இந்துக்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் கடும் விமர்சனம்

புதுடெல்லி: இந்துக்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியை 140 கோடி மக்களும் மன்னிக்க மாட்டார்கள். 2029 மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் வரிசையிலேயே அமரும் என்று மக்களவையில் பிரதமர்மோடி கடுமையாக விமர்சித்தார். கடந்த 27-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், ஆளும் பாஜக … Read more

“சாதிவாரி கணக்கெடுப்பே சமூக நீதிக்கான ஒரே வழி” – மக்களவையில் சந்திரசேகர் ஆசாத் எம்.பி பேச்சு

புதுடெல்லி: “சமூக நீதியை அடைவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே ஒரே வழி” என்று மக்களவையில் ஆசாத் சமாஜ் (கன்ஷிராம்) கட்சி எம்.பி. சந்திரசேர் ஆசாத் வலியுறுத்தினார். மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது செவ்வாய்க்கிழமை உரையாற்றிய சந்திரசேகர் ஆசாத், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மட்டுமே சமூக நீதியை அடைவதற்கான ஒரே வழி. மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். பாஜகவின் ‘சப்கா சத் சப்கா விகாஸ்’ என்ற … Read more

“3-வது முறை ஆட்சியில் மும்மடங்கு வேகம் காட்டுவோம்!” – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை

புதுடெல்லி: ஊழலுக்கு எதிரான கொள்கை காரணமாகத்தான் நாடு தங்களை மீண்டும் ஆசீர்வதித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும், “எங்களின் 3-வது முறை ஆட்சி என்பது 3 மடங்கு வேகத்தில் வேலை செய்வோம்” என்று அவர் உறுதியளித்தார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரை: “குடியரசுத் தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது குடியரசுத் தலைவர் தனது உரையில் வளர்ந்த இந்தியாவின் தீர்மானத்தை … Read more

அன்று காவலர், இன்று ஆன்மிக குரு… – பக்தர்களைக் குவித்த ‘போலே பாபா’ யார்? | உ.பி நெரிசல் சம்பவம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஹாத்தரஸின் நெரிசல் சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கூட்டத்துக்கு காரணமான ‘போலே பாபா’ என்று அழைக்கப்படும் ஆன்மிக குரு, 18 வருடங்களுக்கு முன் உத்தரப் பிரதேச காவல் துறையின் கான்ஸ்டபிளாக இருந்துள்ளார். லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்ட இவரது பின்னணி இது… உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள காஸ்கன்சின் பட்டியாலி கிராமத்தை சேர்ந்தவர் சூரஜ் பால். காவல் துறையில் சாதாரணக் கான்ஸ்டபிளாக இருந்தவருக்கு ஆன்மிகப் பிரச்சாரம் செய்வதில் அதிக ஆர்வம் … Read more

கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி – வீடியோ வைரல்!

புதுடெல்லி: மக்களவையில் தனது உரையின் இடையே தொடர்ந்து கோஷங்களை எழுப்பி இடையூறு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி தண்ணீர் வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று (ஜூலை 02) 135 நிமிடங்கள் பதிலுரை ஆற்றினார். அப்போது அவரது உரையின் இடையே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். ஒருகட்டத்தில், பிரதமர் மோடி தனக்கு … Read more

உ.பி. நெரிசல் சம்பவம்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 116 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “உத்தர பிரதேசத்தின் ஹாத்தரஸில் நடந்த துயரமான விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளையும் உ.பி. மாநில அரசு செய்து வருகிறது. இந்த விபத்தில் தங்களுடைய அன்புக்குரியவர்களை … Read more

உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 107 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராரா-வில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. சிக்கந்தராராவின் முகல்கடி எனும் … Read more

பாம்பன் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த ரயில்வே அமைச்சரிடம் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை

புதுடெல்லி: ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் சந்தித்தார். அப்போது, ராமநாதபுரம் தொகுதி தொடர்பான பல்வேறு ரயில்வே கோரிக்கைகளுக்காக மனு அளித்தார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவரும், எம்பியுமான கே.நவாஸ்கனி அளித்த கடிதத்தின் விவரம்: பாம்பனில் புதிய ரயில்வே மேம்பாலம் பணிகள் நிறைவடையவில்லை. அது, இன்னும் திறக்கப்படாமல் இருப்பதினால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், ராமேஸ்வரம் … Read more

நீட் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வழிவகுப்பீர்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: நீட் விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அது குறித்து நாளை (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடித விவரம்: “இந்தக் கடிதம் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் … Read more

Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..

Hathras Uttar Pradesh Stampede Religious Event Death : உத்திர பிரதேசத்தில் நடந்த ஒரு கோயில் திருவிழாவில், 27 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.