ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடரும்: உ.பி. சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடங்கிவைத்து பிரதமர் மோடி அறிவிப்பு

நொய்டா: சரக்கு மற்​றும் சேவை வரி​யில் (ஜிஎஸ்​டி) சீர்​திருத்​தங்​கள் மேலும் தொடரும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உத்தர பிரதேச சர்​வ​தேச வர்த்தக கண்​காட்சி 2025-ஐ நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி கூறிய​தாவது: மக்​களின் சுமையை குறைக்​கும் வித​மாக மத்​திய அரசு வரி​களை கணிச​மாக குறைத்​துள்​ளது. பணவீக்​கத்தை கட்​டுப்​படுத்​தி​யுள்​ளது. இதனால், மக்​களின் வரு​மானம் மற்​றும் சேமிப்பு இரண்​டும் அதி​கரித்​துள்​ளது. ரூ.12 லட்​சம் வரை வரு​மான வரி விலக்கு அளிப்​ப​தன் மூல​மும், … Read more

மணிப்பூர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள்: ஓர் ஆயுத விநியோகஸ்தர் கைது

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் மற்றும் ஓர் ஆயுத விநியோகஸ்தரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மணிப்பூர் மாநில காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: இம்பால் மேற்கு மாவட்டம் பானா பஜார் பகுதியில், தடை செய்யப்பட்ட பிரெபெக் என்ற தீவிரவாத அமைப்பின் ஓர் உறுப்பினரை போலீஸார் கைது செய்துள்ளனர். காக்சிங் மாவட்டத்தில் ஒருவரை மிரட்டி ரூ.5 ஆயிரம் பறித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுபோல விஷ்ணுபூர் மாவட்டம் ட்ராங்லோபி பகுதியில், … Read more

கைதி இறப்பு சம்பவத்தில் தலைமறைவான போலீஸார் பற்றி தகவல் தந்தால் ரூ.2 லட்சம் பரிசு

போபால்: கைதி மரண சம்பவத்தில் தலைமறைவான மத்திய பிரதேச போலீஸார் இருவர் பற்றி தகவல் அளிப்போருக்கு, ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் தேவா பர்தி. இவரையும், இவரது மாமா கங்காராம் என்பவரையும் திருட்டு வழக்கு ஒன்றில் மத்திய பிரதேச போலீஸார் கைது செய்து குணா பகுதியில் உள்ள மியானா காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் தேவா பர்தி இறந்தார். இவர் மாரடைப்பால் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், … Read more

வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மைசூரு: சுற்றுலா பயணிகளின் வருகையால் களைக்கட்டியது தசரா

பெங்களூரு: மைசூரு தசரா விழாவையொட்டி அரண்​மனை, சாமுண்டி மலை, கிருஷ்ண​ராஜ சாகர் அணை உள்​ளிட்​டவை வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ள​தால் மைசூரு மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. கி.பி. 1610ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்​வடி கிருஷ்ண​ராஜ உடை​யார் மன்​னர், போரில் வென்​றதை முன்​னிட்டு விஜயதசமி காலத்​தில் தசரா விழாவை 10 நாட்​கள் கொண்​டாட தொடங்​கி​னார். 1947-ல் நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, கர்​நாடக அரசின் சார்​பில் தசரா விழா ஆண்​டு​தோறும் கொண்​டாடப்​படு​கிறது. தற்​போது 415-வது ஆண்​டாக தசரா … Read more

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களில் வீடு ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கெஜ்ரி​வாலுக்கு டெல்​லி​யில் வீடு ஒதுக்​கீடு செய்ய மத்​திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நேற்று விசாரணைக்குவந்​தது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘கெஜ்ரி​வாலுக்கு இன்று முதல் 10 நாட்​களுக்​குள் பொருத்​த​மான வீடு ஒதுக்​கப்​படும். இதை நீங்​கள் பதிவு செய்து கொள்​ளலாம்’’ என்று தெரி​வித்​தார். இந்​தப் பிரச்​சினை விரை​வில் சுமூக​மாக … Read more

மகளிர் வாக்குகளை குறிவைத்தே பிஹார் அரசு ரூ.10,000 நிதியுதவி: பிரியங்கா காந்தி சாடல்

பாட்னா: பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அவர்களுக்கு நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசு ரூ.10,000 அளித்துள்ளது என பிரியங்கா காந்தி வத்ரா விமர்சித்துள்ளார். பிஹார் அரசின், ‘முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்’ அம்மாநிலத்தில் இன்று தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். பாட்னாவில் நடைபெற்ற தொடக்க விழாவில், முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் … Read more

லடாக் போராட்டம்: சோனம் வாங்சுக் கைது – தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி போராடிய பருவநிலை செயற்பாட்டாளார் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உண்ணாவிரதக் களத்தில் இருந்த போராட்டக்காரர்களை வன்முறையில் ஈடுபடும் வகையில் தூண்டிவிட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்தது என்ன? – லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்கக் கோரியும், வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியினரின் மொழி, கலாச்சாரம், நாகரீகம், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அந்தப் பகுதிகளில் தன்னாட்சி அதிகாரம் … Read more

ஜனவரியில் இருந்து 2,417 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை நாடு கடத்தி இருக்கிறது என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்திர் ஜெய்ஸ்வால், “இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், சட்டப்பூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை அரசு ஊக்குவிக்கிறது. கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி இருக்கிறது அல்லது திருப்பி அனுப்பி இருக்கிறது. சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்கள் … Read more

உக்ரைன் போரில் ரஷ்ய முடிவை புதினிடம் கேட்டாரா மோடி? – நேட்டோ தலைவர் தகவலுக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: ‘உக்ரைன் போர் விவகாரத்தில் உங்கள் திட்டம் என்ன?’ என்று ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியதாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்த கருத்தை இந்திய திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் தொடர்பாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தோம். இந்த அறிக்கை தவறானதும், … Read more

இந்திய – ரஷ்ய உறவுக்கு ஆழமான சான்று மிக்-21 போர் விமானம்: ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி

சண்டிகர்: இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்த மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்-21 வெறும் ஒரு விமானம் அல்ல; அது இந்தியா – ரஷ்யா இடையேயான ஆழமான உறவின் சான்று என தெரிவித்துள்ளார். ரஷ்ய தயாரிப்பான மிக்-21 போர் விமானங்கள், இந்திய விமானப்படையின் முதல் சூப்பர்சோனிக் மற்றும் இடைமறிப்பு விமானங்களாக செயல்பட்டன. 1960களின் முற்பகுதியில் இந்திய … Read more