வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் நடைமுறையை தொடங்கியது அமெரிக்கா

புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறை கடந்த மே மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் விசா பெறுவதற்கான நேர்காணல் விரைவில் தொடங்கும். ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக ஊடக கணக்குகளை பொது என்ற வகைமையில் அமைத்து மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு உடன்பட மறுக்கும் மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். அமெரிக்கா மற்றும் அதன் அரசாங்கம், கலாச்சாரம், நிறுவனங்கள் அல்லது நிறுவனக் … Read more

கர்நாடகாவில் வேலை நேரத்தை 10 மணி நேரமாக்க முடிவு: தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு

பெங்களூரு: ​நாட்​டின் ஐடி தலைநக​ராக பெங்​களூரு விளங்கி வரு​கிறது. இங்​குள்ள தனி​யார் நிறு​வனங்​களின் தலைமை செயல் அதி​காரி​கள் சிலர், ஊழியர்​களின் தினசரி வேலை நேரத்தை அதி​கரிக்க வேண்​டும் என்று கர்​நாடக அரசுக்கு கடிதம் அனுப்​பினர். அதன் அடிப்​படை​யில், ஊழியர்​களின் வேலை நேரத்தை 10 மணி நேர​மாக உயர்த்த கர்​நாடக அரசு​முடி​வெடுத்​துள்​ளது. இதற்​காக கர்​நாடக தொழிலா​ளர் சட்​டத்​தில் திருத்​தங்​களை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி கர்​நாடக கடைகள் மற்​றும் வணிக நிறு​வனங்​கள் சட்​டத்​தின்​படி, தினசரி வேலை நேரம் 9 மணி … Read more

ஈரானில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம்

ஈரானிலிருந்து டெல்லி திரும்பிய இந்தியர்கள் ‘இந்தியா வாழ்க, பிரதமர் மோடி வாழ்க’ என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர். இஸ்ரேல் – ஈரான் இடையே போர் ஏற்பட்டதால், ஈரான் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்களை தாய்நாடு அழைத்து வர வேண்டும் என அவர்களது பெற்றோர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஈரானில் இந்தியர்கள் சுமார் 4,000 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். இதையடுத்து ஈரானில் உள்ள இந்தியர்களை , தாய்நாடு அழைத்து வரும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் … Read more

ஹரியானாவில் இளம் பெண்ணை கொன்று வீட்டு முன் புதைத்த கணவர் குடும்பத்தினர்

ஹரியானாவில் 2 மாதங்களாக தேடப்பட்டு வந்த இளம் பெண்ணை, கணவர் குடும்பத்தினர் கொலை செய்து வீட்டு முன் புதைத்தை போலீஸ் விசாரணையில் மாமனார் ஒப்புக் கொண்டார். இதையடுத்து உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் ஃபிரோசாபாத் மாவட்டம் கேரா கிராமத்தை சேர்ந்த இளம் பெண் டானு ராஜ்புத்(25). இவருக்கும் ஹரியானா ஃபரிதாபாத்தைச் சேர்ந்த அருண் சிங் (28) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் டானு ராஜ்புத்தை காணவில்லை என … Read more

வாக்குப்பதிவு காட்சி வெளியீடு விவகாரம்: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

வாக்குப்பதிவு தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிடுவது வாக்காளர்களின் அந்தரங்க உரிமைக்கு முரணானது என ராகுல் காந்தி கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் உட்பட சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. இதுபோல வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு … Read more

துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டத்தில் ரூ.800 கோடி ஊழல்: டாடா அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

மும்பை துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டத்தில் ரூ.800 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக டாடா, ஜேஎன்பிடி நிறுவன முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மும்பை அருகே உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை (ஜேஎன்பிடி) ரூ.800 கோடியில் ஆழப்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த திட்ட மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்டதாகவும் இதில் ஊழல் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து 3 ஆண்டுகளாக சிபிஐ முதற்கட்ட விசாரணை மேற்கொண்டது. இதன் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டங்களின் … Read more

முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு பிஹாரில் ஓய்வூதியம் ரூ.1,100 ஆக அதிகரிப்பு

பாட்னா: ​மு​தி​யோர், மாற்​றுத் திற​னாளி​கள் உட்பட குறிப்​பிட்ட பிரி​வினருக்​கான மாதாந்​திர உதவித் தொகையை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி பிஹார் முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்​துள்​ளார். பிஹார் மாநிலத்​தில் வரும் அக்​டோபர் அல்​லது நவம்​பர் மாதங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், கடந்த வெள்​ளிக்​கிழமை பிஹார் மாநிலத்​தில் ரூ.5,736 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். பிரம்​மாண்​ட​மான பொதுக் கூட்​டத்​தில் அவர் பேசும்​போது, ‘‘காங்​கிரஸ் – ஆர்​ஜேடி கூட்​ட​ணி​யின் காட்​டாட்சி நடத்​தி​ய​வர்​களிடம் இருந்து … Read more

பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை கைது செய்தது என்ஐஏ

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் உட்பிரிவான The Resistance Front என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில், இந்த … Read more

ஹரியானா அரசு அலுவலங்களில் 5 நிமிடம் 'யோகா பிரேக்' – முதல்வர் நயாப் சிங் சைனி அறிவிப்பு

ஹரியானாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 5 நிமிடம் யோகா பிரேக் அளிக்கப்படும் என்று முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார். 11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஹரியானாவின் குருஷேத்ராவில் மாநில அளவிலான யோகா நிகழ்ச்சி, யோகா குரு ராம் தேவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பங்கேற்று பேசியதாவது: 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம் ஹரியானாவில் கடந்த மே 27-ம் தேதியே தொடங்கி விட்டது. அப்போது முதல் … Read more

7 மாதங்களுக்கு முன்பே நாங்கள் அறிவித்த திட்டம்: நிதிஷ் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பாட்னா: முதி​யோர் பென்​ஷன் தொகையை ரூ.400-லிருந்​து, ரூ.1,100- ஆக உயர்த்தி முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்தது பற்றி ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் தேர்​தலில் பாஜக-ஐக்​கிய ஜனதா தளக் கூட்​ட​ணிக்​கும், ஆர்ஜேடி, காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய கூட்​ட​ணிக்​கும் இடையே கடும் போட்டி உள்ளது. இந்​நிலை​யில் தேஜஸ்வி யாதவ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார், தற்​போது சுயநினை​வின்றி உள்​ளார். செயல்​ப​டாத முதல்​வ​ராக இருக்​கிறார். அவரால் அவரது கட்சி வேட்​பாளர்​களைக் கூட தேர்வு … Read more