ரேபரேலி எம்.பி.யாக பதவியேற்ற ராகுல் காந்தி: தமிழக எம்.பி.க்கள் தமிழில் உறுதிமொழி ஏற்பு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திமுக மூத்த தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் மக்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் தமிழில் உறுதிமொழி கூறி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டனர். 18-வது மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்து மோடி அரசு மீண்டும் பதவியேற்றதை அடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) கூடியது. நேற்றைய தினம் பிரதமர் மோடி உள்பட 280 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். … Read more

'ஸ்டாலின், உதயநிதி வாழ்க…' பதவியேற்பில் திமுக எம்பிகள் கோஷம் – முழக்கமிடாத இந்த 3 பேர்!

Tamil Nadu MPs Oath Taking Ceremony: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் இன்று பதவியேற்ற நிலையில், அதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இங்கு காணலாம்.

கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை தடை செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, திகார் சிறையில் இருந்து கேஜ்ரிவால் வெளியே வருவார் … Read more

கனமழையால் ஒழுகும் அயோத்தி ராமர் கோயிலின் கருவறை: அர்ச்சகர்கள் புகார்

அயோத்தி: கனமழை காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலின் கருவறையின் மேற்கூரையின் மழைநீர் ஒழுகுவதாக கோயிலின் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கோயிலின் வடிகால் வசதியும் முறையாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக பகவான் ராமருக்கு அபிஷேகம் செய்வது மிகுந்த சிரமமான காரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸும் இதனை உறுதி செய்துள்ளார். மழை பெய்த இரவுக்குப் பிறகு அர்ச்சகர்கள் கோயிலைத் திறந்த போது மழைநீர் … Read more

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா, கே.சுரேஷ் போட்டி

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு முதல்முறையாக போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கே.சுரேஷூம் போட்டியிடுகின்றனர். 18-வது மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்து மோடி அரசு மீண்டும் பதவியேற்றதை அடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) கூடியது. நேற்றைய தினம் பிரதமர் மோடி உள்பட 280 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். … Read more

“எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கினால் மட்டுமே அரசுக்கு ஆதரவு” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம்.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சபாநாயகர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்தால் தனிப்பட்ட முறையில் பாஜக சபாநாயகரை தேர்வு செய்தது. ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் … Read more

ஓம் பிர்லா vs கொடிக்குன்னில் சுரேஷ் – சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போடும் பிளான் என்ன?

Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

ரூ.1 லட்சம் பரிவர்த்தனைக்கு  ரூ.1,000 கமிஷன் பெறுவதற்காக வங்கி கணக்கை வாடகைக்கு விடும் இளைஞர்கள் @ கோவா

பனாஜி: வேலை இல்லாத பல இளை ஞர்கள் தங்களது வங்கிக் கணக் குகளை இணைய மோசடி பேர் வழிகளுக்கு வாடகைக்கு கொடுத்து கூடுதல் பணம் சம்பாதித்து வருவது கோவா போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கிடைத்த தகவல்கள் குறித்து கோவா போலீஸார் பகிர்ந்து கொண்டதாவது: சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை குறிவைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி இணைய மோசடிக் கும்பல் அவர்களை ஏமாற்றி வருகிறது. அவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக … Read more

தன்பாலின உறவு வழக்கில் கைது செய்யப்பட்ட சூர‌ஜ் ரேவண்ணாவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. அவரது வீட்டு பணிப்பெண், கட்சியின் பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் அளித்த புகாரில், பிரஜ்வல் ரேவண்ணா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணாவும் (66) வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் ஜாமீனில் வெளியே … Read more

வங்கதேசத்துடன் தண்ணீர் பங்கீடு ஒப்பந்தம்; மே.வங்க அரசின் கருத்தை கேட்காதது ஏன்? – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

கொல்கத்தா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, 1996-ல் மேற்கொள்ளப்பட்ட கங்கை நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது மற்றும் தீஸ்தா நதியை பாதுகாப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “தீஸ்தா நதியை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்க தொழில்நுட்ப நிபுணர் குழு வங்கதேசம் செல்லும்” … Read more