“ஆம் ஆத்மியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவாலே சிறந்தவர்” – டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ்

புதுடெல்லி: தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவால்தான் சிறந்த நபர் என அக்கட்சியின் முக்கியத் தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரவிந்த் கேஜ்ரிவாலின் செய்தியை தற்போது சுனிதா கேஜ்ரிவால் வழங்கி வருகிறார். இது கட்சியினர் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவால்தான் சிறந்த … Read more

“அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என பிரதமர் மோடி அறிவிப்பாரா?” – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: “அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என பிரதமர் மோடி தெளிவுபடுத்துவாரா?” என காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். அந்த தொகுதியின் தற்போதைய எம்பி தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பிரதமர் தனது வழக்கமான பிரசாரத்தை இங்கு தொடர்கிறார் என்றாலும், இந்தியாவின் ஜனநாயகம் தொடர்பாக … Read more

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.5: காங். தேர்தல் அறிக்கை அம்சங்கள் முதல் தமிழகத்தில் ஐடி ரெய்டு வரை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2024 – முக்கிய வாக்குறுதிகள்: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். இந்நிகழ்வில் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீதி என்பதை முன்னிறுத்தி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்; NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்; குடும்பத்தில் ஒரு … Read more

திஹார் சிறையில் கவிதாவிடம் விசாரணை நடத்த சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் கட்ட விசாரணையை மத்திய புலனாய்வு முகமை தொடங்கியுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக கவிதாவை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனு … Read more

பேராசிரியரை களமிறக்கிய மாயாவதி… – யார் இந்த இந்து சவுத்ரி? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உத்தரப் பிரதேசத்தின் லால்கஞ்ச் (தனி) மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார் முனைவர் இந்து சவுத்ரி. சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய, சிறந்த கல்வி பின்னணி கொண்ட இந்து சவுத்ரி தனது தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்துக்குச் சென்று மாயாவதியின் குரலாக ஒலிப்பாரா என்பதை களம்தான் தீர்மானிக்கும். பகுஜன் சமாஜ் கட்சி: மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை … Read more

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என்ஐஏ தகவல்

புதுடெல்லி: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்படும் முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது பெயர் முசாவிர் ஹூசைன் சாஹிப். இந்த சதிச் செயலில் உடந்தையாக இருந்தவர் அப்துல் மதீன் தாஹா. இருவருமே கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தின் … Read more

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவி… தேர்வு எழுத அனுமதிக்காத அவலம் – பகீர் சம்பவம்

National Latest News: கூட்டு பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை 12ஆம் வகுப்பு தேர்வு எழுத தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்காத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எல்கர் பரிஷத் வழக்கில் ஷோமா சென்னுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

மும்பை: எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷோமா சென்னுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. மகாராஷ்ட்ராவின் புனே அருகே உள்ள சிறிய கிராமமான பீமா கோரேகானில் கடந்த 2018, ஜனவரி ஒன்றாம் தேதி நிகழ்ந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். இந்த வன்முறையின் பின்னணியில் தீவிர இடதுசாரிகள் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்த வழக்கில் ஆங்கில இலக்கிய பேராசிரியரும், சமூக ஆர்வலருமான ஷோமா சென், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் பிரிவு 43(டி)(5)ன் கீழ் கைது … Read more

பாஜக நிர்வாகி திடீர் கைது… பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் ட்விஸ்ட் – பின்னணி என்ன?

Rameshwaram Cafe Bomb Blast Case: பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரை தேசிய விசாரணை முகமை கைது செய்துள்ளது. 

“பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு” – ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ‘நியாய பத்திரம்’ என்ற பெயரில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கும், அவற்றைப் பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையிலான தேர்தல் இது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார். பின்னர் கேள்வி ஒன்றுக்கு பதில் … Read more