ரேபரேலி எம்.பி.யாக பதவியேற்ற ராகுல் காந்தி: தமிழக எம்.பி.க்கள் தமிழில் உறுதிமொழி ஏற்பு
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திமுக மூத்த தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் மக்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் தமிழில் உறுதிமொழி கூறி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டனர். 18-வது மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்து மோடி அரசு மீண்டும் பதவியேற்றதை அடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) கூடியது. நேற்றைய தினம் பிரதமர் மோடி உள்பட 280 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். … Read more