டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என்றுகூறி உச்ச நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஜூலை 12) உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அதில்தான் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 … Read more

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுப்போம்: ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தநாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் மைத்தேயி மற்றும் குகி இனத்தவர் இடையே வன்முறை ஏற்பட்டது. நீண்ட காலமாக நடைபெற்ற இந்த கலவரத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். பலரது வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மணிப்பூருக்கு கடந்த திங்கள்கிழமை சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் … Read more

பதவியேற்கும் முன்பே பல வசதிகளை கேட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி: பூஜா மீதான புகார்கள் பற்றி விசாரிக்க குழு அமைப்பு

மும்பை: யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை அவர் பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது. பூஜா தனது சொந்த காரில் மகாராஷ்டிர அரசு என்றபலகையும் சிவப்பு-நீல சைரன் விளக்கும் பயன்படுத்தி வந்துள்ளார். கூடுதல் ஆட்சியர் அஜய் மோரே இல்லாதபோது அவரதுமுன் அறையை பூஜா ஆக்கிரமித்ததுடன் அவரது அனுமதியின்றி அங்கிருந்த பொருட்களை அகற்றியுள்ளார். வருவாய் உதவியாளரிடம் … Read more

நீதிபதிகளின் ஊதிய உயர்வு வழக்கில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநில தலைமை செயலர்களுக்கு சம்மன்

புதுடெல்லி: நீதிபதிகளின் ஊதிய உயர்வு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களின் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் மாஜிஸ்திரேட், நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்தஉச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்றநீதிபதி வெங்கடராம ரெட்டி தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டில்உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாஜிஸ்திரேட், நீதிபதிகளின் ஊதியத்தை 30 சதவீதம்உயர்த்த பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், … Read more

‘ஜம்மு காஷ்மீர் தேர்தலை நடத்துவது மட்டுமே ராணுவ பலத்தை நிரூபிக்கும்’ – ஓமர் அப்துல்லா 

ஸ்ரீநகர்: “ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு இடையில், தீவிரவாதிகளின் மீதான பாதுகாப்பு படையினரின் ஆதிக்கத்தை நிரூபிக்க ஜம்மு காஷ்மீரில் சரியான நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த ஓமர் அப்துல்லா, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “யூனியன் பிரதேசங்களில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. நிலைமை இன்னும் 1996-ம் ஆண்டை விட மோசமாக இருக்கிறதா? … Read more

உ.பி. காவல்நிலைய மேற்கூரையின் மீது ஏறிய காளையால் பரபரப்பு: வைரல் வீடியோ

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள காவல்நிலையம் ஒன்றின் மேற்கூரையின் மீது ஏறிய காளையால் சிலமணிநேரம் குழப்பமும் பீதியும் நிலவியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் விரைவில் வைரலாகி வருகிறது. ரேபரேலியில் உள்ள சலோன் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சுசி அவுட்போஸ்ட் காவல் நிலையத்தின் மேற்கூரையின் மீது ஒரு காளை இளைப்பாறுவது அந்த வீடியோவில் தெரிகிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, காவல்நிலையத்தின் மேற்கூரையின் மீது காளைமாடு இருப்பதை காவலர்கள் முதலில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கட்டிடத்தின் மேற்கூரையின் … Read more

மோடி ஏன் மணிப்பூர் செல்ல வேண்டும்? – 5 நிமிட வீடியோவுடன் ராகுல் காந்தி அடுக்கிய காரணங்கள்

புதுடெல்லி: மணிப்பூரின் நிவாரண முகாம்களுக்கு தான் சென்றது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி தனது மணிப்பூர் பயணம் குறித்து 5 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடனான பதிவில், “மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து நான் இங்கு வருவது இது மூன்றாவது முறை துரதிருஷ்டவசமாக நிலைமையில் எந்த … Read more

மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து அதிகாரபூர்வ பங்களாவை காலி செய்தார் ஸ்மிருதி இரானி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து டெல்லியில் உள்ள அதிகாரபூர்வ அரசு பங்களாவை, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காலி செய்தார். உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியின் முன்னாள் எம்பியும், முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சருமான ஸ்மிருதி இரானி, டெல்லியில், 28 துக்ளக் கிரசென்ட் என்ற முகவரியைக் கொண்ட அரசு பங்களாவில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை காலி செய்துவிட்டதாக இன்று (வியாழன்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடந்து … Read more

கடும் முதுகுவலி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: கடும் முதுகுவலி காரணமாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையான முதுகுவலி ஏற்பட்டதால் நேற்று (ஜூலை 10) இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை தனி வார்டுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை நிபுணர் அமோல் ரஹேஜாவின் நேரடி … Read more

அம்பானி இல்லத் திருமணம் என்ன பொது நிகழ்ச்சியா? – நெட்டிசன்களின் விமர்சனமும் கலாய்ப்பும்

மும்பை: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி, மும்பையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பொது நிகழ்ச்சி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவழியாக பல்வேறு கொண்டாட்டங்களுக்கும், சடங்குகளுக்கும் பின்னர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சண்ட் தம்பதிகளின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் (Jio World Convention … Read more