“எனக்கும் தேநீருக்குமான உறவு ஆழமானது” – பிரதமர் மோடி பேச்சு @ உத்தரப் பிரதேசம்

மிர்சாபூர்(உத்தரப் பிரதேசம்): “எனது சிறுவயதில் பாத்திரம் கழுவியும் தேநீர் பரிமாறியுமே வளர்ந்தேன். எனக்கும் தேநீருக்குமானஉறவு மிகவும் ஆழமானது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சமாஜ்வாதி கட்சிக்காக யாரும் தங்களின் வாக்குகளை வீணடிக்க விரும்ப மாட்டார்கள். வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பவர்களுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். யார் ஆட்சியமைக்க இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சாமானியர்கள் வாக்களிப்பார்கள். இண்டியா கூட்டணியினர் … Read more

ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து: குஜராத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை 

காந்திநகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தானாக விசாரிக்க முன்வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நாளை (மே 27) உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். அப்போது மாநிலங்களில் உள்ள விளையாட்டு மையங்கள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குஜராத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார்களுக்கான விளையாட்டு பொழுது … Read more

58 மக்களவை தொகுதிகளுக்கான 6-ம் கட்ட தேர்தலில் 59% வாக்குப்பதிவு

புதுடெல்லி: ஆறாம் கட்டமாக 58 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 58.82 சதவீத வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இதன்படி 428 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து 6-ம் கட்டமாக 7 மாநிலங்கள், ஒரு யூனியன் … Read more

ஓட்டு வங்கிக்காக பணியாற்றுகிறது இண்டியா கூட்டணி: பிரதமர் மோடி

பிஹரார் மாநிலத்தின் பாடலிபுத்ரா மக்கள்வை தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பாஜக எம்.பி ராம் கிர்பல் யாதவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சமூக நீதி போராட்டத்துக்கான புதிய வழியை காட்டிய மாநிலம் பிஹார். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரின் உரிமைகளை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கும் இண்டியா கூட்டணியின் திட்டத்தை முறியடிப்பேன் என நான் இங்கிருந்து கூற விரும்புகிறேன். … Read more

குஜராத் – ராஜ்கோட் தீ விபத்து பலி 33 ஆக அதிகரிப்பு: நடந்தது என்ன?

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்னிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதில், 9 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் ஆவர். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார்களுக்கான விளையாட்டு பொழுது போக்கு மையம் உள்ளது. கோடை விடுமுறை என்பதால் அந்த மையத்தில் நேற்று ஏராளமான சிறுவர், சிறுமியர் குவிந்திருந்தனர். மாலையில் விளையாட்டு மையத்தின் தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக … Read more

டெல்லியில் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 7 பச்சிளங் குழந்தைகள் பலி

புதுடெல்லி: டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை பின்னிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 5 குழந்தைகள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து காவல் துறை தரப்பில் கூறும்போது: “இரவு 11.30 மணியளவில் எங்களுக்கு விவேக் விஹார் பகுதியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் தகவல் … Read more

வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 500 கிலோ மாம்பழங்களை கொண்டு மணல் சிற்பம்

பூரி: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. வரும் ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்டவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 500 கிலோ மாம்பழங்களைக் கொண்டு மணற் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ‘உங்கள் வாக்கு உங்கள் குரல்’ என்று எழுதப்பட்டுள்ளது. இது … Read more

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புக்காக ஆந்திராவில் மாவட்டம்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரி நியமனம்

விஜயவாடா: ஆந்திராவில் தேர்தலின் போதும், தேர்தலுக்கு பின்னரும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் ஆந்திராவுக்கு 25 கம்பெனிதுணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஜூன் 19-ம் தேதி வரைஅவர்கள் பணியில் அமர்த்தப்பட் டுள்ளனர். இந்நிலையில், வரும் ஜூன்4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போது, வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவாறு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு துணை எஸ்பி, டிஎஸ்பி போன்ற சிறப்பு போலீஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா நேற்று கூறினார். … Read more

பணியாளர் தேர்வாணையத்துக்கு பூட்டு போட்ட காங்கிரஸ் அரசு: பிரதமர் மோடி விமர்சனம்

இமாச்சலபிரதேசத்தின் சிம்லா தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ்காஷ்யப்புக்கு ஆதரவாக சிர்மார் மாவட்டம் நஹான் என்ற இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: இமாச்சலபிரதேசத்தில் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மாநில பணியாளர் தேர்வாணையத்துக்கு மோசடி காங்கிரஸ் அரசு பூட்டு போட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளிடம் வகுப்புவாதம், ஜாதிவாதம் மற்றும் குடும்ப அரசியல் மட்டுமே பொது அம்சமாக … Read more

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.82% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 10.82% வாக்குப்பதிவாகியுள்ளது. உத்தர பிரதேசம்: 12.33% ஹரியாணா: 8.31% மேற்கு வங்கம் 16.64% பிஹார்: 9.66% டெல்லி: 8.94% ஒடிசா: 7.43% ஜார்க்கண்ட்: 11.74% காஷ்மீர்: 8.89% வாக்களித்த முக்கியப் பிரமுகர்கள்: தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் … Read more