ஆர்ஜேடி – காங். தொகுதிப் பங்கீடு குழப்பம்: பிஹார் தேர்தலில் தடுமாறுகிறதா மகா கூட்டணி?

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. ஆனாலும் இப்போது வரை எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடையே தொடரும் இழுபறி, அவர்களுக்கு பாதகமாக மாறுமா எனப் பார்ப்போம். தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான பிஹார், தற்போது சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப் பெரும்பான்மை பெற முடியாத சூழலில், பிஹாரில் நிதிஷ் குமார் கட்சியின் எம்.பி.க்களே தேசிய … Read more

காத்துவாக்குல 2 கல்யாணம்… ஒரே மேடையில் 2 தோழிகளை கரம்பிடித்த இளைஞர் – Viral News

Viral News: பல வருடங்களாக நெருங்கிய நட்பில் இருந்த தோழிகள் இருவரை, ஒரே மேடையில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

சத்தீஸ்கரில் 110 பெண்கள் உட்பட 210 நக்சலைட்டுகள் சரண்!

புதுடெல்லி: சத்தீஸ்கரில் இதுவரை இல்லாத வகையில் 210 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். பெரும்பாலும் இளம் வயதினர் இடம்பெற்றுள்ள நிலையில், 110 பெண்களும், 100 ஆண்களும் இருக்கின்றனர். சரண் அடைந்தவர்கள் நக்சலைட்டுகள் பிடியிலுள்ள சத்தீஸ்கரில் வடக்கு பஸ்தரைச் சேர்ந்தவர்கள். இந்த சரணடைததாலால், வடக்கு பஸ்தர் பகுதி சிவப்பு பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம், சத்தீஸ்கரில் காவல்துறையினருக்கு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. 110 பெண்கள் மற்றும் 100 ஆண்கள் உள்ளிட்ட 208 நக்சலைட்டுகள் தமது … Read more

மொத்த பாகிஸ்தானும் பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்புக்குள் உள்ளது: ராஜ்நாத் சிங்

லக்னோ: பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் நமது பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்புக்குள்தான் உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மற்றும் சோதனை மையத்தில் இருந்து முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக வெளியாகி உள்ளன. பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “நமது ராணுவத்தின் வெற்றி என்பது நிகழும் ஒரு சம்பவம் … Read more

‘பிரதமர் மோடி மவுன சாமியார் ஆகிவிடுகிறார்’- ரஷ்ய எண்ணெய் குறித்த ட்ரம்ப் கருத்துக்கு காங். எதிர்வினை

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அது குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்துள்ளது. அதேநேரத்தில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று … Read more

குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சரவை: ஜடேஜாவின் மனைவி ரிவாபா உட்பட 21 பேர் பதவியேற்பு

காந்தி நகர்: குஜ​ராத் பாஜக அரசின் புதிய அமைச்​சரவை நேற்று பதவி​யேற்​றது. கிரிக்​கெட் வீரர் ரவீந்​திர ஜடேஜா​வின் மனைவி ரிவாபா உட்பட 21 பேர் பதவி​யேற்​றனர். குஜ​ராத்​தில் முதல்​வர் பூபேந்​திர படேல் தலை​மையி​லான பாஜக அரசு ஆட்​சி​யில் உள்​ளது. இந்​நிலை​யில் முதல்​வர் பூபேந்​திர படேலை தவிர்த்து குஜ​ராத் அமைச்​சர்​கள் 16 பேரும் நேற்று முன்​தினம் பதவி வில​கினர். இவர்​களில் கனு​பாய் மோகன்​லால் தேசாய், ருஷிகேஷ் கணேஷ்​பாய் படேல், குன்​வர்​ஜி​பாய் மோகன்​பாய் பவாலி​யா. பர்​ஷோத்​தம்​பாய் சோலங்கி ஆகிய 4 … Read more

அயோத்தியில் முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம்

லக்னோ: உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கு பிறகு ராமாயண புராணத்தின் கருப்பொருளில் அமைக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு அருங்காட்சியகம் இங்கு அமைய உள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்களின் பார்வைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார். இந்த மெழுகு சிலை ராமாயண அருங்காட்சியகம், 9,850 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், பார்வையாளர்களை … Read more

கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தை சந்தித்த ராகுல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் திருடன் என நினைத்து தவறுதலாக தாக்கப்பட்டதில் ஹரிஓம் வால்மீகி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஹரிஓம் வால்மீகியின் (40) வீட்டுக்கு நேற்று காலை நேரில் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் அப்போது அவர் உறுதியளித்தார். பின்னர் ராகுல் காந்தி கூறும்போது, “தனது மகன் கொல்லப்பட்டதற்கான நீதியை அவர்கள் கோருகின்றனர். நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக … Read more

ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனத்தின் ரூ.5,000 கோடி மோசடி விவகாரம்: ரூ.2,385 கோடி கிரிப்டோ கரன்சி முடக்கம்

புதுடெல்​லி: ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​​தின்​ ரூ.2,385 கோடி ம​திப்​புள்​ள கிரிப்​டோ கரன்​சியை அமலாக்​கத்​ துறை ​முடக்​கி உள்ளது. ரஷ்​யாவை சேர்​ந்​த ​பாவல்​ புரோஜோரோவ்​ என்​பவர்​ கடந்​த 2011-ம்​ ஆண்​டில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​தை தொடங்​கி​னார்​. இந்​த நிறுவனம்​ 150-க்​கும்​ மேற்​பட்​ட ​நாடுகளில்​ ‘போரக்​ஸ்​ டிரேடிங்​’ என்​ற அந்​நிய செலாவணி வர்​த்​தகத்​​தில்​ ஈடுபட்​டு வருகிறது. கடந்​த 2019-ம்​ ஆண்​டில்​ இந்​​தி​யா​வில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. ​கால்​ ப​தித்​தது. அப்​​போது ​முதல்​ ‘போரக்​ஸ்​ டிரேடிங்​’ மூலம்​ கோடிக்​கணக்​கில்​ மோசடி … Read more

லஞ்சப் புகாரின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை: ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின

புதுடெல்லி: பஞ்​சாப் டிஐஜி ஹர்​சரண்​சிங் புல்​லர் வீட்​டில் சிபிஐ நடத்​திய சோதனை​யில், ரூ.7.5 கோடி ரொக்​கம், மெர்​சிடஸ் பென்​ஸ், ஆடி கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. பஞ்​சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்​த தொழிலதிபர் ஆகாஷ் பட்​டா மீது குற்ற வழக்கு ஒன்று பதி​வாகி​யுள்​ளது. இந்த வழக்கை நீக்​கு​வதற்​காக பஞ்​சாப் ரோபர் சரக டிஐஜி ஹர்​சரண் சிங் புல்​லர் பேரம் பேசியுள்​ளார். அவர் கூறியபடி கிருஷ்ணா என்​பவர் ஆகாஷ் பட்​டாவை தொடர்பு கொண்டு பணம் கேட்​டுள்​ளார். இது குறித்து … Read more