பிஹார் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு – தலா 101 இடங்களில் பாஜக, ஜேடியு போட்டி

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 6ம் தேதி வெளியிட்டது. அதன்படி வரும் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இருகட்டங்களாக பிஹார் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள், நவ. 14-ம் … Read more

பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது தொழில்நுட்பக் கோளாறு: ஆப்கன் அமைச்சர்

புதுடெல்லி: புதுடெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு பெண் பத்திரிகையாளர்களை அழைக்காதது வேண்டுமென்றே அல்ல என்றும், அது தொழில்நுட்பப் பிரச்சினை என்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி கூறினார். ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமிர் கான் முட்டாகி கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது பெரும் சர்ச்சையாகியது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தன. இந்த சூழலில், அமைச்சர் முட்டாகி இன்று மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, அதில் பெண் பத்திரிகையாளர்களை கலந்து கொள்ள அழைத்தார். … Read more

மாணவிகளை இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது – மம்தா பானர்ஜி அறிவுரை

கொல்கத்தா: துர்காபூரில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், மாணவிகள் இரவில் வெளியே செல்ல கல்லூரிகள் அனுமதிக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இந்த சம்பவத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்கள் மாணவர்களை, குறிப்பாக பெண்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. பெண்களும் தங்களைப் … Read more

ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல் – 3 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் போட்டியிட 3 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சத்பால் சர்மா, குலாம் முகமது மிர், ராகேஷ் மகாஜன் ஆகிய வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில், ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மூன்று இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் … Read more

இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கை தவறானது: ப.சிதம்பரம்

கசவுலி: ஆபரேஷன் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்டது தவறு என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சை ஆகியுள்ளது. “பொற்கோயிலில் ஆபரேஷன் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது தவறானது. அதை நான் ஏற்கிறேன். அதற்காக தனது உயிரையே பறிகொடுத்தார் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அந்த தவறில் ராணுவம், காவல் துறை, புலனாய்வு பிரிவு மற்றும் … Read more

ரயிலில் பயணம் செய்யும் போது எவ்வளவு கிராம் தங்கம் அணிந்து இருக்கலாம்?

இந்திய ரயில்களில் தங்கம் எடுத்துச் செல்வது சட்டப்பூர்வமானது. ஆனால் தங்கத்திற்கான உரிய ஆவணங்களை வைத்திருப்பதும் கட்டாயமாகும். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மேற்கு வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மருத்துவக் கல்லூரி மாணவி – மூவர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது மிகவும் உணர்ச்சிகரமான வழக்கு. கூடுதல் தகவல்களை நாங்கள் பின்னர் … Read more

ரயில்களில் பட்டாசு கொண்டுசென்றால் எத்தனை ஆண்டுகள் சிறை? எவ்வளவு அபராதம்?

Indian Railways: தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயலில் பயணிகள் பட்டாசுகள், வெடிகளை கொண்டுசென்றால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பதை இங்கு காணலாம்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு சிறப்பு நாணயம், தபால் தலை வெளியீடு

புதுடெல்லி: ஆர்​எஸ்​எஸ் அமைப்பு கடந்த 1925-ம் ஆண்டு செப்​டம்​பர் மாதம் 27-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. இதன் 100-வது ஆண்டு தினம் கடந்த அக்​.1-ம் தேதி கொண்​டாடப்​பட்​டது. இதில் சிறப்பு நாண​யம் மற்​றும் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளி​யிட்​டார். இதுகுறித்து மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘சிறப்பு நாண​யத்​தைப் பெறு​வதற்கு https://indiagovtmint.in/hi/product-category/kolkata-mint என்ற இணை​யதளத்​தில் ஆர்​டர் செய்​ய​லாம்’’ என்று கூறி​யுள்​ளார். Source link

டெல்லியில் ஆப்கன் அமைச்சர் கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி: ஆப்​கானிஸ்​தான் வெளி​யுறவு அமைச்​சர் அமீர் கான் முத்​தாகி கடந்த வியாழக்​கிழமை டெல்​லிக்கு வந்​தார். ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்​தானில் தலி​பான்​கள் ஆட்​சிக்கு வந்​த​திலிருந்து அவர் இந்​தி​யா​வுக்கு முதல் முறை​யாக வந்​துள்​ளார். தனது 7 நாள் இந்​தி​யப் பயணத்​தின் இரண்​டாவது நாளில் அவர் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கரை​ சந்​தித்​து இருதரப்பு வர்த்​தகம், மனி​தாபி​மான உதவி மற்​றும் பாது​காப்பு ஒத்​துழைப்பு குறித்து விவா​தித்​தார். பின்​னர் அவர் டெல்​லி​யில் ஒரு செய்​தி​யாளர் சந்​திப்பை நடத்​தி​யது சர்ச்​சை​யாகி உள்​ளது. அதில், டெல்​லி​யின் … Read more