நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம்
புதுடெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. சத்தீஸ்கரில் போராட்டம்: சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பெகல் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பூபேஷ் பெகல், மத்திய அரசு நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது. பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. மோடி அரசில் அதிகரித்து வரும் ஊழலால் மாணவர்களின் எதிர்காலம் … Read more