிறுவனங்களின் அறிக்கைகள், 8வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வு மிதமானதாகவே இருக்கும் என்று கணித்துள்ளன. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமார் தனது மீதமுள்ள பதவிக்காலத்தில் எந்தவொரு குற்றவியல் வழக்குகளையும் விசாரிப்பதைத் தடைசெய்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று திரும்பப் பெற்றது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமார் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் செயல்படுவதாக நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆரமகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. … Read more
Huma Qureshi Brother Murdered : ரஜினி ஹீரோவாக நடித்திருந்த ‘காலா’ திரைப்படத்தில் நடித்திருந்தவர் ஹூமா குரேஷி. இவரது சகோதரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுடெல்லி: கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து மிகப் பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். இது குறித்த தரவுகளை வெளியிட்ட அவர், ஐந்து விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்துள்ளதாக விவரித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி அணுகுண்டு வீசிவிட்டார் என்று பரபரப்புகள் கூடிய நிலையில், அவரது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். கூடவே, ‘இது … Read more
இந்தியாவிலேயே அதிகபட்சமாக அசைவம் உண்ணும் மக்களின் சதவிகிதத்தை கொண்ட மாநிலமாக வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து உள்ளது.
புதுடெல்லி: “மகாராஷ்டிர தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜக.வுடன் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிர தேர்தலில் வாக்காளர் பட்டியலை அளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. இவை எல்லாம் பெரும் சந்தேகத்தையும் தேர்தல் ஆணைய நடைமுறையின் நம்பகத்தன்மையும் கேள்விக் குறியாக்குகின்றன. … Read more
புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றபின், பிரதமர் மோடியை நேற்று முதல் முறையாக சந்தித்த மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் கமல்ஹாசன், கீழடி ஆய்வு அறிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஜூலை 25-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ‘பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை … Read more
புதுடெல்லி: ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்கில் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலி நிறுவனங்கள் பெயரில் சுமார் ரூ.5,000 கோடிக்கு போலி ரசீது (இன்வாய்ஸ்) தயாரித்து முறைகேடான வழியில் ரூ.730 கோடிக்கு மேல் `இன்புட் டாக்ஸ் கிரெடிட்’ பெற்றதன் மூலம் அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான சிவகுமார் தியோரா கடந்த மே மாதம் கைது … Read more
பாட்னா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘பிரதமர் மோடி அமெரிக்காவின் இசைக்கு ஏற்ப நடனமாடுகிறார்’ என்று கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், “இந்த நாட்டில் மத்திய அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் அனைவரும் பார்க்கிறீர்கள். ட்ரம்ப் இந்தியாவுக்கு 50% வரி விதித்தார். போர் நிறுத்தத்துக்கு தான் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் … Read more
புதுடெல்லி: “வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கம், தகுதியற்றவர்களின் பெயர்கள் சேர்ப்பு தொடர்பான உங்கள் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள சத்தியப் பிரமாண ஆவணத்தில் கையெழுத்திட்டு அனுப்புங்கள்” என்று ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல்களில் மோசடி நடப்பதாக பல்வேறு தரவுகளின் அடிப்படையில் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அடுத்து, தலைமை தேர்தல் அலுவலர் (தலைமை நிர்வாக அதிகாரி) அவருக்கு கடிதம் … Read more