கர்நாடகாவுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டம்: முதல்வர் சித்தராமையா பங்கேற்பு

புதுடெல்லி: கர்நாடகாவுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு தனது நிதித் தொகுப்பில் இருந்து கர்நாடகாவுக்கு உரிய பங்கினை ஒதுக்க மறுப்பதாக கர்நாடக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு கர்நாடகாவுக்கு உரிய நிதியை உடனடியாக ஒதுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. … Read more

திவாலான நிறுவனங்களில் முதலீடு செய்து விரிவுப்படுத்தும் அம்பானி & அதானியின் சூப்பர் யுத்திகள்!

Investing In Bankrupt Companies: முதலீடு செய்யும் பணத்திற்கு விரைவில் லாபம் கிடைக்க என்ன செய்யலாம்? அம்பானி மற்றும் அதானியின் வெற்றி ரகசியங்களில் ஒன்று…

“சிறப்பாக வேலை செய்பவர்கள் எப்போதும் மதிக்கப்படுவதில்லை” – மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி

புதுடெல்லி: “எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சிறப்பாக செயல்படுபவர்கள் அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவது இல்லை. தடுமாறியவர்கள் தண்டிக்கப்படுவதில்லை” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனது பேச்சில் யாரையும் அவர் குறிப்பிடவில்லை. மராத்திய செய்தி நிறுவனம் ஒன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறந்த செயல்பாடுகளுக்காக விருது வழங்கும் விழாவை டெல்லியில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், … Read more

காங்கிரஸ் கட்சியின் கொள்கைதான் என்ன?- கேள்வி எழுப்பிய பிரணாப் முகர்ஜியின் மகள்

புதுடெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி சமூக வலைதளப் பதிவில் காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார். அதில் அவர், “காங்கிரஸ் கட்சியோ, காந்தி – நேரு குடும்பமோ என் தந்தைக்கு எந்த ஒரு பதவியையும் தானமாக வழங்கவில்லை. அவர் வகித்த பதவிகளுக்கு அவர் தகுதியானவராக இருந்ததால் அவற்றைப் பெற்றார். காந்தி குடும்பத்தினர் என்ன நிலச்சுவாந்தர்களா? அவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக மரியாதை கொடுத்து சேவை செய்ய வேண்டுமா? காங்கிரஸ் கட்சியின் இப்போதைய கொள்கை தான் … Read more

வாக்காளர் பட்டியலில் 1.66 கோடி பெயர் நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் உள்ள ஒரேநபர்களின் பெயர்களைக் கண்டுபிடித்து நீக்க வேண்டும் என்று சம்விதான் பச்சாவோ டிரஸ்ட் என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு (பிஐஎல்) தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் … Read more

கோவாவில் 1,330 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்: இந்திய எரிசக்தி கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கோவா: கோவாவில் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அத்துடன், இந்திய எரிசக்தி கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா தொடர்பான ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த அடிக்கல்நாட்டப்பட்டுள்ளது.இந்த திட்டங்கள் கோவாவின் வளர்ச்சிக்கு பெரிய உந்துதலை கொடுக்கும். மேலும், தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகம், தேசிய நீர் விளையாட்டு, ஒருங்கிணைந்த … Read more

திருமணமாகாத பெண் வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: திருமணமாகாத பெண் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமாகாத பெண் (44) பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் வழக்கறிஞர் ஷ்யாமல் குமார் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற, 35 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்திய பெண் விரும்பினால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் … Read more

மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் உயிரிழப்பு

போபால்: மத்திய பிரதேசத்தின் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் 11 பேர் உயிரிழந்தனர், 200 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராகர் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், ஆலை முழுவதும் தீப்பற்றியது. விண்ணை முட்டும் அளவுக்கு ராட்சத புகை … Read more

ஐசிஐசிஐ – வீடியோகான் கடன் வழக்கில் சந்தா கோச்சாரை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம்: மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை: வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வழக்கில் சந்தா கோச்சாரை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என மும்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மூலம் தான் கைது செய்யப்பட்டதைக் கேள்விக்குட்படுத்தி ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சந்தா கோச்சார் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாயக்கிழமை) … Read more

அஜித் பவார் தரப்பே அசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி: தேர்தல் ஆணையம்

மும்பை: அஜித் பவார் தரப்பே அசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சரத் பவார் மற்றும் அஜித் பவார் தரப்புக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், பாஜகவோடு கூட்டணி அமைத்து அம்மாநில … Read more