அமேதியில் ராபர்ட் வதேரா ஆதரவு சுவரொட்டிகள் அகற்றம்: காங். வேட்பாளரை அறிவிக்காததால் தொண்டர்கள் குழப்பம்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் இதுவரை நடைபெற்ற 16 மக்களவைத் தேர்தல்களில் 13 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வெறும் மூன்றுமுறை மட்டுமே பிற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்த 13-ல் 11 தேர்தல்களில் நேரு-காந்தி குடும்பத்தினர் எம்.பி.யாகி உள்ளனர். இங்கு 2004 முதல் போட்டியிட்டு, 3 முறை வென்றராகுல் காந்தி, 2019-ல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார், எனினும் அவர் மற்றொரு தொகுதியான கேரளாவின் வயநாட்டில் வெற்றிபெற்றார். ராகுல் இந்தமுறை மீண்டும் வயநாட்டில் … Read more

சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டினர் இந்தியா வரும் அபாயம்

புதுடெல்லி: சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டினர் இந்தியா வரும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு நபர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகளை தேவைப்படும் நபருக்கு மாற்றுவதே உறுப்பு தானமாகும். இதுதவிர நெருங்கிய உறவினராக இருக்கும் பட்சத்தில் கருணை அடிப்படையில் உறுப்பு தானம் செய்ய அனுமதி உண்டு. ஆனால், வியாபார நோக்கத்தில் பணம் பெற்றுக்கொண்டோ, பணம் கொடுத்தோ உறுப்பு தானம் செய்வதும், பெறுவதும் இந்திய சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், … Read more

ஜெகன் மீதான கல்வீச்சு சம்பவம் ஒரு மாபெரும் நாடகம் – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் ஒரு தேசிய ஆங்கில ஊடகத்திற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு கால ஜெகனின்ஆட்சி, மக்களை மேலும் புண்படும்படி செய்து விட்டது. இந்த நிலையில் எனது மாநிலத்தையும், எனது மாநில மக்களையும் காப்பாற்றுவதை எனது முதல் கடமையாக கருதுகிறேன். மாநிலப் பிரிவினைக்கு முன்புஎனது ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத்திற்கு மிக உறுதியான வளர்ச்சி எனும் அடிக்கல்லை நாட்டினேன். இதனால் ஹைதராபாத் … Read more

சம பகிர்வு: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருப்பது என்ன? – ஒரு பார்வை

சென்னை: “நாட்டு மக்களிடம் உள்ள சொத்து, நகை, பணம் ஆகியவற்றைக் கணக்கெடுத்து, இந்தியாவுக்குள் ஊடுருவியவர்களுக்கும், அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் போகிறது காங்கிரஸ் கட்சி’ என்று ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் காங்கிரஸின் 2024 தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை இங்கே முழுமையாகப் பார்ப்போம். சம பகிர்வு: காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் ‘சம பகிர்வு’ என்ற தலைப்பின் கீழ், சமூக … Read more

பிரதமர் மோடி பேச்சுக்கு எதிரான புகார் மீதான ஆய்வை தொடங்கியது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகரிக்கும் அழுத்தத்துக்கு இடையே தேர்தல் ஆணையம் ஆய்வைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனித்தனியே தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரில், பிரதமரின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாக, தவறானதாக,. ஒரு குறிப்பிட்ட … Read more

“காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் வெளிவருகின்றன” – பிரதமர் மோடி @ ‘பரம்பரை சொத்து வரி’ விவகாரம்

அம்பிகாபூர் (சத்தீஸ்கர்): காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் ‘பரம்பரை வரி’ குறித்த கருத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன” என்று விமர்சித்துள்ளார். சத்தீஸ்கரில் உள்ள சர்குஜா மாவட்டத்தின் தலைமையகமான அம்பிகாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, “காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இப்போது அது பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்று சொல்கிறது. முன்பு ராகுலின் தந்தைக்கும், தற்போது ராகுலுக்கும் … Read more

தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் பகுதியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதில், யவட்மால் – வாசிம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஹேமந்த் ராஜ் ஸ்ரீக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென நிதின் கட்கரி … Read more

பரம்பரை சொத்து வரி விதிக்கும் எந்தத் திட்டமும் காங்கிரஸிடம் இல்லை: ஜெயராம் ரமேஷ்

புதுடெல்லி: “பரம்பரை சொத்து வரி விதிக்கும் எந்தத் திட்டமும் காங்கிரஸிடம் இல்லை. அதுபோன்ற சிந்தனையும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “பரம்பரை சொத்து வரி விதிக்கும் எந்தத் திட்டமும் காங்கிரஸிடம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன். அதுபோன்ற சிந்தனையும் இல்லை. சாம் பிட்ரோடா ஒரு சிறந்த தொழில் வல்லுநர். இந்தியாவின் … Read more

'எங்க கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க…' காங்கிரஸின் வினோத பிரச்சாரம் – காரணம் என்ன?

Lok Sabha Election 2024: காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் மேற்கொண்ட சம்பவம் பலரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.24 – ‘பரம்பரை சொத்து வரி’ விவகாரம் முதல் இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி வரை

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் “அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேசுபொருளான ‘பரம்பரை சொத்து வரி’ விவகாரம்: இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான … Read more