விதிகளை மீறி ரூ.100 கோடி கல்வி கட்டணம் வசூல்: ம.பி.யில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு

போபால்: மத்திய பிரதேசம் ஜபல்பூரில் உள்ள 11 தனியார் பள்ளிகள் ரூ.100 கோடி வரை கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது. இந்த தனியார் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் தீபக்சக்சேனா உத்தரவிட்டார். கட்டண விதிகளை மீறி வசூலித்த தொகையை பெற்றோரிடம் 30நாட்களுக்குள் திருப்பி செலுத்தும்படியும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கட்டளையிட்டார். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் வாரிய உறுப்பினர்கள், பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள் என … Read more

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளின் குடும்பத்தினருக்கு அரசு பணி கிடையாது: அமித் ஷா திட்டவட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: காஷ்மீர் மக்களில் எவரேனும் தீவிரவாத அமைப்புகளில் இணைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கப்படமாட்டாது என்று நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். ஒருவேளை தங்களது உறவினர் இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குடும்பத்தினர் தானாக முன்வந்து அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டு துப்பு கொடுத்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். ஏற்கெனவே எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை எதிர்த்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதால் இந்த முடிவு … Read more

“பிரதமர் மோடிக்கு ராகுல் ஒருபோதும் ஈடாக முடியாது” – ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சேஷாத்ரி சாரி பேட்டி

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி ஒருபோதும் ஈடாக முடியாது என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சேஷாத்ரி சாரி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ‘ஆர்கனைஸர்’ ஆங்கில வார இதழின் முன்னாள் ஆசிரியரான இவர், புனே பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியராகவும் உள்ளார். மும்பை பல்கலைக்கழக வேந்தரின் பிரதிநிதியாகவும் உள்ள இவர் மக்களவைத் தேர்தலில் பாஜக மீதான புகார்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’ கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு: நானூறுக்கும் அதிகமான தொகுதிகளை பெறுவோம் என நம்பிக்கை வைத்த … Read more

மீண்டும் ஊழல் செய்யவே இண்டியா கூட்டணி வாய்ப்பு கேட்கிறது: மோடி குற்றச்சாட்டு

தும்கா(ஜார்க்கண்ட்): மீண்டும் ஊழல் செய்யவே இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி வாய்ப்பு கேட்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். ஜார்க்கண்ட்டின் தும்கா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “கடந்த 2014ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது நீங்கள் என்னை ஆசீர்வதித்தீர்கள். நான் பிரதமரானேன். அப்போது காங்கிரஸின் தவறான ஆட்சியால் நாடு சோர்ந்து போயிருந்தது. ஒவ்வொரு நாளும் ஊழல்கள் நடந்தன. ஏழைகளின் பெயரில் பணத்தைக் கொள்ளையடிப்பதில் காங்கிரஸ் கட்சி இடைவிடாது ஈடுபட்டது. அவற்றையெல்லாம் நான் … Read more

ரீமல் புயல் பாதிப்பு: வடகிழக்கில் கனமழை, நிலச்சரிவில் 31 பேர் உயிரிழப்பு

ஐஸ்வால்: மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரீமல் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரீமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் இன்று (மே 28) காலை பாறைகள் சரிந்து … Read more

“தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா?” – அமித் ஷா

ஜாஜ்பூர்(ஒடிசா): ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா என அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் பொக்கிஷ அறையின் சாவி குறித்த விசாரணை அறிக்கையை நாங்கள் பகிரங்கப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார், ஒடிசாவின் ஜாஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, … Read more

50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு இண்டியா கூட்டணி அரசு முடிவு கட்டும்: ராகுல் காந்தி

ருத்ராபூர் (உ.பி): கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு இண்டியா கூட்டணி அரசு முடிவு கட்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் ருத்ராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர். ஒரு பக்கம் இண்டியா கூட்டணியும் அரசியல் சாசனமும் இருக்கிறது. மற்றொரு பக்கத்தில் அரசியல் சாசனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் சாசனத்தை ஒழிப்போம் என்று பாஜக … Read more

மிசோரம் கனமழை: கல்குவாரி பாறைகள் சரிந்து பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

ஐஸ்வால்: மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரீமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்நிலையில், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் … Read more

கேரள கனமழை: கொச்சியில் மேகவெடிப்பு – ஒன்றரை மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் முன்னதாக மே 31=ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், 2024-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து … Read more

மேலாளர் கொலை வழக்கு: குர்மீத் ராம் ரஹீம் சிங்கை விடுவித்தது ஹரியாணா உயர் நீதிமன்றம்

ஹரியாணா: ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கொலை குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்தது பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம். முன்னதாக, 2021ம் ஆண்டில், இந்த கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உட்பட 5 பேரை குற்றவாளிகள் என … Read more