நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம்

புதுடெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. சத்தீஸ்கரில் போராட்டம்: சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பெகல் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பூபேஷ் பெகல், மத்திய அரசு நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது. பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. மோடி அரசில் அதிகரித்து வரும் ஊழலால் மாணவர்களின் எதிர்காலம் … Read more

தலைநகரில் தண்ணீர் பிரச்சினை: டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அண்டை மாநிலத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளார். அதிஷி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியபோது, டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் மற்றும் டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் உடன் இருந்தனர். திஹார் சிறையில் உள்ள முதல்வர் … Read more

டெல்லியில் வெப்ப அலை தாக்கத்துக்கு வீடு இல்லாதவர்கள் 192 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வெப்ப அலையின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வீடற்ற நிலையில் சாலையில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 192 பேர் கடந்த 9 நாட்களில் உயிரிழந்துள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹோலிஸ்டிக் டெலவப்மெண்ட் மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வட மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக, டெல்லியில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள வீடற்ற குடும்பங்கள் தற்காலிகமாக சாலை ஓரங்களில் … Read more

இந்திய-இலங்கை எல்லையில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர்!

Respect To Indian Flag In India Sri Lanka Border : இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் இந்தியா பெயர் பலகை அருகே உள்ள தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்

அமேசான் பார்சலில் நல்ல பாம்பு: உயிரை காப்பாற்றிய டேப் @ பெங்களூரு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள‌ சார்ஜாபூரை சேர்ந்தவர் ரம்யா (பெயர்மாற்றப்பட்டுள்ளது). பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் இவர், கடந்த 16-ம் தேதி அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் எக்ஸ் பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தார். இதற்கான பார்சல் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு வந்தது. அந்த பார்சலை திறந்ததும் அதிலிருந்து நல்ல பாம்பு வெளியே வருவதை கண்டு ரம்யா திடுக்கிட்டார். மேலும் இதனால் அதிர்ச்சிஅடைந்த அவர், உடனடியாக அதனை வீடியோ எடுத்து ‘எக்ஸ்’சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். மேலும் … Read more

ராமாயணத்தை கிண்டல் செய்து நாடகம் நடத்திய மும்பை ஐஐடி மாணவர்கள் 8 பேருக்கு அபராதம்

மும்பை: மும்பையில் உள்ள ஐஐடி.யில் கடந்த மார்ச் 31-ம் தேதி நிகழ்த்துக் கலை விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் சிலர் சேர்ந்து, ‘ராகோவன்’ என்ற பெயரில் நாடகம் நடத்தினர். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் நாடகத்தில் நடித்தனர். ஆனால், இந்து மத நம்பிக்கைகளையும், இந்துக் கடவுள்களையும் இழிவுப்படுத்தும் வகையில் நாடகம் நடத்தியதாக மற்றொரு பிரிவு மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து கடந்த மே 8-ம் தேதி ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி … Read more

பிரதமர் மோடி காஷ்மீர் பயணம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

ஸ்ரீநகர்: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் வந்தடைந்தார். ஸ்ரீநகரில் இன்று நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளார். காஷ்மீரில் சில நாட்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சூழலில் பிரதமர் மோடி,காஷ்மீர் வந்துள்ளார். எனவே. சிறப்பு பாதுகாப்பு குழு, மார்கோஸ் கமாண்டோ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் முழுவதும் அதிநவீன ஆயுதங்களுடன் இவர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 3-வது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு, காஷ்மீருக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் … Read more

நலத் திட்டங்களை பெற உ.பி.யில் குடும்ப அட்டை: முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை சுலபமாக பெற ஏதுவாக, குடும்ப அடையாள அட்டை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும், குடும்ப அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், முகவரி, வருமானம், சாதி உள்ளிட்ட பல முக்கிய … Read more

பிரதமர் மோடியுடன் அமெரிக்க குழு சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் உயர்நிலைக் குழு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசியது. அமெரிக்க நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழு உறுப்பினர் மைக்கேல் மெக்கால் தலைமையிலான 6 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு இந்தியாவில் முகாமிட்டுள்ளது. இந்தக் குழு, இந்தியாவின் இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியது. திபெத் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் தீர்மானம் … Read more

அமேசான் பார்சலில் வந்த நாகப்பாம்பு @ பெங்களூரு

பெங்களூரு: பெங்களூருவின் சர்ஜாபூர் சாலை பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியர், அமேசான் தளத்தில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு வந்த பார்சலில் நாகப்பாம்பு இருந்துள்ளது. அதை கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவர்கள், பின்னர் அதனை வீடியோவாக ரெக்கார்ட் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதள பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்வது மக்களின் வழக்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அதன் காரணமாக … Read more